Tuesday, December 26, 2017

கேள்வி - ஆலயங்களையும், உடலையும் ஒப்பிட்டு

கேள்வி - ஆலயங்களையும், உடலையும் ஒப்பிட்டு நல்ல விளக்கங்கள் கொடுத்தீர்கள். ஓரளவு ஒத்துக் கொள்ளத் தக்க வகையில் இருக்கிறது. ஆனால், புற வழிபாடுகள் செய்வது எதற்காக ஐயா ? பூஜைகள், வேள்விகள், ஆடல், பாடல், கேளிக்கைகள், தேர் திருவிழாக்கள் என்று பொருள் விரையங்களை ஆதரிக்கிறீர்களா ?

இராம் மனோகர் - நான் ஆதரிப்பதாலோ, எதிர்ப்பதாலோ எந்த வித மாற்றமும் வந்து விடப் போவதில்லை. பல சித்தர்களும், ஞானிகளும்,பகுத்தறிவு வாதிகளும் வந்து பலவிதமாகப் புற வழிபாட்டு முறைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து பேசியிருந்தாலும், காலப் போக்கில் அவை அதிகரித்துதான் இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. ஞானிகள் அவர்கள் ஞானத்தின் நிலையில் நின்று சொல்வதை சாதாரண மனிதனால் பின்பற்ற முடியாது. வழிபாடுகள் என்பது மனிதனைப் பக்குவப் படுத்தும் யுக்திதானே தவிர, அதுவே முடிவல்ல. சொல்லப் போனால் ஞானம் என்பது கூட முடிவான நிலை அல்ல. அது ஒரு உயர்ந்த நிலை, அவ்வளவுதான். அதற்கு அப்பாலும் பல நிலைகள் உள்ளன. ஞானத்தின் நிலைக்கு பக்குவமடைந்து, உயர்ந்தவர்களுக்கு பக்குவமடையாதவர்களின் செயல்கள் குழந்தைகளின் பொம்மை விளையாட்டு போலத் தோன்றுகிறது.

எனவே கிண்டல் செய்கிறார்கள். வழிபாட்டு முறைகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தனி மனிதனின் மனப் பக்குவம், மனநிலை, அறிவு நிலை, சூழ்நிலை போன்றவற்றிற்கு ஏற்பதான் அமைந்திருக்கின்றன. வழிபடுதல் என்றால் என்ன ? ''உயிரானது இறைவனை நோக்கிய வழியில் படுதல்'' இதுதான் வழிபடுதல். மனித உடல் அமைப்பையே ஆலய அமைப்பாக வடிவமைத்து, மனப்பக்குவம் பெறாதவர்களுக்கு புற வழிபாடுகளை ஏற்படுத்தித் தந்தார்கள். சடங்கு, சம்பிரதாயங்களுக்குப் பின்னால் மனப் பக்குவத்தை ஏற்படுத்தும் நுட்பங்கள் பல இருக்கின்றன. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அவற்றிற்கிடையே சில தேவையற்ற கேளிக்கைகளும் நுழைந்து விட்டன. அவை இன்றளவும் தொடர்கின்றன. அதை வைத்துக் கொண்டு மொத்த வழிபாட்டு முறைகளையும் தவறு என்று சொல்வது ஏற்புடையதல்ல. சித்தர்களிடம் கூட புற வழிபாடுகள் உண்டு.

சித்தர்களின் பூஜா விதி என்று அனைத்து சித்தர்கள் நூல்களிலும் தரப்பட்டுள்ளன. அவர்களும், யந்திரம், தந்திரம், மந்திரம், ஔஷதம் இவற்றைக் கொண்டு, புற வழிபாடுகள் செய்திருக்கிறார்கள். எனவே மனம் இறைவனை உணர, மனதில் இறைவுணர்வு மேம்பட வழிபாட்டு முறைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேர் திருவிழா என்பது எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். சாதிய தீண்டாமை உணர்வுகள் மேலோங்கியிருந்த கால கட்டங்களில், பாமரர்களும் இறைவுணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில்தான் இறைவன் தேரில் பவனி வருவதாக வடிவமைத்து வைத்தார்கள். இறைவனே ஆலயத்தை விட்டு அவர்களைத் தேடி வீதிகளுக்கு வந்து அவர்களுக்கு அருள் செய்கிறார் என்ற நிலையில் அவர்கள் மனதில் பக்தியை விதைத்தார்கள். இதுவும் அவ்வப்பொழுது தோன்றிய மகான்களின் யுக்திதான். இந்தக் காலத்துக்கு அது பொருந்துமா ? என்று கேட்டால், பொருந்தும் என்றுதான் நான் சொல்வேன்.

ஏனெனில், இப்பொழுதும் தன்னுடைய அன்றாட பனிகளுக்கு இடையே ஆலயங்களுக்கே வராமல் இறைவுணர்வே இல்லாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இத்தகைய விழாக்கள் மூலம், இறைவுணர்வு தூண்டப் பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை. அத்தகைய ஒரு காட்சி, ஒரு நிகழ்வு மனதில் இறைவுணர்வை விதைத்து விடுகிறது. என்றேனும் ஒரு நாள் அது முளைத்தெழும் பொழுது அவர்களும் இறைவனை நாட முனைவார்கள். விரையம் என்று பார்த்தால் தற்காலங்களில் நாம் உண்ணும் உணவு கூட விரையம்தான். உடலின் ஆரோக்யத்திற்காக யார் உணவு உண்ணுகிறார்கள் ? பசியை அடக்கவும், ருஷிக்காகவும்தான் உணவு உண்ணுகிறார்கள். எனவே நல்ல காரியங்களுக்காக எல்லோரும் சேர்ந்து சிறிதளவு பணம் செலவு செய்வதால் எந்தத் தீங்கும் நேர்ந்து விடப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். அதே சமயம் இதை சாக்காக வைத்துக் கொண்டு ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்தான்.

புறவழிபாடுகளை மூன்றாகப் பிரிக்கலாம். வேள்விகள், யாகங்கள் மூலம் செய்யப்படும் வேத வழிபாடு. கோவில்களில் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும் ஆகம வழிபாடு(இந்த ஆகம விதிகளெல்லாம் மனக் கட்டுப்படிற்காகத்தான்).
தனிமனித வழிபாடு - நித்திய வழிபாடு, காமிய வழிபாடு, மூர்த்தி - தலம், தீர்த்தம், தந்திரம் - மந்திரம், எந்திர வழிபாடு என மூன்று நிலைகளில் வழிபாடுகள் அமைந்துள்ளன. இதை குணங்களின் அடிப்படையிலும் பிரிக்கலாம். அதாவது சாதாரண உணர்ச்சிகள், ஆசைகள், வேண்டுதல்கள் இவற்றோடு கூடிய வழிபாடு தாமச வழிபாடாகும். உலகியல் வாழ்க்கை, பொருள், பணம், பதவி, புகழ், வாய்ப்பு வசதிகளுக்காக செய்யப்படும் வழிபாடு இராஜசம வழிபாடாகும். வினைகளை சுட்டெரித்து, ஆன்ம விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படுவது சத்துவ வழிபாடாகும். மன செகிழ்ச்சி, அறிவு முதிர்ச்சி, யோகப் பயிற்சி இல்லாதவர்கள் இறைத் தொண்டு புரிந்து, பழவினை நீக்கவும், மனதைப் பக்குவப்படுத்தவும் இவ்வழிபாட்டு முறைகள் உதவுகின்றன.

