Tuesday, April 11, 2017

ஓர் பிரம்மஞான வகுப்பு... அருட்தந்தை விளக்கம் அளிக்கிறார்.

ஓர் பிரம்மஞான வகுப்பு... அருட்தந்தை விளக்கம் அளிக்கிறார்.
.
“எல்லாமே பிரம்மம்... எனவே உயிர்க்கொலை கூடாது..”
.
இதை கேட்ட அன்பர் ஒருவருக்கு ஒரு சந்தேகம்...
“இந்த உலகத்தில் எல்லாமே பிரம்மம்... ஆகவே எதையும் கொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள்..
இப்படி நினைப்பதில் நிறைய நடைமுறை சிக்கல் இருக்கிறது..!”
.

.
எப்படி ..?
.
.
“எடுத்துக்காட்டாக, என் மனைவி உறங்கிக்கொண்டு இருக்கிறாள்... அவளருகில் ஒரு தேள் ஊர்ந்து போகிறது., நான் அதை பார்த்துவிடுகிறேன்., என்ன செய்வது?... மனைவியை எழுப்பினால் அசைவாள்.. அது தேள்மீது படும்... தேள் கொட்டிவிடும். தேளை அடிக்கலாம் என்றால் தேளும் பிரம்மம்.. உயிக்கொலை கூடாது என்கிற தத்துவம் இடிக்கிறது..
.
இப்ப நான் என்ன செய்வது சுவாமிஜி?? (அவையில் சிரிப்பலை)
.
.
மகரிஷி தன் வழக்கமான குறும்புச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்:
.
.
“நல்ல கேள்வி.... தேளும் பிரம்மம்... மனைவியும் பிரம்மம்.... என்ன செய்வது?.. ஒரு நீண்ட குச்சியை எடுத்துத் தேளை அப்புறப்படுத்துங்கள். எச்சரிக்கையாக ஒரு கோணிப்பையை எடுத்து அத்தேளின் மீது அழுத்திப்பிடியுங்கள். பத்திரமாக வெளியே கொண்டுபோய் போடுங்கள்....(சிறிது நேரம் மௌனம்... பிறகு சொல்கிறார்)
.
.
ஆனால் ஜாக்கிரதை... தேள் என்ற பிரம்மத்தைக் கோணியில் பிடித்து வெளியே வீசுவதற்கு பதிலாக..
மறந்துபோய் மனைவி என்ற பிரம்மத்தை கோணியில் பிடித்து வெளியே வீசிவிடாதீர்கள்! “
.
.
(அரங்கத்தில் மீண்டும் சிரிப்பலை. சிரிப்பலை அதிக நேரம் தொடர்கிறது)
.
.
-”அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு” என்ற நூலிலிருந்து
.
.
வாழ்க வையகம் ......... வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment