Monday, August 28, 2017

சித்தர்கள் எத்தனை கனிவான மனம் கொண்டவர்கள்

‬: சித்தர்கள் எத்தனை கனிவான மனம் கொண்டவர்கள் என்பதை ஒரு சிலரே அறிவர்.  அதை அனுபவித்துப் பார்ப்பதற்கே மிகப் பெரிய புண்ணியம் செய்திருக்கவேண்டும்.  நம் கர்மாவை பார்த்து, நம் தகுதியை பார்த்து, நம் எதிர்கால நடவடிக்கைகள் "தெய்வ நம்பிக்கையை" சார்ந்து இருக்குமா என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்த பின்தான் அவர்கள் அருள் நமக்கு விதிக்கப்படும். எல்லாம் அவன் செயல் என்பது நிதர்சனமாயினும், பல நேரங்களில் மனிதர்களான நாம் அதையும் மறந்து விடுகிறோம் என்பதே உண்மை.  ஏன்?  நம் வாழ்க்கையில் நம் கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் காரணம்.  சோதனை இல்லாமல் ஒருபோதும் சித்தர் அருள் நமக்கு கிடைக்காது.  அந்த சோதனை நடக்கும் போது, நாம் எப்படி நடந்து கொள்கிறோம், அவர்கள் பரீட்சையில் நாம் தேறுகிறோமா என்பதெல்லாம் பொறுத்து அவர்கள் அருள் நமக்கு கிடைக்கும்.  உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

அவன் வீட்டை விட்டு வெளியேறி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.  வியாபாரத்தில் பெருத்த நஷ்டம்.  கடன் சுமை தலைக்கு மேலே உயர, குடும்பத்தை, அதன் தினப் பிரதி விஷயங்களை சந்திக்ககூட சக்தி இன்றி வாழ்க்கையே கை விட்டு போய், என்ன செய்வதென்று அறியாமல் நடந்தான்.  திடீரென்று ஏதேனும் மலை சார்ந்த இடத்திற்கு சென்று காட்டுக்குள் போய் "தற்கொலை" செய்துகொள்ளலாம் என்று தோன்றவே, மலை ஏறத் தொடங்கினான்.  அவன் சென்று சேர்ந்த இடம் "பொதிகை மலை" அடிவாரம்.

கைவசம் சாப்பிட எதுவும் இல்லாமல், பசியும் அசதியும் ஒன்று சேர, வனத்தில்  ஒரு வேப்பிலை மரத்தின் அடியில் அமர்ந்து உறங்கிப் போனான்.

நன்றாக உறங்கியவன், ஏதோ சப்தம் கேட்டு விழித்துப் பார்க்க, தன் முன்னே ஒரு மண் குடுவையில் குடிக்க நீரும், ஒரு இலையில் சுற்றப்பட்ட உணவும் இருப்பதை கண்டான்.  அவனுக்கோ மிகுந்த ஆச்சரியம்.  மனிதர் வாடையே இல்லாத இந்த வனத்தில் நான் பசியுடன் இருக்கிறேன் என்று உணர்ந்து யார் உண்ண உணவும், குடிக்க நீரும் யார் கொண்டு வைத்திருப்பார்கள்?  என்ன ஆனாலும் யோசிக்க அவன் மனம் நிற்கவில்லை.  அவற்றை எடுத்து உண்டான்.

இந்த இடத்தில் தங்கி இருப்பது தான் உசிதம் என உணர்ந்து, "இங்கேயே தங்கிவிடுவோம்!  உணவு கிடைத்தால் உண்போம்! இல்லையேல், இறைவனை த்யானித்து தவத்தில் மூழ்கிவிடுவோம்" என்று தீர்மானித்தான்.  தற்காலிகமாக "தற்கொலை" எண்ணம் விலகி நின்றது.

மூன்று நாட்கள் கழிந்தது.  அவனுக்கு பசிக்கவும் இல்லை, யாரும் உண்ண உணவு கொண்டு தரவும் இல்லை.  நான்காவது நாள் அவனுக்குள் பசி உணரத் தொடங்க, த்யானத்திலிருந்து வெளியே வந்து கண் விழித்துப் பார்க்க, அவன் முன்னே உணவும் நீரும் இருந்தது.  மிகுந்த ஆச்சரியத்துடன் அதை உண்ணத் தொடங்கினான். 