வழிபாட்டு முறைகளில் உள்ள மெய்ப்பொருள் விளக்கங்களைப் பார்க்கலாம்.
ஓங்காரம் - பிரணவம், பிள்ளையார்.
நடராசர் - ஐந்தொழில் வடிவம்.
முருகன் - ஓங்காரம், ஆறாதார வடிவம்.
லிங்கம் - அருவுரு வடிவம், ஜோதியின் உருவம்.
திரிசூலம் - மூவாற்றல், முச்சக்தி.
தேங்காய் - மும்மலம் நீக்கல்.
காவடி - சிவசக்தி இணைப்பு, ஆறாதார இணைப்பு, குண்டலினி உச்சி இணைப்பு.
மலையேறுதல் - அக்குபிரஷர் மருத்துவம்.
தீமித்தித்தல் - அக்குப் பஞ்சர் மருத்துவம்.
திருமுழுக்கு - இறையருளை ஞான நீராக பாவித்து, மருளான மல அழுக்குகளைக் கழுவுதல். மேலும் மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது அபிஷேகப் பொருள்களுக்கு ஏற்ப மின்கடத்தும் திறன் திருமேனியில் மாறுபடும். இதன் அதிர்வுகள் மூர்த்தத்தின் அடியில் உள்ள தாமிரத் தகட்டில் பாய்ந்து, சேமிக்கப்பட்டு, எதிரே உள்ளவர்கள் மீது பரவும்.
கற்பூர தீபம் - ஜீவான்மா பரான்மாவுடன் கலத்தல், இறைவன் ஒறிமயமானவன் என்பதை உணர்த்துதல், மன இருளை அகற்றி ஞான ஒளியின் மூலம் ஆன்மாவை உணர்தல்.
பூணுல் - உயிர் சக்தியை மேம்படுத்துவதற்காக பூண வேண்டிய நூல்.
நாக வழிபாடு - குண்டலினி வழிபாடு.
தோப்புக் கரணம் - குண்டலினியை எழுப்பும். வழிபாட்டுப் பாடல்கள் - குண்டலினியை எழுப்பும், ஆறு ஆதாரங்களைத் தூண்டும்.
பைரவ ராகம் - மூலாதாரத்தைத் தூண்டும்.
ஶ்ரீராகம் - சுவாதிட்டானத்தைத் தூண்டும்.
மல்லரராகம் - மணிபூரகத்தைத் தூண்டும்.
வசந்த ராகம் - அனாகதத்தைத் தூண்டும்.
இந்தோளம் - விசுத்தியைத் தூண்டும்.
கர்நாடகராகம் ஆக்கினையைத் தூண்டும்.
இனி குடமுழுக்கு பற்றி பார்ப்போம்.
குடம் - உடல்
குட நீர் - குருதி
குடத்துள் மணிகள் - சுக்கிலம்
தர்ப்பை - நாடி
நூல் - நரம்புகள்
துணி - தோல்
மந்திரம் - பிராணன்
தேங்காய் - தலை, முகம்
தேங்காய் மூடி - சிகை
மாவிலைகள் சிவ முடிகள்(சடை)
தீர்த்த வாரி - உயிர்கள் இறைவனின் அருட்கடலில் மூழகி வீடுபேறு அடைதல்.
இப்படி பல வகையான தத்துவங்களை பாவனை மூலமாக மனதில் இருந்தி, அதை வலுப்படுத்தி, இறைவுணர்வை மேம்படுத்துவதே புற வழிபாடுகளின் செயல்.

Monday, December 25, 2017

திருப்பூர் தொழில் நிலை கவலைக்கிடம்!!

கடந்த 32 வருடங்களாக திருப்பூரில் வசிக்கின்றேன்! இதில் 25 வருடங்களாக
சொந்தமாக தொழில் செய்கின்றேன்!
கடந்த நான்கு வருடங்களாக
தொழில் மிக மோசமான நிலைக்கு
சென்று கொண்டுள்ளது.
அதிலும் கடந்த 6 மாதங்களாக
தொழிலை நினைத்து கண்ணீர்
விடாத நபர்களை ஒட்டுமொத்த திருப்பூரில்
விரல் விட்டு எண்ணிவிடலாம்!
ஏன் இந்த நிலமை? ஒரு சிலருக்கு
மட்டும்தான் பிரச்சினை என்றால்
அவர்களின் தவறு நிர்வாகத்தில் தவறு
என்று கூறலாம்!

