Sunday, August 27, 2017

ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும்

ஒரு பெரியவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடிதிருவாசத்தை படித்துக் கொண்டே இருப்பார்.

இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் ,

தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே.
இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க?என்றான்.

பெரியவர் சொன்னார்,
ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷமஇருக்கும் ".

அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு
மனப்பாடம்ஆயிருக்குமே!

அப்புறம் ஏன்
இன்னும் படிக்கிறிங்க ?"
என்றான்.

தாத்தா சிரித்தபடி கூறினார்,

எனக்கு ஒரு உதவி செய்.
நீ செஞ்சுமுடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".

இளைஞன் கேட்டான்,
என்ன உதவி தாத்தா? "

பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்
இருந்த ஒரு மூங்கில் கூடையைஎடுத்தார்.

அதில் அடுப்புக் கரி
இருந்தது.

அதை ஒரு மூலையில்
கொட்டினார்.

பல நாட்களாகக் கரியை
சுமந்து சுமந்து அந்தக் கூடையின்உட்புறம் கருப்பாக மாறிஇருந்தது.

பெரியவர் சொன்னார்,

தம்பி, அதோ இருக்குற பைப்புலஇருந்து இந்தக் கூடையில கொஞ்சம்
தண்ணி பிடியேன்"

இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.

இருந்தாலும் பெரியவர் சொல்லிவிட்டதால் எடுத்துச்சென்று
தண்ணீர்நிரப்பி எடுத்து வந்தான்.

அவன் வந்து
சேருவதற்கு முன்பே எல்லா நீரும்தரையில் ஒழுகிப்போனது.

பெரியவர்சொன்னார்,
இன்னும் ஒரு முறை " .
இளைஞன்மீண்டும் முயன்றான்.

ஆனால் மூங்கில்
கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப்போனது.

பெரியவர்
கேட்டார்,

தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் "

இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்.

இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடிசெய்து விட்டு திரும்பிப் பார்க்காமஓடிவிடுவோம்.

அவர் எந்தப்புத்தகத்தைப்
படித்தால் எனக்கென்ன வந்தது?

தண்ணீர் பிடித்தான்.
வழக்கம் போலவே
எல்லாத் தண்ணீரும் தரையில்.

தாத்தா,
இந்தாங்க உங்க கூடை.
இதில்தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா?
எதுக்குஎன்னை இந்தப் பாடு படுத்தினிங்க "
என்றான்.

அவர் புன்னகையோடு சொன்னார்,

இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும்
தெரியும்.

நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்போகும் போது இதோட உட்புறம் எப்படிஇருந்தது?
என்றார்.

இளைஞன் சொன்னான்
ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பாஇருந்தது "

இப்போ பார்"என்றார்.

தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின்உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,

தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில்
இதுதான்.

எத்தனை முறைதண்ணீர்
பிடிச்சாலும் மூங்கில்கூடை
நிரம்பவே இல்லை.
ஆனாலும் ஒவ்வொரு
முறையும் கூடை சுத்தமாயிடிச்சு.

அது போலத்தான்
எத்தனை முறை படிச்சாலும் முழு
திருவாசகமும் மனப்பாடம் ஆயிடும்னு
சொல்ல முடியாது.

ஆனா படிக்கிற
ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள
இருக்கும் அழுக்கும்,
கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்"என்றார்.

இளைஞனுக்குள்ளே என்னென்னவோ
செய்தது.

பின் அவனும் படிக்க ஆரம்பித்தான் அந்த திருவாசகத்தை அவன் கண்களிள் கண்ணீர் அதை அவன் நாவு சுவைத்தது அது தித்தித்தது அவன் தன் தாத்தாவிடம் சென்னான்

என் கண்ணீர் தித்திக்குது என்று அதற்கு அந்த பெரியவர் சென்னது, அதுதான் தித்திக்கும்திருவாசகம்

எந்த ஞானிகளின் சிந்தனைகளோ அல்லது ஆன்மீக கதைகளோ நம்மை தூய்மைபடுத்த வே,,,

RAJAJI JS. 27.8.17

No comments:

Post a Comment