Thursday, July 26, 2018

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம

*்!*

1. *நெஞ்சு சளி*

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. *தலைவலி*

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. *தொண்டை கரகரப்பு*

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. *தொடர் விக்கல்*

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. *அஜீரணம்*

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.  அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. *வாயு தொல்லை*

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. *வயிற்று வலி*

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. *சரும நோய்*

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. *மூக்கடைப்பு*

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. *கண் எரிச்சல், உடல் சூடு*

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. *வயிற்றுக் கடுப்பு*

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. *பற் கூச்சம்*

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. *வாய்ப் புண்*

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. *தலைவலி*

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. *வயிற்றுப் பொருமல்*

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. *அஜீரணம்*

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. *இடுப்புவலி*

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. *வியர்வை நாற்றம்*

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. *உடம்புவலி*

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. *ஆறாத புண்*

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. *கண் நோய்கள்*

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. *மலச்சிக்கல்*

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. *கபம்*

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. *நினைவாற்றல்*

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. *சீதபேதி*

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. *ஏப்பம்*

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. *பூச்சிக்கடிவலி*

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. *உடல் மெலிய*

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. *வயிற்றுப்புண்*

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. *வயிற்றுப் போக்கு*

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. *வேனல் கட்டி*

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. *வேர்க்குரு*

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. *உடல் தளர்ச்சி*

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. *நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு*

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. *தாய்ப்பால் சுரக்க*

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. *குழந்தை வெளுப்பாகப் பிறக்க*

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. *எரிச்சல் கொப்பளம்*

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. *பித்த நோய்கள்*

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. *கபக்கட்டு*

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. *நெற்றிப்புண்*

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. *மூக்கடைப்பு*

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. *ஞாபக சக்தி*

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. *மாரடைப்பு*

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. *ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்*

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. *கை சுளுக்கு*

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. *நீரிழிவு*

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. *மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்*

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. *கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்*

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. *உடல் வலுவலுப்பு*

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. *குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது*.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா!!!

* சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக உணவும் கிடையாது, தண்ணீரும் குடிப்பதில்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அவரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

★ஒரே அரையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து உணவும் தண்ணீர் கொடுக்காமல் அவரை பரிசோதனை செய்துவிட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார். தண்ணீர் உணவு சாப்பிடாத காரணத்தால் மலம் வராது எந்த கழிவும் வராது . ஆனால் சிறுநீர் வரும். அப்படி என்றால் தண்ணீர் குடிக்க மாட்டார் சிறுநீர் மட்டும் எப்படி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்பார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் நான் தண்ணீர் குடிப்பதில்லைதான் ஆனால் தண்ணீரை வாய் வழியாக குடிப்பதில்லையே தவிர உடம்பு atmospheric என்று சொல்ல கூடிய வளிமண்டலத்தில் இருக்க கூடிய நீர் ஆவியை தானாகவே உறிஞ்சி கொள்வேன்.

★சாதாரண ஒரு மரம் 14 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 14 லிட்டர் தண்ணீரையே வளிமண்டலத்தில் எடுத்து கொள்கிறது என்று சொன்னால் மனித உடம்பிற்கு தேவையானது 1 1/2 லிட்டர் தான் , ஏன் அது எடுக்காது என்று சூரிய யோகி கேட்பார். உண்மையாக அவரை பரிசோதனை செய்தவர்கள் எப்போதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல் வெளியில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் என்று கண்டுபிடித்தார்கள்.

★இந்த உடம்பே நீர் ஆவியை உறிஞ்சுகிற அளவிற்கு உறிஞ்சும் சக்தி இருக்கிறது. ஆற்றல் குறையும்!!!!. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்து செல்வார். அவர் வேகத்திற்கு நம்மால் நடக்கவும் முடியாது. கழிவு வெளியேற்றமும் கிடையாது. உணவும் தேவையில்லை. கையில் பணம் எடுத்து கொள்ளாமல் வெரும் கையோடு போவார். டீ குடிப்பதற்கு கூட 5 ரூபாய் வேண்டும். நாளு பேர் கிட்ட கை நீட்டி பிச்சையாவது எடுக்கனும். எதுவுமே தேவையில்லைலைனா!!!!!!!!. அவரை வீட்டுக்கு வரவேற்று மறியாதையா தண்ணீர் கொடுக்கிறேன் என்று கூட சொல்ல முடியாது.

★ அப்படினா தனக்கு தேவையானதை ஐம்புலன்களில் இருந்து உறிஞ்சி கொள்ளுதல் அந்த அளவிற்கு இந்த உடம்பில் ஆற்றல் உள்ளது என்பதை அந்த சூரிய யோகி நிரூபித்து உள்ளார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இப்போது கல்கத்தாவில் இருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு நினைத்தால் வந்துவிடுவார். வந்து சும்மா ஒரு நாள் கூடவே இருந்து சூரிய சக்தியை எப்படி ஈர்ப்பது என்று கற்றுத்தருகிறார்.