ஒட்டுமொத்த திருப்பூருக்கே இந்த நிலமை என்கிறபோது எங்கோ தவறு நடக்கிறது
என்பது உறுதியாக தெரிகிறது
இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் அரசாங்கத்தையோ ஆட்சியாளர்களையோ
குறைசொல்வது எளிதான ஒன்று ஆனால்
அரசு திட்டங்களால் 10-15 % பாதிப்பு என்பது உண்மை!
ஆனால் உண்மையான பாதிப்பு என்பது
நாமாக ஏற்படுத்திக்கொண்டது.
சில பாதிப்புகள் வெளிநாட்டு இறக்குமதியாளர்களால் நம்மீது திணிக்கப்பட்டவை!

பனியன் ஆடைகள் தரமாக இருக்கவேண்டும்,
நன்கு உழைக்கவேண்டும்,
சலவை செய்யும் போது அதன்
வடிவம் மாறக்கூடாது,
அந்த ஆடைகளில் தீங்கு விளைவிக்கின்ற
எந்த இராசாயண பொருட்களும் இருக்கக்கூடாது,
அதுவும் குழந்தைகளின்
ஆடைகளில் செய்யப்படும் அலங்காரங்கள்
மிகவும் மென்மையாகவும் சருமத்திற்கு
தீங்கில்லாமல் இருக்கவேண்டும் என்பதில் ஆடை ஏற்றுமதியாளர்கள் மிகவும் கடுமையாக
கடைபிடிக்கின்றனர் அவற்றை பரிசோதனை
செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது
அந்த தரத்தில் இங்கு யாரும் சமரசம் செய்துகொள்வதில்லை.

ஆனால் பனியன் இறக்குமதி நாடுகளுக்கு மறைமுகமாக வருமானம் வருவதற்காக
இறக்குமதியாளர்களின் நாட்டை சார்ந்த சோதனை ஆய்வகங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு சிறிய ஆர்டருக்கும் 30-50 சோதனைகள்
என்ற ரீதியில் வருடத்திற்கு பல
நூறு கோடி ரூபாய்களை
ஏற்றுமதியாளர்களிடம் பறிப்பதால்
உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்தது.
பல ஆர்டர்கள் செய்யும் ஒரு பருவத்தில் ஒன்றிரண்டை மட்டும் சோதனை செய்து
அதன் முடிவுகளை அனுப்பினால் போதாதா?
அதே மூலப்பொருட்களையும் அலங்காரப்பொருட்களும் தானே அனைத்து
ஆர்டர்களுக்கும் உபயோகித்திருப்பார்கள்
இதை இறக்குமதியாளர்களுக்கு கூறி இந்த செலவுகளை குறைத்திருக்கவேண்டும்.

இந்திய தொழிலாளர் சட்டங்களும், தொழிற்சாலை விதிகளும் தொழிலாளர் பாதுகாப்பும் மிக தெளிவாக இருக்கின்றன!
மேலும் பெரும்பாலான நிறுவனங்கள்
அவற்றை பின்பற்றுகின்ற போதும்,
கம்ப்ளையன்ட்ஸ் என்ற பெயரில்
இறக்குமதியாளர்களின் அதி பயங்கரமான
அர்த்தமற்ற கட்டுப்பாடுகளை ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் அமல்படுத்துவதாலும்
அதற்கான லைசென்ஸ் அவர்களிடம் பெறுவதற்கான நிலைமையும் அதற்கான
செலவுகளும் இந்த தொழிலை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டது!