உண்ணும் போதே "யார் இத்தனை கருணையுடன் நான் இருக்கும் இடம் தேடி வந்து உணவை அளிப்பது?  எப்படி அவர்களுக்கு நான் இங்கு பசியுடன் இருக்கிறேன் என்று தெரிந்தது?"  என்று யோசித்தான்.

அந்த நிமிடத்தில் காட்டின் ஒரு மூலையில் இருந்து சன்னமாக வார்த்தைகள் காற்றில் மிதந்து வந்தது.

"மூடனே!  தகுதியில்லாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அளவுக்கு மீறி வியாபாரம் செய்ய ஆசைப்பட்டு, கடன் வாங்கி குவித்தாய்.  வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு மேலே சென்றதும், உன்னை நம்பி இருந்த குடும்பத்தை தவிக்கவிட்டு, இங்கு வந்து தற்கொலை செய்துகொள்ள வந்தாய்.  இங்கிருந்து சென்று விடு.  உன் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.  இப்பொழுதே போ!" என்று உத்தரவு வந்தது.

ஆனால், அவன், தன் கடன் சுமைகளை மனதில் வைத்து "பணம் கிடைக்க வேண்டும்.  அது அன்றி இங்கிருந்து நகருவதில்லை.  இல்லையேல் இங்கேயே இருந்து மீதம் இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து, முடிவை எதிர்கொள்வேன்" என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தான்.

அசரீரி மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.  அவன் அந்த வார்த்தைகளை சட்டை செய்வதாகவே இல்லை.

த்யானத்தை தொடர்ந்தான்.

மூன்று நாட்கள் சென்றது.  எந்த உணவும் கிடைக்கவில்லை.  அவனுக்கும் பசிக்கவில்லை.  அந்த அசரீரி மட்டும் விட்டு விட்டு அவனை "திரும்பிப் போ" என்று சொல்லிக் கொண்டிருந்தது. 

இனி எதிர்பார்த்து காத்திருப்பதில் பயனில்லை என்று நினைத்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்து அருகிலிருந்த உயரமான குன்றிலிருந்து கீழே குதித்தான்.

வேகமாக பூமியை நோக்கி வந்த அவன் தன் சுய நினைவை இழந்தான்.

நினைவு வந்து முழித்துப் பார்க்க, அவனை ஒரு சித்தர் தன கைகளில் மேகக்கூட்டத்திற் கிடையில்  சுமந்து செல்வதை உணர்ந்தான்.  மிகுந்த பசியின் காரணமாக மீண்டும் நினைவிழந்தான்.

தன் முகத்தில் நீர் தெளிக்கப்படுவதை உணர்ந்து மயக்கம் தெளிந்து பார்க்க அங்கே ஒரு சித்தர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் அவனை கருணையுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான்.  அவர் அவனுக்கு தேனும், பழங்களும் கொடுத்து பசியாற்றியபின் பேசத்தொடங்கினார்.

"அப்பனே!  உன் பிரச்சினைகளுக்கான விமோசன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.  திரும்பி உன் வீட்டிற்கு செல்.  அங்கே அனைத்தும் உனக்கு புரியும்.  தற்கொலை செய்கிற உனது திடமான எண்ணத்தை கை விடு.  இது புனிதமான மலை.  இங்கே தவறை செய்து இந்த மலையை அசுத்தமாக்காதே! உனக்கு இன்னும் விதி உள்ளது.  நல்ல முறையில் நல்லது செய்து வாழ்ந்து வா.  எனது ஆசிகள் உனக்கு" என்றார்.

நடப்பதெல்லாம் கனவா, நனவா என்று புரியவில்லை அவனுக்கு.

"சாமி! நீங்க யாரு!  உங்க பேர் என்ன?  எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?"

"நான் கோரக்கர்..  தலையாய சித்தர் அகத்தியரின் உத்தரவால் உன்னை காப்பாற்றி கரை ஏற்றினேன். நீ புண்ணியவான்" என்று கூறி அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிரித்தபடி நடந்து சென்று மறைந்து போனார்.

என்னவோ கேட்க நினைத்தவன் ஒரு அடி எடுத்து வைக்க, காலில் ஏதோ ஒன்று தட்டியது.

குனிந்து கீழே பார்த்தவனுக்கு ஒரு மண் பானை கண்ணில் பட்டது.  மெதுவாக அதை திறந்து பார்த்தவன் அசந்து போனான்.

அது நிறைய பணம் இருந்தது.  தனக்கென சித்தனால் விதிக்கப்பட்டது என்று உணர்ந்து,   அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவனுக்கு இன்னொரு அதிசயம் காத்திருந்தது.

அவன் வாங்கியிருந்த கடன் அனைத்தையும் யாரோ ஒரு முன் பின் தெரியாத ஒருவர் வந்து அடைத்து தீர்த்துவிட்டிருந்தார்.

அனைத்தையும் அப்போது உணர்ந்த அவன் அன்று முதல் நேர் வழியில் சென்று, நிறைய சம்பாதித்து, ஆன்மீகத்தில் பல நிலைகளை அடைந்து, இன்றும் சித்தர் காட்டிய வழியில் செல்கிறான்.

அதீத ஆசைகளால் அலைக்கழிந்திருந்தாலும், சித்தனால் அருளப் பெறுகிற அளவுக்கு அத்தனை புண்ணியம் செய்தவனா நான் என்று ஒருநாள் த்யானத்தில் சித்தரிடம் கேள்வி கேட்க

"ஆம்! நீ புண்ணியம் செய்தவன் தான்" என்று பதில் கூறினார் கோரக்கர்.

இன்றும் சித்தர்கள் நம்மிடை இருந்து கொண்டு, ஆபத்து காலத்தில் நம்மை கை தூக்கி விடுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.

Blues whale game


----------------------------------------

💠    செய்தி தாளில் ஒரு அதிர்ச்சி யூட்டும் செய்தியை படிக்க நேர்ந்தது!!அதை உங்களுடன்  எழுதி பகிர்ந்து கொள்கிறேன்!!!

💠  சிறுவர்களை வாலிபர்களை காவு வாங்கும் "BLUE WHALE CHALLENGE " இணைய தள விளையாட்டு   பற்றின தகவல் இது!!!

💠  இதுவரை 130 சிறுவர்கள் வாலிபர்களின் தற்கொலை க்கு காரணமாக அமைந்த விளையாட்டு இது!!!

💠  " BLUE WHALE CHALLENGE "== இணையத்தில் குளுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு! !!

💠  முதலில் email மூலமாக செய்தியை அனுப்பி சவாலை சந்திக்க தயாரா??என கேள்வி கேட்பார்களாம்!! ஆம்!!என்றால் விளையாட்டின் விதிமுறைகளை அனுப்புவார்கள்! !!

💠  முதலில் எளிதாக தோன்றும் சவால்கள்  படிப்படியாக கடின இலக்கை நோக்கி பயணிக்கும்!!!கிட்டத்தட்ட 50 சவால்களை எதிர் கொண்டு செய்து காட்ட வேண்டும்! !

💠  சவாலை சந்திக்கும் ஒவ்வொரு  கட்டத்திலும் வீடியோ அல்லது படம் எடுத்து குழுவுக்கு அனுப்ப வேண்டும்!!!

💠  இறுதி சவால் தற்கொலை பண்ண வேண்டியது! !😵😵😵😵😵

💠  ஆரம்ப சவால்கள் >>>

1. முதலில் நீலத் திமிங்கலத்தை வரைய வேண்டும்! !

2. தனியாக இரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போக வேண்டும்!!!

3. இனிப்புகளை அள்ளி வாய் நிறைய சாப்பிட வேண்டும்! !இதை செய்ய செய்ய பாராட்டு கள் வந்து குவியும்!!

💠. மெல்ல மெல்ல படிநிலைகள் ஏற ஏற சவால்கள் கடினமாக மாறும்! !