★செல்போனுக்கு battery down ஆகும் போது charge செய்வது போல மனிதனுக்கும் சக்தி குறையும் போது கண்களின் மூலமாக சூரியனில் இருந்து charge செய்துகொள்ளலாம்.

★ உயிரையும் மனதையும் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அதை பார்கலாம்.

★சூரிய தியானம் செய்துவிட்டு கண்களை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது உயிர் என்பது ஜோதி வடிவத்தில் தெரியும். உயிர் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மிக மிக பொருள். ஒரு பசு மாட்டின் ரோமத்தை எடுத்து 1000 துண்டுகளாக வெட்டி அந்த ஆயிரம் துண்டில் ஒரு துண்டை எடுத்து 10000 துண்டுகளாக வெட்டி கிடைக்கும் ஒரு துண்டின் அளவே உயிர். இதுவே இறைதுகள், பரமணு, வெட்டவெளி, கடவுள்துகள், சுத்தவெளி என பல பெயர்களில் கூறப்படுகிறது.

★உயிரின் படர்க்கை நிலையே மனம். உயிரில் இருந்து வெளிபடும் சீவகாந்த ஆற்றலே மனமாக இயங்குகிறது. சூரிய தியானம் செய்துவிட்டு கண்ணை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது மனம் என்பது spiral shape ல் சுற்றும். யார் வேண்டுமானாலும் மனதையும் உயிரையும் பார்கலாம்.

★உணவு தேவைப்பட்டால் தான் காசு தேவை உணவே தேவையில்லை என்றால் பணம் என்ற அத்தியாவசிய தேவையே இல்லாமல் போய்விடும்.

ஊக்கம் தரும் வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்

**ஊக்கம் தரும் வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஆழ்மனம் அதனை நம்ப ஆரம்பித்து பின் good நம்பிக்கையை மெய்ப்பிக்கும் **

வெற்றியை விரும்பாத மனிதர்கள் எவரேனும் உண்டா? வெற்றியைத் தேடிப் போகாத மனிதர்கள் இருக்கலாம். ஆனால் வரும் வெற்றியை வேண்டாம் என்று சொல்பவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

Affirmations கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஊக்கம் தரும் வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஆழ்மனம் அதனை நம்ப ஆரம்பித்து பின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்கிறது

வெற்றியைத் தேடித் தரும் வாக்கியங்கள் :

**நான் வெற்றிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்

**என் தனிப்பட்ட சக்தி மகத்தானது.

**நான்  எனது வாழ்க்கையில் ஒரு அதிசயம்

**நான் சாதரணங்களக்கு அப்பாற்பட்டவன், அபரிமிதத்தில் வாழ்கிறேன்.
.
**நான் என்னை நம்புகிறேன்

**நான்  என்னுடைய உயர்ந்த செல்வம் இதனை நான்  நம்புகிறேன்.

**நான் மகிழ்ச்சி, சாதனை மற்றும் முழுமையான நிறைவேற்றத்திற்கான பகைக்கப்பட்டுள்ளேன்.

மேற்கண்ட வாக்கியங்களை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்:

1) ஒரு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும்

அல்லது

2) ஒரு நாளில் மூன்று முறை வாசிக்க வேண்டும்

அல்லது

3) மும்மூன்று முறையாக ஒரு நாளில் 4 முறை வாசிக்க வேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் வாசிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு விரைவில் வெற்றியை அடைவீர்கள்

காசா பணமா? உற்சாகமூட்டும் வார்த்தைகள்தானே! முயன்று பாருங்கள்!

ஆழ்மனத்தின் அற்புத சக்தி"

"

செல்வந்தராவது உங்கள் பிறப்புரிமை

1. செல்வந்தராக இருப்பது உங்கள் உரிமை என்று தைரியமாகக் கூறுங்கள். உங்கள் ஆழ்மனம் உங்கள் பிரகடனத்திற்கு மதிப்பளிக்கும்.

2. வாழ்க்கையை ஓட்டுவதற்குப் போதுமான பணம் இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்தையும் நீங்கள் நினைத்த நேரத்தில் செய்வதற்குத் தேவையான எல்லாப் பணமும் உங்களுக்கு வேண்டும். உங்கள் ஆழ்மனத்தின் செல்வங்களைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.

3. பணம் உங்கள் வாழ்க்கையில் தங்குதடையின்றிப் புழங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் பொருளாதார ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். பணத்தைக் கடலலையாகப் பாருங்கள், அப்போது அது எப்போதும் உங்களிடம் ஏராளமாக இருக்கும். அலையின் பாய்ச்சலும் உள்வாங்கலும் ஓயாதது. ஓர் அலை கடலுக்குள் சென்றால், மீண்டும் அது திரும்பி வரும் என்று உங்களுக்கு மிகவும் உறுதியாகத் தெரியும்.