உற்பத்திக்கான தேவையை விட
பலமடங்கு இயந்திரங்கள் பனியன்
உற்பத்திக்கு அமைத்ததும்,
பனியன் சார்ந்த அனைத்து சார்பு தொழில்
நிறுவனங்களையும் ஒரே இடத்தில்
கொண்டுவந்தால் தயாரிப்பு விலை குறையும் என்கிற வெளிநாட்டு ஆடை இறக்குமதியாளர்களின்
தவறான ஆலோசனைகளும் நிர்பந்தங்களும்,
நான்கைந்து நாடுகளுக்கு உண்டான
ஆடைகளை ஒரே இடத்தில்
தயார் செய்ய வசதிகளும் இடமும்
இருக்கின்ற போதும்
நான்கு விதமான ரெக்கார்டுகளை
பராமரிப்பது சிரமமென்றும் மற்றும்
அந்த இடத்தில் பல்வேறுவகையான
நடைமுறை மாற்றங்களை
செய்யவேண்டியுள்ளதால் ஒவ்வொரு பிராண்டிற்கும் தனி கட்டிடம் அதற்கான செலவுகள் இவையெல்லாம்தான் இன்று தொழிலதிபர்களின் கழுத்தை நெரிக்கிறது!

எவ்வளவுதான் தெளிவாகவும் முறையாகவும் ஆடைகளை உற்பத்தி செய்தாலும் கூட
சில நேரங்களில் மிக அவசரமாக ஏற்றுமதி
செய்யவேண்டியபோது தொழிலாளர்களின்
ஒத்துழைப்புடன் மிகைநேர வேலையும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை
செய்யவேண்டிய சூழல் வரும்போது இறக்குமதியாளர்களின்
ஏஜன்டுகள் காவலர் போலவும்
பனியன் தொழிலதிபர்கள் சாராயம் காய்ச்சுபவர்களை
பிடிப்பது போல நள்ளிரவு நேரங்களிலும்
ஞாயிறுகளிலும் திடீர் ஆய்வு செய்து குற்றவாளிகளை போல நடத்துவதும்
ஆர்டரை கேன்சல் செய்வதும் ஏற்றுமதியாளர்களை கருப்பு பட்டியலில்
சேர்த்து தொழிலை அடியோடு ஆடை இறக்குமதியாளர்கள் நசுக்குகின்றனர்.

வெளிநாட்டு இறக்குமதியாளர்களின்
அனைத்து அடக்குமுறையான விதிகளை
பின்பற்றினாலும் அதற்கான விலையை தருவதில்லை! இந்த விதிகளில் ஒன்றிரண்டை கூட பின்பற்றாத கிட்டத்தட்ட
30% டியூட்டி ட்ராபேக்
மற்றும் திருப்பூர் தொழிலாளிகளுக்கான சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு
சம்பளம் மட்டுமே தருகின்ற வங்கதேசத்தை ஒப்பிட்டு அதன் விலைக்கு தயார் செய்ய சொல்வதும் நிர்பந்திப்பதும் நடக்கிறது!

ஒவ்வொரு நிறுவனமும் கட்டமைப்பிற்காக
பல லட்சங்கள் செலவு செய்தாலும்
வெளிநாட்டு இறக்குமதியாளர்கள்
எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
ஆர்டரை நிறுத்துவும் நடக்கிறது!

ஏற்கனவே நலிவுற்ற பல நிறுவனங்கள்
நான்கைந்து வருடத்திற்கு முன்னமே தனது
உற்பத்தியை நிறுத்திவிட்டன!
பெருந்துறை சிப்காட்டில் 6-7 வருடங்களாக
திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு சார்ந்த பல சாய ஆலைகள் மூடிக்கிடக்கின்றன!!
அவற்றின் முதலீடுகளால் மற்றும் அதன் வங்கிக்கடனை கட்டியதாலும் கட்டமுடியாததாலும் பல நிறுவனங்கள் நலிவடைந்துவிட்டன!!
நஷ்டமான நிறுவனங்களின் இயந்திரங்களை எளிதில் விற்று வங்கிக்கடனையும் அடைக்க முடிவதில்லை!

