Sunday, April 30, 2017

மன அழுத்தம்(Stress) என்றால் என்ன?

மன அழுத்தம் என்பது வாழ்வில் மிகச் சாதாரணமானது. பெரும்பாலான மக்கள் சில சமயங்களில் மன அழுத்தத்தை உணர்வார்கள். பல்வேறு வழிகளில் மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது. பணி, பள்ளி, குடும்பம், உறவுகள், உடல்நலன் மற்றம் பல்வேறு வாழ்க்கை செயற்பாடுகளில் மன அழுத்தம் தோன்றுவதை நாம் உணரலாம்.
குடும்பச் சிக்கல்கள்
மனைவி, குடும்ப உறுப்பினர், வாழ்க்கை துணைவர் இவர்களின் உறவுச் சிக்கல்களால் சாதாரணமாக மனஅழுத்தம் ஏற்படும். மணமுடித்தல், புது மணைபுகுதல், நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினரைப் பேணுதல், குழந்தை பேற பெறுதல் முதலானவை மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.
பணிச் வேலைச் சிக்கல்

குறைவான நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நேரிடலாம். இதனாலும் மன அழுத்தம் ஏற்படும். உங்கள் பணியையோ அல்லது உடன் பணி புரிபவர்களை விரும்ப முடியாமற் போவதும் மன அழுத்தம் ஏற்படுத்தும், புது பணியைத் தொடங்குவதும் செலவினங்களை குறைக்க வேண்டி வருவதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

உடற்சிக்கல்கள்

அடிபடுதல், உடற்பிணி உங்களைக் கவலைக்குள் ஆழ்த்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தும், சரியாக உறங்க முடியாமை, உங்கள் மன ஒருமைப்பாட்டைப் பாதித்து சாதாரண சிக்கல்களைக் கூட சந்திக்க முடியாமற் செய்யும். இதுவும் மிகுந்த மன அழுத்தத்தைத் தரும்.

நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தமும்
நல்ல மன அழுத்தம் உங்களை கடினமாக உழைக்கவும், செயல்களைச் செம்மையாகச் செய்யவும் வழிவகுக்கும் நம் ஒவ்வொருக்கும் சிறப்பாகப் பணிபுரிய சிறிதளவு மன அழுத்தம் தேவை என்றாலும் அது குறைந்த அளவில் நம் கட்டு பாட்டுக்குள் இருக்க வேண்டும். தீய மன அபத்தம் அல்லது அளவுக்கதிகமான மன அபத்தம் ஒரு மனிதனிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உடலில் அல்லது உணர்ச்சியின் அறிகுறிகளாக வெளிபடும். இதனால் மனிதனை அளவுக்கதிகமாக மது பானங்களைக் குடிக்கவும், உலகை மறக்க வைக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகவும் தூண்டும்,

தீவிர மன அழுத்ததால் உடலில் நோய் சமாளிப்பு ஆற்றல் அழிந்து போகும். தீவிர இதயநோய், உயர் இரத்த அழுத்தம் முதலான உடல் நலக் குறைகளும் சோர்வு, ஏக்கம், கவலை போன்ற மனச் சிக்கல்களும் அம்மனிதனை வந்தடையும். மன அழுத்தத்தைக் கட்டுப் படுத்திக் கொகள்ள பழுழவது உங்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கும்

மன அழுத்தத்தின் அறிகுறிகளும் அடையாளங்களும்

1. உடல் அறிகுறிகள்:

அடிக்கடி தலைவலி வருதல்
மயக்கம், தலைச்சுற்றல்
காதில் தொடர்ந்து ரீங்கார ஒலி கேட்டல்
உடல் நடுக்கம்
மார்பில் எரிச்சல், உலைச்சல்
பேதியாதல் அல்லது மலச்சிக்கல்.
2. மனம் அல்லது உணர்ச்சி அறிகுறிகள்:

உறக்கம் வராமை
கவலை அல்லது அச்சம்
சோர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை
‘ஓ’ வென அழ வேண்டுமென்ற உணர்வு
முன்கோபம் எடுக்க முடியாமை
நிற்னையம் எடுக்க முடியாமை
சிக்கல்களுக்கிடையே சிந்திக்க முடியாமை
சிக்கல்களை தீர்க்க இயலாமை
மன அழுத்தம் சிக்கல்களைத் தூண்டும்

1. மனக் கவலைக் கோளாறுகள்

உயர் இரத்த அழுத்தம்
இதயவலி
செரிப்பு கடற்புண் நோய்
தோல் வெடிப்பு, தோற் கட்டிகள்
மன உலைவு, தலைவலி, கடுமையான ஒற்றைத் தலைவலி
குடல் எரிச்சல்
2. சிறிய மனநிலை நோய்க் கோளாறுகள்:-

கவலையில் மூழ்கல்
மனநிலை தடுமாற்றம்
தன் உடல்நலன் பற்றி அளவுக்கதிகமாக கவலையுறுதல்
உணர்ச்சியில், சமூக வாழ்வில் தடுமாறுதல்
மன அழுத்தத்தை அடக்கியாள சில வழி முறைகள்
வாழ்வில் மன அபத்தம் ஒரு பகுதியாதலால் அதை நம்மால் முற்றிலும் விலக்கிவிட முடியாது. எனினும் அதை நாம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, அடக்கியாண்டால் நாம் மனம் மற்றம் உடல் நலத்துடன் இருப்போம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

1. உங்கள் விழிப்புணர்வின் அளவை அதிகரித்தல்

உங்கள் உடல் உணரும் மன அழுத்தத்தின் அளவையும், மன அபத்தத்தைக் கொணரும் நிகழ்வுகளின் தன்மையையும் விழிப்புடன் கவனியுங்கள். நாள் முழுதுமான உங்கள் மன அழுத்தத்தை ஆராய்ந்து பாருங்கள். அச்சமயங்களில் நீங்கள் உணரும் மன அபத்த அளவை நீங்களே பத்துப் புள்ளி அட்டவணையில் பதிவு செய்யுங்கள். இதைச் செய்ய உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் தசைகள் இறுகுகின்றனவா? இதயம் சரிவர துடிக்கிறதா? உங்கள் கைகளில் வேர்த்து கொட்டுகிறதா? குளிர்ந்து போகிறதா? உங்களால் வழக்கம்போல மனதை ஒருமுகப் படுத்த இயலுகிறதா? என்று பாருங்கள்.

உங்கள் மன அழுத்தத்தின் அளவை சரிவர கணக்கிடுவதில் தேர்ச்சி பெற்ற பின்னர் உங்கள் மன அழுத்தத்தைத் தூண்டும் மக்கள், பொருட்கள், நிகழ்வுகள் பற்றி வர்ந்தாராயுங்கள். இவற்றையும் பத்துப்புள்ளி அட்டவணையில் நீங்களே பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்களின் நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உங்கள் பணி உங்கள் மன அழுத்தத்தின் அளவை தீடீரென உயர்துவன நீங்கள் உணரக்கூடும். அச்சூழ்நிலையில் அவ்வாறு உங்கள் மன அழுத்ததினை தூண்டுபவர்களை தவிர்ப்பதற்கும், அல்லது அவர்களோடு மிக இயல்பாக நடந்து கொகள்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.

2. உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுதல்:-

i. அமைதியுடன் இருக்க பழகுதல்:-

உடலும் மனமும் ஓய்வு கொள்ளவும், புத்துணர்வைப் பெறவும் இடையிடையே நாம் ஓய்வு கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. இசையைக் கேட்பது, விளையாடுவது, நடப்பது, அதிக நேரம் குளிப்பது முதலான

உங்களுக்கு விருப்பமான, நன்கு அனுபவிக்கும் செயல்களில் ஈடுபட நேரத்தை ஒதுக்குங்கள். மன உளைவு, தளர்ச்சியடையும் நேரங்களில் வழக்கமான செயற்பாடுகளிலிருந்து நீங்கி புது செயல்களில் ஈடுபடுவது உங்களுக்கு உதவும். சிலரோ சிறு இடைவெளியை எடுப்பது பயனுள்ளது என்று கருத, வேறு சிலர் தொடர்ந்து நீண்ட விடுப்பை எடுத்துக் கொள்வது பயனுள்ளது என்று நினைக்கின்றனர். ஓய்வான பொழுதுபோக்கு, ஆழ்ந்த சுவாசப் பயிற்சி உங்களுக்கப் பயனளிக்கக் கூடும். படிப்படியாக உஉடற்தசைக்கு ஓய்வு தருதல்,

தியானம், யோகாசனம், உடற்பயிற்சிகள், உடலை வருடி விடுதல், காட்சி உருவகங்கள் முதலான பலவகை பொழுது போக்கு நுட்பங்கள் உள்ளன. அங்காடிகளில் இதுபோன்ற ஓய்வுப் பொழுது போக்குகளுக்கான ஒலி நாடாக்கள் கிடைக்கும். அவற்றை வாங்கிப் பயனடையுங்கள்.

ii. உடஉற்பயிற்சிகள்:-

உடற்பயிற்சிகள் உங்கள் மன அழுத்ததினைக் குறைக்கவும், சுயமதிப்பை வளர்க்கவும் உதவும். அவை உங்கள் நோய் தடுப்பாற்றலை முறையாகச் சீராக்குவதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் முக்கிய பங்காற்றும். நல்ல உடல் நலன், அதிக ஆற்றல், உறக்கத்தை அதிகரித்தல், நல்ல மன ஒருமைப்பாடு, இதயத்தடை (பிமீணீக்ஷீt ணீttணீநீளீ ) ஏற்படும் அபாயத்தை குறைத்தல், மனமகிழ்ச்சியுணர்வு அதிகரித்தல், தன் மதிப்பு உயர்தல் முதலியவற்றோடு உடற் பயிற்சிக்குத் தொடர்புள்ளது. உடற் பயிற்சி கடுமையாக இருக்கத் தேவையில்லை. கடுமையான மெது ஓட்டத்தைப் போலவே நாள் தோறும் 20-30 நிமிடங்கள் வேகமாக நடப்பது பயனுள்ளது. அது மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறே நல்ல சீரான உணவு உண்பதும் உங்கள் உடல் நலனைப் பேணும். அளவுக்கதிகமாக உண்ணுவதும் அதிக அளவில் மதுபானங்களை அருந்துவதும், புகை பிடிப்பதும் உங்கள் உடல் அழுத்தத்தை அதிகரிக்கும்.

iii. எல்லைகளை வகுத்துக் கொள்ளல்
நாம் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அளவுக்கதிகமாக செய்ய நேரிடும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழ்வில் அடைய வேண்டியவற்றை நாம் அளவுக்கதிகமாக எதிர் பார்க்கிறோம். துரதிருஷ்டவசமாக இதுவே நமது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் முதற் காரணமாகிறது. இது நமது வாழ்வில் எவை உண்மையில் இன்றியமையாதவை, நமது உண்மையான தேவைகள், விருப்பங்களை மதிப்பீடு செய்து பார்ப்பதில் பெரிதும் உதவும்.

எங்கு இயழுமோ அங்கெல்லாம், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நீங்கள் அடைய விரும்பும் வாழ்க்கை மாற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முயல வேண்டும்.
உதாரணமாக நீங்கள் திருமணம் செய்து கொள்வது, ஒரு வீட்டை வாங்குவது, வீட்டைப் புதுப்பிப்பது, குழந்தையைப் பெறுவது, வேற பணியில் சேருவது இவையனைத்தையும் ஒரே ஆண்டில் செய்வத உங்கள் மன அழத்தத்தை அதிகரிக்கும்.

iv. திறமையான கருத்துப் பரிமாற்றம் :-

நாம் உடன்படவும் உதவவும் விரும்புவதால் சில நேரங்களில் கண்டிப்புடன் இருப்பது கடனமே. நாம் பிறர் வேண்டுகோளை மறுக்க இயலாததையும் உணரலாம். இதனால் நாம் திணறலாம். நமது உடன்பாட்டு மனப்பான்மையால் சிக்கல்களில் சிக்கிக் கொள்வதையும் அறிகிறோம். இதன் விளைவாக நாம் கோபத்துக்கும் உதவி செய்ய இயலாமைக்கும் ஆளாவதை உணரலாம். நாம் நம் உடல் நலனை நம் நன்மையைப் பேண விரும்பினால் ‘இல்லை’ என்று கூறப் பழகுவது மிகவும் இன்றியமையாதது.

ஒரு வேண்டுகோளை மறப்பதற்கு கீழ்க்கண்டவை உதவும்.

வேண்டுகோள் விடுப்போனின் வேண்டுகோளை எற்பது
மறப்பதற்கான உங்கள் காரணங்களைக் கூறுவது
திடமாக ‘இல்லை’ என்று மறுப்பது.

உதாரணமாக ” இன்றிரவு நீங்கள் சில பணிகளை நான் உங்களுக்குச் செய்ய வேண்டுமென விரும்புவரை அறிகிறேன், ( அவரது வேண்டுகோலை அவருக்கே திருப்பிச் சொல்லலாம்) எனக்கு அவ்வாறு செய்ய விருப்பமே என்றாலும் இன்று இரவு என் குடும்பத்தில் வேறு சில திட்டங்கள் எற்கனவே வகுத்து விட்டோம் (காரணங்களைக் கூறல்) எனவே உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளேன்.” (முடியாது என்று கூறுதல்)”

இவ்வாறு நீங்கள் மறுத்துக்கூறுவதற்கு முன்னர், உங்களுடைய முடிவான பதிலை வீட்டில் கண்ணாடியின் முனநின்று கூறிப்பழக வேண்டும். உங்கள் உடல்மொழி இதில் முக்கிய பங்காற்றும். நேராக அமர்ந்தோ, நின்றோ, நெஞ்சை நிமிர்த்தி, கண்களோடு கண்கள் இணைத்து மென்மையான. ஆனால் உறுதியான குரலில் பேச வேண்டும்.

v. காலத்தைச் சவிர கையாறுதல்
நேரம் போதாமையால் அடிக்கடி நீங்கள் மன அழுத்தத்தை உணர்வீர்கள். விரிவாக காலத்தைக் கையாளும் திட்டங்களை விளக்க முடியாமற் போனாலும் சில பொதுவான முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. இலக்குகளை முடிவெடுத்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துதல்.

‘இதைச் செய்’ என்ற பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
உங்கள் இலக்குகளையும், செய்கைகளையும் முன்னுரிமைப்படுத்தி முக்கியமானவற்றை முதலில் செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரம் திட்டமிடல் 3-4 மணி நேரப் பணி மீதப்படுத்துமாதலால் செய்முறை படுத்துவதற்கு முன்னர் நன்கு திட்டமிட வேண்டும்.
நீங்கள் ஆக்கபூர்வமான மனநிலையில் உள்ள நேரத்தில் உங்கள் பெரும்பாலான செயல்களைச் செய்யவேண்டும். உதாரணமாக, சிலர் மதிய நேரங்களைக் காட்டிலும் காலை நேரங்களில் அதிகமாகப் பணியாற்றுவார்கள். அத்தகு செயலாக்க நேரங்களில் விருந்தாளிகள், தொலைபேசி பேச்சு முதலியவற்றைக்குறைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுடைய தொலைபேசி பேச்சுக்களை ஒரே நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுடைய செயல்களில் சிலவற்றைப் பிறருக்கு ஒப்படைககப் பழக வேண்டும்.
இடைநிறுத்தவும், ஓய்வு கொள்ளவும் குறிப்பிட்டு நேரத்தை ஒதுக்க வேண்டும்.
vi. எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து தடுங்கள்

நமக்கு நாமே பேசிக்கொள்வது நமது எண்ணங்களையும் மனநிலையையும் பாதிக்கும். எதிர்மறை எண்ணங்களில் ஈடுபடுபவர்கள் வெகு எளிதில் கவலைக்கும் சோர்வுக்கும் ஆளாவார்கள்.

உதாரணமாக இரண்டு மனிதர்கள் தத்தமது அலுவலகங்களுக்குள் வருகிறார்கள். அவர்களது முதலாளிகள் அவர்களைக் கோபத்துடன் பார்க்கிறார்கள். ஒருவர் உடனே குற்ற உணர்வுடன் தனக்குத்தானே “நான் நேற்று ஏதோ தவறு செய்திருப்போம் போலுள்ளது” என்று கூறிக்கொள்கிறார். அவர் அதைப் பற்றியே கவலைப்படத்தொடங்கி பணியில் சரிவர ஈடுபட முடியாமற் போகிறார். மற்றவரோ அந்தச் சூழ்நிலையைப் புறக்கணித்துவிட்டு பணியில் ஈடுபடத்தொடங்குகிறார். அவர் தனக்குள்தானே, “இன்று காலையில் முதலாளி ஏதோ கெட்ட மனநிலையில் உள்ளார் போலுள்ளது. ஏதோ ஒன்னு அவர் மனதைப் பாதிததிருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியுமாறு நான் என்னவாவது செய்ய முடியுமா? என்று கூறிக்கொள்கிறார். இருவர் இருந்தது ஒரே சூழ்நிலை ஆனால் அவர்களது எண்ணங்களும், செயல்களும் முற்றிலும் மாறானவை.

மன அழுத்தத்தை உண்டு பண்ணும் கீழ்க்கண்ட சிலவகை எண்ணங்களைத் தவிருங்கள்:
மன ஆய்வு (Mind Reading ) உதாரணமாக “எனது கணவர் என் சமையலை வெறுக்கிறார் என்று நினைக்கிறேன்.”
சோதிடம் கூறுதல், உதாரணம் “இந்தத்திட்டம் உறுதியாகத் தோல்வியுறும் பாருங்கள்”.
தீய விளைவுகள் வருமென அளவுக்கதிகமாக அச்சமுறுதல் உதாரணம்: “இந்தத் தவற்றுக்காக நான் நிச்சயமாக திட்டப்படுவேன்.
நிலை தடுமாற்றமுறுதல் உதாரணம் : ” இதற்கு பிறகு நான் எப்போதும் யாரையும் எதிர்கொள்ள முடியாமற் போவேன்.
அதிகம் பொதுமைபடுத்தல் உதாரணம்: ஒவ்வொருவரும் இனி என்னை தாழ்வாக நோக்குவார்கள்
“shoulds, oughts and musts” உதாரணம்: நான் எதைச் செய்தாலும் அது திறமையானதாக இருந்து தீரவேண்டும்.
திறம்பட செய்வேன் எண்ணம் உதாரணம்:நான் ஒன்று இதைத் திறமையுடன் செய்து தீரவேண்டும் அல்லது செய்யவே முயற்சி எடுக்காதிருக்க வேண்டும்.
vii. சமூக துணை:

பெரும்பாலான மக்கள், தாம் மனமுடையயும்போது தமது வேதனைகளைப் பிறருக்கு எடுத்துரைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். முயற்சி செய்து நல்ல, தீர்ப்பு ஏதும் கூறூத கேட்பவரை அடையாளங்களை காணுங்கள். உதாரணமாக உங்களுக்கு நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர், அல்லது நெருங்கிய நண்பர், அல்லது நீங்கள் நம்பும், எளிமையாகப் பழகும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நன்கு கேட்போரிடம் மனத்திறந்து பேசுதல் ஒருவரது சிக்கலின் உண்மைநிலையை, இயல்புருவைக்காண உதவும் மனதிலேயே புதைத்து வைத்து குமுழுறும் விசயங்களை பிறருக்கு எடுத்துரைப்பதே மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும்.

நாம் எப்போது உதவியை நாடவேண்டும்?
உங்களுக்கு ஆழ்ந்த மன அழுத்தம் ஏற்படும்போதும் எதிர்வரும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமற் போகும்போதும் தொழில்ரீதியான கருத்துரைப்போர்களைக் கலந்து சிந்திப்பது மிகவும் அறிவுபூர்வமானது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்திச் சீராக்கும் நுட்பங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். பிராணசிகிச்சை பெறுவதன் மூலமும்.கற்பதன் மூலமும் நிரந்தர தீர்வு காணலாம்

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள்

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள்

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல்தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது.இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காணமுடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.

5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும்,மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி.உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.
7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி.உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும்காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல்நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.

   ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்றபோதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

நன்றி :என் கணேசன்

மனைவி ---ஆதிகாலத்தில்இருந்து இந்தக்காலம் வரை கணவரை கூப்பிடுவது.....

#மனைவி ---ஆதிகாலத்தில்இருந்து இந்தக்காலம் வரை கணவரை கூப்பிடுவது.....
அகழ்வராய்ச்சியில்... கண்டுபிடித்தது...

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.
1910 ல் : சுவாமி!
1920ல்: பிரபோ!
1930ல்: பிராணநாதா!
1940ல்: நாதா!
1950ல்: மணவாளா!
1960ல்: மணாளா!
1970ல்: அத்தான்!
1980ல்: மச்சான்!
1990ல்: மாமா!
2000ல்: என்னங்க!
2005ல்: ஏனுங்க!
2010ல்: ஏங்க!
2015ல்: ஏய் !
2017ல்: டேய்!
அடேய்.
RAJAJI 30.05.17

Friday, April 28, 2017

ஆசை


=====
மண் ஆசை கூடாது என்று மகாபாரதமும்,பெண் ஆசை கூடாது என்று ராமாயணமும் போதிக்கின்றன.சக்திக்கு மீறிய ஆசை கொண்டு அலைபவன் அற்ப ஆயுளில் போய் விடுவான்.உன்னால் எதை அடைய முடியாதோ அதன்மீது ஆசை வைக்காதே.குறைந்த ஆசைதான் இன்ப வாழ்க்கை.மனித சமுதாயத்திற்கு துன்பமும், துயரமும் தராதவரை எல்லா ஆசைகளும் நல்லவைகளே.பாம்பிற்கு பாம்பின் விஷம் பகையல்ல.அது மற்றவரைத் தீண்டும்போதுதான் துன்பம் தருகிறது.அதுபோல ஆசைப்படுவது ஒருபோதும் தவறல்ல.மற்றவரை பாதிக்கும் போதுதான்,அவ்வாசை பேராசையாகி விடும்.கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டருக்கு அகிலத்தையே ஆள ஆசை.கிரேக்க தத்துவஞானி டயக்னஸூக்கு அகிலத்தையே துறக்க ஆசை.நிறைவேறிவிட்ட ஆசைகளில் மனது பெருமிதப்படுவதில்லை.நிறைவேறாத ஆசைகளுக்காகவே மனம் போராடுகிறது.உலகை வெல்ல புறப்பட்ட அலெக்ஸாண்டர்வழியில் ஆற்று மணலில் கோவணத்துடன் படுத்துக்கிடந்த டயோக்னஸ்ஸிடம் சிறிது பேசிவிட்டுச் செல்லும்போது ," நான் மட்டும் அலெக்ஸாண்டராக இல்லாவிட்டால் நிச்சயம் முற்றும் துறந்த டயோக்னஸாகவே இருக்க ஆசைப்படுவேன்.ஆமாம், ஒன்றும் இல்லாமைகூட எத்தனை சுகம்,எவ்வளவு நிம்மதி என்றாா்.தூய ஆசை உன்னை உயர்நிலைக்கு இட்டுச் செல்கிறது.தீய ஆசை வாழ்க்கையைக் கெடுக்கிறது.மனிதனிடம் உள்ள ஆசைகள் தாம் அவன் நூறு ஆண்டு வாழ வற்புறுத்துகின்றன.நல்ல பேச்சு, இனிய பாட்டு, உடல் வலுவுக்கேற்ற இனிய விளையாட்டு முதலியவற்றில் ஆசை கொள்ளுங்கள்.ஆசையிலிருந்து சோகம் தோன்றுகிறது.அச்சம் தோன்றுகிறது.ஆசையற்றவனுக்கு சோகமும் இல்லை.பயமும் இல்லை.படகு தண்ணீாில் இருக்கலாம்.தண்ணீா் படகினுள் நுழையக்கூடாது.மனிதன் ஆசைகள் நிறைந்த உலகில் வாழலாம்.ஆனால் ஆசைகள் அவனிடத்தில் வாழக்கூடாது.உங்களிடமிருந்து எல்லா ஆசைகளும் விலகிவிடுமானால் நீங்கள் இறைவனைக் காண முடியும்.ஆசைகள் இல்லாதவன் என்றும், எங்கும் சுதந்திரமாக இருக்கிறான்.ஆசை முடியும் கட்டத்தில்தான் அமைதி பிறக்கிறது.ஆசையின் இயல்பு என்னவென்றால் ஓர் ஆசை நிறைவேறியதும் இன்னோர் ஆசையைக் கொண்டு வந்து நிறுத்தும்.ஆசைப்படலாம்.ஆனால் பேராசைப்படக்கூடாது.அதேபோல நமது ஆசைகள் தர்மத்தை மீறாத வகையில் அமைய வேண்டும்.இதுதான் முக்கியம்
ஆசைகள் துறந்தால் அகிலம் உனக்கு என்பார்.கையளவு உள்ளம்.அதில் கடல்போல் ஆசை.பிறவியைப் பெருக்குவது ஆசை.புழுவுக்கு ஆசைப்பட்டு மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது.கண் கொண்டு தீயின் மீது ஆசைப்பட்டு விட்டில் பூச்சி அதில் விழுந்து மடிகிறது.ஊறு அல்லது ஸ்பாிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது.தேனை, மணத்தை நாட வண்டு மலாில் அகப்படுகின்றன.இந்த ஐம்பொறிகளையும் நம்பி ஓடுகிற மனிதனின் கதி என்னாவது?ஆடையின்றிப் பிறந்தோம்.ஆசையின்றிப் பிறந்தோமா? என்ற கவிஞனின் கவிதை நினைவுக்கு வருகிறது..வாழ்க்கைப் பயணம் ரயில் பயணம் போன்றது.ஆசை என்னும் சுமையோடு பயணிக்கக்கூடாது.ஆசை என்னும் வலையிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டுத் தாமரை இலைத் தண்ணீர்போல பட்டும்படாமல் வாழமுற்பட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்.முற்றும் துறந்த முனிவர்களுக்குக்கூட துறவறத்தால் இன்பம் காண ஆசை.ஆசையினால் நாம் எல்லை அமைத்துக் கொண்டோம்.கடலெங்கும் நீந்தி விளையாடுகின்ற மீன் ஒரு நீர்த் தொட்டிக்குள் கட்டுண்டு இருப்பது போன்று நம் சுயநலத்தால் ஆசை என்னும் சிறைக்குள் கட்டுண்டு இருக்கிறோம்.பணத்தாசை, பதவியாசை, புகழ் ஆசை, பெண் ஆசை, மண் ஆசை, பொன் ஆசை என வளர்ந்து கொண்டே போகும்.மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவது ஆசையே.வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆசையைப் பொறுத்தே எதிர்காலம் அமைகிறது.பிறரை துன்பத்திற்கு உள்ளாக்காத எந்த ஆசையும் நியாயமானதே.பகைவனை அடக்குவதைவிட ஆசைகளை அடக்குவதே வீரம்.சமூகம் தோன்றியதிலிருந்து மனிதனைச் செயல்படுத்தி வருவது இந்த ஆசைதான்.ஆசை அகற்றியவனுக்கு அனைத்தும் சொந்தம்.அகிலமும் சொந்தம்.அதை பெற்றுத்தருவது இந்த பிரபஞ்ச மனம் தான்.