4. உங்கள் ஆழ்மனத்தின் விதிகளை அறிந்து கொண்ட பிறகு, பணம் உங்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

5.  போதிய பணமில்லாமல் எப்போதும் பலர் வெறுமனே தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதற்கான ஒரு காரணம், அவர்கள் பணத்தைப் பழிப்பதுதான். நீங்கள் பழிப்பது உங்களைவிட்டு இறக்கை முளைத்துப் பறந்துவிடும்.

6.  பணத்தைக் கடவுளாக்கி விடாதீர்கள். அது ஒரு குறியீடு மட்டும்தான். உண்மையான செல்வங்கள் உங்கள் உள்ளத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இங்கு ஒரு சமநிலையான வாழ்க்கையை வாழ வந்துள்ளீர்கள். உங்களுக்குத் தேவையான பணத்தைக் கைவசப்படுத்துவதும் இதில் அடங்கும்.

7.  பணத்தில் மட்டுமே குறியாக இருக்காதீர்கள். செல்வம், மகிழ்ச்சி, அமைதி, உண்மையான வெளிப்பாடு, அன்பு ஆகியவற்றையும் தேடுங்கள். தனிப்பட்ட முறையில் அனைவரிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் செலுத்துங்கள். பின், உங்கள் ஆழ்மனம் இவற்றின் வெளிப்பாட்டில், உங்களுக்குக் கூட்டு வட்டி வழங்கும்.

8. ஏழ்மையில் யாதொரு ஏற்றமிகு பண்பும் இல்லை. இது ஒரு மனநோய். நீங்கள் இந்த மனப்பிணியிலிருந்தும், முரண்பாட்டிலிருந்தும் உடனே உங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

9.  நீங்கள் இங்கு ஒரு மோசமான சூழலில் உழல்வதற்கோ, கந்தல் ஆடைகளுடன் அலைவதற்கோ, அல்லது பட்டினி கிடப்பதற்கோ வரவில்லை. நீங்கள் செழிப்பான வாழ்க்கை வாழ்வதற்கே இங்கு வந்துள்ளீர்கள்.

10.  “கறைபடிந்த பணம்,’’ அல்லது “நான் பணத்தை வெறுக்கிறேன்,’’ போன்ற சொற்றொடர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் எதைக் குறை கூறுகிறீர்களோ, அதை இழப்பீர்கள். பணத்திற்கு நல்லது கெட்டது என்ற முத்திரையைக் குத்த இயலாது. நாம் அதைப் பற்றிச் சிந்திக்கும் கோணம்தான் அதனை நல்லதாகவோ கெட்டதாகவோ ஆக்குகிறது.

11. “நான் பணத்தை விரும்புகிறேன். நான் அதை ஆக்கப்பூர்வமாகவும், விவேகத்துடனும் பயன்படுத்துகிறேன். நான் அதை மகிழ்ச்சியுடன் விடுவிக்கிறேன். அது என்னிடம் ஆயிரம் மடங்காகத் திரும்பி வருகிறது,’’ என்று அடிக்கடி மீண்டும் மீண்டும் கூறுங்கள்.

12. பூமியிலிருந்து தோண்டியெடுக்கப்படும் செம்பு, ஈயம், தகரம், அல்லது இரும்பு ஆகியவற்றைவிடப் பணம் ஒன்றும் தீயதல்ல. எல்லாத் தீங்கும் மனத்தின் சக்திகள் குறித்த அறியாமையாலும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதாலும் ஏற்படுவதுதான்.

13. இறுதி முடிவை மனத்தில் காட்சிப்படுத்தும்போது, உங்கள் ஆழ்மனம் உங்கள் அகக்காட்சிக்கு ஏற்றாற்போல் செயல்விடை அளித்து அம்முடிவை நிறைவேற்றும்.

14. எதுவும் கொடுக்காமல் ஒன்றைப் பெறுவதற்கு முயற்சிப்பதை நிறுத்துங்கள். ஓசிச் சாப்பாடு என்ற ஒன்று கிடையாது. ஏதேனும் ஒன்றைப் பெற, நீங்கள் ஏதேனும் ஒன்றை விலையாகக் கொடுக்க வேண்டும்.

15. நீங்கள் உங்கள் குறிக்கோள்களிலும், உயர்ந்த சிந்தனைகளிலும், தொழில்களிலும் மனத்தை ஒருமுகப்படுத்திக் கவனம் செலுத்தினால், உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் துணை புரியும்.

16. செல்வம் குறித்த எண்ணத்தை ஆழ்மனத்தில் நிறைத்து, ஆழ்மனத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துவதில்தான் செல்வத்தை அடைவதற்கான சூட்சமம் உள்ளது.

படியுங்கள்..உணருங்கள்..பயன்பெறுங்கள்...

நன்றி.நன்றி..நன்றி...