தச வாயுக்கள் (10 வாயுக்கள்):ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து முதுமை வரை அவற்றின் வளர்ச்சி அனைத்தும்கருவிலே நிர்ணயிக்கப்படுகிறது. முதுமையில் நோய் உண்டாவதற்கும் கருவின்பாதிப்புதான் முக்கிய காரணமாகிறது. இதனால் தாயின்ஆரோக்கியமே குழந்தையின்ஆரோக்கியமாகும். தாயின் மனநிலையையும், உடல் நிலையையும் பொறுத்தேகுழந்தையின் நலம் நன்றாக இருக்குமென்று மருத்துவ உலகம் கூறுகிறது.முதலில் கருவுற்ற பெண்ணின் கருப்பை வலுவான நிலையில் இருந்தால்தான் குழந்தை சீராக வளரும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மையாகும்.கருவுற்ற பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும், எத்தகைய முறைகளைகடைப்பிடிக்க வேண்டும்என்பதையும், கருவை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்என்பதையும் சித்தர்கள் தெளிவாக வரையறுத்துள்ளனர். இதுபோல் ஒரு பெண்கருவுறும் முன் தன் உடலையும், மனதையும் எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்என்றும்கூறியுள்ளனர்.சித்தர்களின் கூற்றுப்படியும், வாழ்க்கை தத்துவத்தின்படியும் கணவன் மனைவிஇருவரும் எந்நிலையில் உறவு கொள்ள வேண்டும், எவ்வாறு உடலைப் பராமரித்துபாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.கணவனும் மனைவியும் உறவு கொள்ளும்முன் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கவேண்டும்.சிறுநீரையும், மலத்தையும் அடக்கி வைத்துக் கொண்டு உறவுகொள்வதால் உண்டாகும் கரு, பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். குறையுள்ளகுழந்தை பிறப்பதற்கான பல காரணங்களில் இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.பொதுவாக ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் இருந்தால் உடல் அதிகம் பாதித்து நோய்கள் அனைத்தும் தொற்றிக்கொள்ளமுக்கிய காரணமாகிறது.இதைத்தான் அன்றே சித்தர்கள்,ஓதுகின்ற மலக்கட்டை ஒழிய வைத்தால்உடலிலுள்ள உபாதையெல்லாம் ஒடுங்கிப் போகும்தாது உற்ற சிறுநீரை தெளியவைத்தால்சடத்திலுள்ள வேகமெல்லாம் தணிந்து போகும்இந்த பாடலிலிருந்து மலச்சிக்கல்தான்அனைத்து நோய்களுக்கும் ஆரம்பம் என்பது தெரியவரும்.மலச்சிக்கல் இருந்தால் மனம் விகாரமடைந்து மனச் சிக்கலை உண்டாக்கிவிடும்.இதைத்தான் சித்தர்கள் மலச்சிக்கலும், மனச்சிக்கலும் ஆதி நோய்கள் என்றனர்.மனச்சிக்கல், மலச்சிக்கல் இருக்கும்போது கணவனும் மனைவியும் உறவுகொண்டால் குறையுள்ள குழந்தை உருவாகும்.பாலவாதம் என்ற இளம்பிள்ளை வாதம், பார்வைக் குறைபாடு, காது கேளாமை, கை கால்சூம்பி காணப்படுதல் மற்றும் இன்னும் பல நோய்களை உண்டாக்கும்.இது முதுமையில் அதிகம் பாதிப்புகளை உண்டாக்கும்.மனச்சிக்கலையும், மலச்சிக்கலையும்போக்கி ஒரு பெண் தாய்மையடையும் போது உருவாகும் கருவானது ஆரோக்கிய குழந்தையாக மாறும்.தாய்மை அடைந்த பின்பும் அந்தப் பெண்ணுக்கு மனச்சிக்கல், மலச்சிக்கல்இருக்கக்கூடாது. இதனால்தான் கருவுற்ற பெண்ணை மகிழ்ச்சியாகவும்,சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள பல சடங்குகளை நம் முன்னோர்கள்வைத்திருப்பதை அறிந்தோம்.கருவுற்ற தாய்க்கு மேல்கண்ட இரண்டு சிக்கல்கள் இருந்தால் உடலையும்,கருவையும் பாதுகாக்கும் தச வாயுக்கள் (10 வாயுக்கள்) சீற்றமடைந்துசீர்கெட்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், தனஞ்செயன், கிரிகரன், தேவதத்தன்.உடலை சீராக பராமரித்து பாதுகாப்பதும், அதுபோல் கருவுற்ற பெண்ணுக்கு இந்ததசவாயுக்களின் செயல்பாடு நன்கு இருந்தால்தான் கருவின் வளர்ச்சியும் சீராகஇருக்கும்.தாய்க்கு தசவாயுக்களின் செயல்பாடு சீராக அமையாமல் சீற்றம் மிகுந்துகாணப்பட்டால் அது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்க ஆரம்பிக்கும்.இதனால் பாலவாதம் என்னும் இளம்பிள்ளைவாதம்கொண்ட குழந்தை பிறக்கும்.இதைத்தான் அகத்தியர்சொல்லிய பாலர்வாதம் தொடர்ந்திடும் விவரம்தான்மெல்லிய கருவில் வந்து விரும்பிய தசவாயுக்கள்தல்லிய விமலம்தானும் நாரவும் சேருமாகில்தல்லிய குணங்கள் விட்டு தளர்ந்திடும் நரம்புதானேபத்து விதமான வாயுக்கள் நன்கு சீராக செயல்பட்டால்தான் உடலும், மனமும்புத்துணர்வுடன் காணப்படும்.by.pp.
No comments:
Post a Comment