5. இரவில் தனியாக. பேய்ப்படம் பார்க்கணும்! !

6. கையில் பிளேடால் வரைய வேண்டும்! !😵😵😵😵

7. கண்ணை மூடிக் கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிக்க வேண்டும்!!!😳😳😳

8. படிப்படியாக நிலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் போது இறுதியான சவால் என்ன என எதிர்பார்த்து கொண்டிக்கும் போது அது தற்கொலை யை சந்திக்கும் சவாலாக இருக்கும்! !😢😢😢😢😢😢😢

💠  தற்கொலை செய்ய மறுத்தால் ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்ற பேராபத்தே உண்டாகும்!!!

💠  மிக ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பது அப்போது தான் புரியும்! !அவர்களுக்கு!!

💠   ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் போக்குவரத்தில் அவர்களுக்கு தெரியாமல் கணினி அல்லது மொபைலில் "ட்ரோஜன் வைரஸ் "  அனுப்பிவிட்டு சவாலை சந்திக்க மறுத்தால்  அந்தரங்க தகவல்களை கசியவிடுவோம் என மிரட்டுவார்கள்!!

💠  இதற்கு பயந்தே அநேக வாலிப சிறுவர்கள் தற்கொலை க்கு ஆளாகிறார்கள் 😢😢😢

💠  ரஷ்யாவை மையமாக கொண்டு ஆரம்பித்த விளையாட்டு இணையம் மூலம் உலகம் முழுவதுமாக 130 சிறுவர் வாலிபர்களை தற்கொலைக்கு தூண்டிற்று!!!😥😥😥

💠  ரஷ்ய அரசாங்கம் நேரடியாக தலையிட்டு விசாரணை மேற்கொண்டு இந்த விளையாட்டு பற்றிய விபரீதத்தை  வி.ழிப்புணர்வு ஏற்படுத்தி யது!!இதனால் உலகம் முழுவதும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்!!!

💠  இந்தியாவில் இதைக் குறித்த விபரீதம் இல்லையென நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த திங்கள் கிழமை 14 வயது மன்பிரீத்   சிங் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டான்!!! 😢😢😢😢

💠  இதற்கு காரணம் BLUE WHALE CHALLENGE. என்பதே!! அவர்கள் நண்பர்களின் வாக்குமூலம் மூலமாக மீண்டுமாக உலகத்தில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது!!!

💠  பெற்றோர்களே!!! உங்கள்  குழந்தை களை நன்றாக் கண்காணியுங்கள்! !! குறிப்பாக கணினி மொபைல் விளையாட்டுகளை தவிர்க்கும் வண்ணமாக. செயல்படுவது நல்லது!!!

💠  இணைய தள விளையாட்டுகள் பிள்ளைகளை சிந்திக்க விடாதபடி அடிமையாக்கவும்,அநேக கேடான நிலைக்கு கொண்டு போகின்றது என அநேக கட்டுரைகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் மூலமாக நாம் அறிந்ததே!!!

💠   ஜாக்கிரதை யாக குழந்தைகளை பேணுவோம்!!! பிள்ளைகள் நம் பொக்கிஷம்! !!

♻   நன்றி =="தி இந்து"   செய்தித்  தாளிற்காக !! 

RAJAJI JS. 27×8×17

Sunday, August 27, 2017

Mercedes-Benz

*கண்டிப்பாக படியுங்கள் அனைவரும்*
*---------------------------------*

*அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார்.  எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.*

*தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.*

*அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.*

*ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான்.  அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்*

*இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.*

*அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.*

*சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண்.  அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார். "சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச்சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.*

*அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்.*

*"அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!" ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப்பணம் உனக்குத்தான்.  இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்" என்று எழுதி வைத்திருந்தார்கள்..*

*அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப்பணம் அவர்களுக்குப்பெரிய உதவி! இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம்.*

*ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.*

*தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.*

*இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால்தான

ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும்

ஒரு பெரியவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடிதிருவாசத்தை படித்துக் கொண்டே இருப்பார்.

இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் ,

தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே.
இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க?என்றான்.

பெரியவர் சொன்னார்,
ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷமஇருக்கும் ".

அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு
மனப்பாடம்ஆயிருக்குமே!

அப்புறம் ஏன்
இன்னும் படிக்கிறிங்க ?"
என்றான்.

தாத்தா சிரித்தபடி கூறினார்,

எனக்கு ஒரு உதவி செய்.
நீ செஞ்சுமுடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".

இளைஞன் கேட்டான்,
என்ன உதவி தாத்தா? "

பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்
இருந்த ஒரு மூங்கில் கூடையைஎடுத்தார்.

அதில் அடுப்புக் கரி
இருந்தது.

அதை ஒரு மூலையில்
கொட்டினார்.

பல நாட்களாகக் கரியை
சுமந்து சுமந்து அந்தக் கூடையின்உட்புறம் கருப்பாக மாறிஇருந்தது.

பெரியவர் சொன்னார்,

தம்பி, அதோ இருக்குற பைப்புலஇருந்து இந்தக் கூடையில கொஞ்சம்
தண்ணி பிடியேன்"

இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.

இருந்தாலும் பெரியவர் சொல்லிவிட்டதால் எடுத்துச்சென்று
தண்ணீர்நிரப்பி எடுத்து வந்தான்.

அவன் வந்து
சேருவதற்கு முன்பே எல்லா நீரும்தரையில் ஒழுகிப்போனது.

பெரியவர்சொன்னார்,
இன்னும் ஒரு முறை " .
இளைஞன்மீண்டும் முயன்றான்.

ஆனால் மூங்கில்
கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப்போனது.

பெரியவர்
கேட்டார்,

தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் "

இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்.

இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடிசெய்து விட்டு திரும்பிப் பார்க்காமஓடிவிடுவோம்.

அவர் எந்தப்புத்தகத்தைப்
படித்தால் எனக்கென்ன வந்தது?

தண்ணீர் பிடித்தான்.
வழக்கம் போலவே
எல்லாத் தண்ணீரும் தரையில்.

தாத்தா,
இந்தாங்க உங்க கூடை.
இதில்தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா?
எதுக்குஎன்னை இந்தப் பாடு படுத்தினிங்க "
என்றான்.

அவர் புன்னகையோடு சொன்னார்,

இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும்
தெரியும்.

நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்போகும் போது இதோட உட்புறம் எப்படிஇருந்தது?
என்றார்.

இளைஞன் சொன்னான்
ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பாஇருந்தது "

இப்போ பார்"என்றார்.

தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின்உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,

தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில்
இதுதான்.

எத்தனை முறைதண்ணீர்
பிடிச்சாலும் மூங்கில்கூடை
நிரம்பவே இல்லை.
ஆனாலும் ஒவ்வொரு
முறையும் கூடை சுத்தமாயிடிச்சு.

அது போலத்தான்
எத்தனை முறை படிச்சாலும் முழு
திருவாசகமும் மனப்பாடம் ஆயிடும்னு
சொல்ல முடியாது.

ஆனா படிக்கிற
ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள
இருக்கும் அழுக்கும்,
கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்"என்றார்.

இளைஞனுக்குள்ளே என்னென்னவோ
செய்தது.

பின் அவனும் படிக்க ஆரம்பித்தான் அந்த திருவாசகத்தை அவன் கண்களிள் கண்ணீர் அதை அவன் நாவு சுவைத்தது அது தித்தித்தது அவன் தன் தாத்தாவிடம் சென்னான்

என் கண்ணீர் தித்திக்குது என்று அதற்கு அந்த பெரியவர் சென்னது, அதுதான் தித்திக்கும்திருவாசகம்

எந்த ஞானிகளின் சிந்தனைகளோ அல்லது ஆன்மீக கதைகளோ நம்மை தூய்மைபடுத்த வே,,,

RAJAJI JS. 27.8.17

Friday, August 25, 2017

கர்மவினை!!

!!!

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!

ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !!

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!
RAJAJI JS.       25-8-17