Friday, January 27, 2017

சிதம்பரம் ரகசியம்

இந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

நோயின்றி வாழ:

சிதம்பரம் நடராஜர் கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவே தான், நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த சக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்து உள்ளன!

கால் பெருவிரலில்...:

சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான், மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர்; அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை
புகுத்திய ஞானிகள்!

நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவீன கருவிகள் ஏதும் இல்லாத, அக்காலத்தில், இதை முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது, நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது! அணுத் துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, அதை பூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனை தான்!

அறிவியல் நூல்:

இதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்த திருமூலரின் சிந்தனை ஆற்றலும், சக்தியும் மகத்தானது. திருமூலரின் திருமந்திரம், உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர, இன்றைய அறிவியலுக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்! 'சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம்' என்று பலரும், பல தகவல்களை கூறிவரும் வேளையில், கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை. முன்னோர் செய்த அனைத்து செயல்களும், ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது. மன்னர்கள் கட்டிய பிரமாண்டமான கற்கோவில்களுக்கு, பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதைக் கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.

ஒன்பது வாயில்:

மனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத் தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது; இது, ஒரு மனிதன், தினமும் சராசரியாக, 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன. இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். திருமூலர், திருமந்திரத்தில், 'மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே' என்று கூறுகிறார். அதாவது, 'மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்' என்ற பொருளைக் குறிக்கிறது.

பஞ்சாட்சர படிகள்:

பொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது; இது, நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய, ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது, 'சி, வா, ய, ந, ம' என்ற ஐந்து எழுத்தே அது! கனகசபை, பிற கோவில்களில் இருப்பதை போன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபை தாங்க, நான்கு தூண்கள் உள்ளன; இது, நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. பொன்னம்பலத்தில், 28 தூண்கள் உள்ளன. இவை, 28 ஆகமங்களையும்; சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும், 64 + 64 மேற்பலகைகளை (பீம்) கொண்டன; இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றன. பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும்; அர்த்த மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்களும், 18 புராணங்களையும் குறிக்கின்றன.

ஆனந்த தாண்டவம்:

சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, வரும், ?ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆகாய உருவில் இறைவன்!

சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், 'சிதம்பர ரகசியம்' என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

அடி-முடி

சிவன் கோயிலில் கருவறையை சுற்றி வலம் வரும்போது சிவன் சன்னதிக்கு நேர் பின்புறம் லிங்கோத்பவர் (அண்ணாமலையார்) காட்சியளிப்பார். இதில் சிவபெருமானின் உச்சி, பாதத்தை காணமுடியாது. அடி-முடி காணமுடியாத பெருமானே சிவன் என்பதன் தாத்பர்யமே இது.சிவன், விஷ்ணு, பிரம்மா இடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, சிவபெருமான் கிடுகிடுவென வளர்ந்து வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுக்கிறார். அவரது தலையையும் பாதத்தையும் காண முடிகிறதா என்று விஷ்ணு, பிரம்மாவிடம் கேட்கிறார்.

பாதத்தை பார்க்க பன்றி வடிவம் எடுத்து பாதாளம் நோக்கி செல்கிறார் விஷ்ணு. அன்ன வடிவம் எடுத்து பறக்கும் பிரம்மா, தலையை பார்க்க மேல்நோக்கி செல்கிறார். பல யுகங்கள் பயணம் செய்தும் இருவராலும் சிவபெருமானின் அடி, முடியை காண முடியவில்லை. அடி, முடி இல்லாத ஜோதி சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார் என்பது புராணம்.

