Sunday, April 16, 2017

தினமும்_3நிமிடம்_தோப்புக்கரணம் #உடலை_வலுவாக்கும்

🌸🌿#🌸🌿
🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃
தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும்.
நமது முன்னோர்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

#தோப்புக்கரணம்_போடும்போது_காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காது
மடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்
இருக்கின்றன.🍁🍃
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்
போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்
கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.

#தோப்புக்கரணம்_போட_விரும்பும்_ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும்.🍁🍃

#பின்னர்_பயிற்சியானவுடன்_கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.

#வலது_கை 🍁🍃
விரல்களால் இடது காது மடல்களையும்,
இடது கை விரல்களால் வலது காது
மடல்களையும் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -
சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க
இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.🍁🍃

#மூன்று_நிமிடங்கள்_தோப்புக்கரணத்தைத்
தொடர்ந்து செய்தால் வேறு
எந்த உடற்பயிற்சியும் செய்ய
வேண்டியதில்லை.🌸 நன்றி .படித்ததில் பிடித்தது. முஜிப்:CDM

No comments:

Post a Comment