அக்னி நட்சத்திரம்
☀ அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3வது பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.
☀ அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன. அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லது. பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.
அக்னி நட்சத்திர வரலாறு :
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.
அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. 'அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்" என வருணன் கூறினான் இதை அறிந்த அக்னிதேவன் கிருஷ்ணனிடம் ஓடி ,"நான் காண்டவ வனத்தை அழியாமல் இருக்க வருணனபகவான் மழை பொழிகிறான் என்னை காப்பாற்றுங்கள் " என வேண்டினான். கிருஷ்ண பகவான் அர்ஜுனை அழைத்து அம்புகளால் வானத்தில் சரகூடு கட்டி வானத்தை மறைத்தான்,பிறகு அக்னி தேவன் தனது ஏழு நாக்கினால் வனத்தை எறிக்க முற்பட்டான், கிருஷ்ணன் உன் பசியை 21 நாட்களில் தீர்த்துக்கொள் என கட்டளையிட்டார்,அக்னி தேவன் காண்டவ வானத்தை விழுங்கி பசி தணிந்த அந்த 21 நாட்களே அக்னி நட்சத்திரம் ஆகும் ,நாளை சித்திரை 21முதல் வைகாசி 15 வரை அக்னி நட்சத்திரமாகும்,அக்னியிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் சிவன்,முருகன் ,மீனாட்சி கோயிலுக்கு சென்று வருவது நலமாகும்🙏🏼
No comments:
Post a Comment