இதுபோன்று பல பிரச்சினைகளில் திணறிக்கொண்டிருந்த திருப்பூர் பனியன்
தொழில் உயர்பண மதிப்பிழப்பின் போது
உள் நாட்டு வணிகம் மற்றும் கணக்கில்
காட்டாத இரண்டாம் ரக ஆடைத்தொழில்
பாதிப்படைந்தாலும் ஏற்றுமதி வணிகத்திற்கு
அதிகப்பாதிப்பில்லாமல் சென்று கொண்டிருந்தது!!

ஆனால் GST வரிவிதிப்பின் போது
ஆரம்பத்தில் பனியன் சார்பு தொழில்களுக்கு
18% என்ற நிலை இருந்ததால் பலபேர்
தொழிலை தற்காலிகமாக நிறுத்தியதும் உண்மை. அதன்பின்னர் வரி 5% அளவில் மாறியதால்
பாதிப்பு குறைந்தது!!
இருந்தாலும் ஏற்றுமதியாளர்களுக்கு
வரவேண்டிய முந்தைய ட்ராபேக்
மற்றும் வாட் ரீபண்ட், GST ரீபண்ட்
போன்றவை இன்னும் முழுமையாக
வந்தடையவில்லை. அரசு ட்ராபேக்கிற்கு
மாற்றாக வேறு சில சலுகைகளை அறிவித்திருந்தாலும் அவை
போதுமானதாக இல்லை!

தொழிலுக்கு சிரமமான இந்த
காலகட்டத்தில் வங்கிகளும்
பொறுப்பில்லாமல் தங்கள் நிலையை
மேலும் கடுமையாக்கியுள்ளன!
ஒரு மாதத்திற்கும் மேலாக தவணை பாக்கியிருந்தாலும்
வசூல் செய்வதில் கடுமையாக
நடந்துகொள்கின்றன.

இத்தனை பிரச்சினைகள் பனியன்
தொழிலில் இருந்தாலும் GST மட்டுமே அனைத்திற்கும் காரணம் என்பதுபோன்ற
ஒரு தோற்றத்தை உருவாக்குவதில் பலர்
முனைப்பாக இருக்கிறார்கள்!!
இன்றைய சூழலில் GST யை
முழுமையாக நீக்கினாலும் தொழில் மேம்பாடு
அடையாது! அதற்குப்பதிலாக வரிவிதிப்பில்
சில விதிவிலக்குளையும் ஏற்றுமதிக்கான
பல நாடுகளில் செய்வது போன்ற மின்சார சலுகை, பெட்ரோல் டீசல் வரி சலுகை
போன்ற சில சலுகைகளை அளித்தும்
போட்டி நாடான வங்கதேசத்தின் பனியன் ஆடைகளை இந்தியாவிற்குள் வரியில்லாமல்
கொண்டுவருவதை கட்டுப்படுத்தலாம்!

பனியன் தொழில் பிரச்சினையை தீர்க்க
மத்திய மாநில அரசுகள் திறந்த மனதுடன்
ஒரு நடுநிலையான குழு அமைத்து
பிரச்சினைகளை அலசி
உடனடி தீர்வு மற்றும் நீண்ட காலத்தீர்வு
இரண்டையும் கண்டறிந்து உதவவில்லையென்றால்
பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள்
வேலை இழப்பார்கள்
ஒரு சிறப்பான தொழில்நகரம் அதன் முக்கியத்துவத்தை இழப்பதோடு இந்த தொழில் வேறு மாநிலத்திற்கு சென்றுவிடும்!
-திருப்பூர் நலனில்
ஜூப்ளி பாலு

கோவையில் 20,00,000 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை வைர சுரங்கம்


---------------------

அதிர்ச்சி தகவல் .

கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பூமியை வாங்குவதற்காக அதன் 100 வருட பழமையான கையெழுத்து  ஆங்கிலேயர்கள் கால பத்திரங்களை பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்.

காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உள்ளே  உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அனைத்துமே வைர சுரங்கம் என 100 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர் கால பத்திரப்பதிவுகள் காட்டியுள்ளன

இந்த காருண்யா பல்கலைக்கழகத்தின் நடுவில் உள்ள இந்த இயற்கையான மிகப் பழமையான வைர சுரங்கம் 2000 வருடங்களாக சேரமன்னர் "கொல்லிரும்பொறை மாக்கோதை" காலத்திலிருந்து  செயல்பட்டுள்ளது.

இந்த இயற்கை வைர சுரங்கம் மற்ற வைர சுரங்கம் போல் பல நூறு மீட்டர்கள் தோண்டி  பூமியை பிளந்து கிடைக்கும் சுரங்கம் இல்லை.

இயல்பாக சில அடிகளில் கற்கள் போன்று பல நூறு  வைரக்கற்கள் கைகளாலேயே எடுக்கலாம்.

இந்த காருண்யா பல்கலைக்கழகத்தின் நடுவில் உள்ள இந்த வைர சுரங்கம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய " இயற்கை வைர சுரங்கம்"

திப்பு சுல்தான் கோவையில் படையெடுத்ததே இந்த வைர சுரங்கத்திற்காகதான்.

இது மன்னர்கள் காலம் முதல் செயல்பட்டதாகவும் சில நூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்கர்கள் பல ஆயிரம் வைரக்கற்களை லண்டனுக்கு கடத்தி சென்றனர்.

இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் இந்த இந்த இயற்கை வைர சுரங்கத்தை இழக்க மனமில்லாமல் நூதனமாக கிறிஸ்தவ மிஷனரிகள் மூலமாக கல்வி பணிக்கு என இதை பட்டா மாற்றம் பண்ணி கிறிஸ்த பள்ளி கல்வி கூடங்களை உருவாக்கி பல ஆயிர ஏக்கர்" இயற்கை வைர சுரங்கத்தை " " காருண்யா பல்கலைக் கழகமாக" மாற்றிவிட்டனர்

இன்றும் இந்திய அரசாங்கத்திற்கு தெரியாமல " இயேசுவின் புனித மண்" என கூறி ஆயிரக்கணக்கில் வைரக்கற்களை  வெறும் புனித பிரசாத மண்என கூறி  பல நாடுகளுக்கு காருண்யா பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுமதி செய்கிறது

மத்திய அரசும்

மாநில அரசும்

காருண்யா பல்கலைக்கழகத்தின்  நிலத்தின் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட   நில பதிவேடுகளை ஆராய்ந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள இந்த "இயற்கை வைர சுரங்கத்தை"  நாட்டுடமையாக்க வேண்டும்

இந்த வைர சுரங்கத்தின் தோராய மதிப்பு குறைந்த பட்சம் 20,00,000 கோடி

தமிழகமே சொர்க்க பூமியாக மாறும்

வைர சுரங்கத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் ஆங்கிலேய  கைக்கூலி  போலி கல்வி நிறுவனங்களின் உள்ளே அரசு புகுந்து அதிரடி சோதனை நடத்தினால் கோவை உலக வைரக்கற்களின்  தலை நகரமாகும்

செய்யுமா தமிழக அரசு

Saturday, December 23, 2017

தினம் ஒரு மூலிகை

🌹🌹

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

🍁திங்கள் – அருகம்புல்☘

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🍁செவ்வாய் – சீரகம்☘

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

🍁புதன் – செம்பருத்தி☘

இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🍁வியாழன் – கொத்துமல்லி☘

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

🍁வெள்ளி – கேரட்☘

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

🍁சனி – கரும்பு சாறு☘

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

🍁ஞாயிறு – இளநீர்☘

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.

நன்றி. .  சித்தர்கள் நுண்ணறிவு. .

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.நன்றி ஏ ஆர் லெட்சுமணன்