63 நாயன்மார்களின் பெயர்கள்

சமயங்களுள் மிகச் சிறப்பாக போற்றப்படுவது சைவ சமயம் ஆகும். ஆதி காலம் முதல் இன்று வரை அழியாப் புகழ், பெற்று இன்று வரை பல சமயத்தவராலும் , போற்றப்படும் சிறப்பினை உடையது சைவ சமயம் ஆகும் . அத்தகைய சிறப்புடைய சைவ சமயத்தின் புகழை நிலை நாட்டவும், சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதை மட்டுமே தன் வாழ்வியல் குறிக்கோள் என்று வாழ்ந்து, வந்த பல்வேறு சிவ பக்தர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். 63 நாயன்மார்கள் ஆவார்கள் இவர்களின் முக்கிய குறிக்கோள், சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதும் , சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதும் ஆகும். இவர்களின் சிவதொண்டை எண்ணிப் பார்த்தால் இன்றும் கூட நம் நெஞ்சம் ஆனது உருகும், இத்தகைய சிறப்பினை உடைய 63 நாயன் மார்களின் பெயர்கள் பற்றி இங்கு காண்போம். 1. சுந்தரர் 2.திருநீலகண்டர் 3.இயற்பகையார் 4.இளையான்குடி மாறனார் 5.மெய்பொருள் நாயனார் 6 .விறன்மீண்டர் 7.அருள் நீதியார் 8.எறிபத்த நாயனார் 9.ஏனாதியார் 10.கண்ணப்பர் 11.குங்கிலயக்கலயர் 12.மானக்கஞ்சாரன் 13.அரிவாட்டாயர் 14.ஆனாயர் 15.முருகன் 16.மூர்த்தி 17.பசும் பதியார் 18.நந்தனார் 19.திருக்குறிப்புத் தொண்டர் 20. சண்டேசுவரர் 21.திருநாவுக்கரசர் 22. குலச்சிறையார் 23.பெருமிழலைக் குறும்பர் 24.காரைக்கால் அம்மையார் 25.அப்பூதியடிகள் 26.திருநீலநக்கனார் 27.நமிநந்தியடிகள் 28.திருஞான சம்பந்தர் 29.கலிக்காமர் 30.திருமூலர் 31.தண்டியடிகள் 32.மூர்க்கனார் 33.சோமாசிமாறன் 34. சாக்கியர் 35.சிராப்புலியார் 36.சிறுத்தொண்டர் 37.சேரமான் பெருமாள் 38.கணநாதனார் 39.கூற்றுவனார் 40.புகழ்ச் சோழன் 41.நரசிங்க முனையரையர் 42.அதி பத்தர் 43.கலிகம்பனார் 44.கலியனார் 45.சத்தி நாயனார் 46.ஐயடிகள் காடவர்கோன் 47.கணம் புல்லனார் 48.காரியார் 49.கூன்பாண்டியன் 50.வாயிலார் 51.முனையடுவார் 52.கழற்சிங்கன் 53.இடங்கலியார் 54.செருத்துணையார் 55.புகழ்த்துணையார் 56.கோட்புலியார் 57.பூசலார் 58.மங்கையர்க்கரசியார் 59.நேசநாயனார் 60.கோச்செங்கணான் 61.நீலகண்ட யாழ்ப்பாணர் 62.சடையனார் 63.இசை ஞானியார் இத்தகைய சிறப்பினை உடைய 63 நாயன் மார்களின் பணிகள் என்றுமே அழியாப் புகழ் பெற்று சிவபெருமானுக்கு புகழ் பெற்றுத் தருபவை ஆகும்.

சிவன் உருவாக்கிய ஆதிகும்பேஸ்வரர் கோவில்

கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. உலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றியும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார். பிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடத்தைமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான், தரை தட்டிய கும்பத்தின் மீது அம்பைச் செலுத்த, கும்பம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். கும்பம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் வீற்றிருக்கிறார். இந்த ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் கொண்டுள்ளது. கிழக்கே உள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். காம்பிகை தனி சன்னதி கொண்டுள்ள அருள்மிகு மங்களாம்பிகை வரப்பிரசாதி. வழிபடுபவர்களுக்கு மங்களங்களைத் தருவதால் மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். அம்மன் சக்தி பீடங்களில் மந்திர பீடம் இங்குள்ளது. 72ஆயிரம் கோடி மந்திரங்கள் பீடத்தின் அடியில் உள்ளன. இதில் எழுந்தருளியவர் என்பதால் மந்திர பீடேஸ்வரி என்றும் போற்றப்படுகிறாள்.  இக்கோவிலில் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முகங்கள் இருந்தாலும் கைகள் மட்டும் 12 இல்லாமல் 6 மட்டுமே உள்ளது.

Thursday, January 26, 2017

புத்தர் கூறுகிறார் !

மூச்சு விடுதலுக்கு எந்த முறையையும்
பயன் படுத்தாதே ...

மூச்சு விடுதல் இயல்பாக இயற்கையாக
இருக்கட்டும் ...

மூச்சு விடுதலை சாதாரணமாக ஒரு சாட்சியாக
இருந்து கவனி ...

உன்னுடைய பிராணன் அல்லது மூச்சு விடுதல்
மூலமாகத் தான் நீ ஆன்மாவோடு இணைக்கப்
பட்டு இருக்கிறாய் ...

மூச்சு விடுதல் மூலமாகத் தான் ஆன்மாவும்
உடலும் ஒன்றாக சேர்க்கப் பட்டுள்ளது ...

மூச்சு விடுதல் மூலமாகவே உடலில் இருந்து
உடல் அற்ற தன்மைக்கு செல்ல முடியும் ...

நீ மூச்சைக் கவனித்துக் கொண்டே இருக்கும்
போது உன்னுள் மாபெரும் அமைதி நிகழும் ...

உன்னுடைய விழிப்புணர்வு முழுமையாக
இருக்குமானால் மூச்சு விடுதலின் சிறிய
மாறுதல்கள் கூட கவனத்தில் கொள்ளப்படும் ...

ஓஷோ

அருட்தந்தை அவர்களே, உயிர்ச்சக்தி ஜீவ வித்துக்குழம்பில் உள்ளதாக கூறுகிறீர்கள

கேள்வி :
=
அருட்தந்தை அவர்களே, உயிர்ச்சக்தி ஜீவ வித்துக்குழம்பில் உள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் குழந்தைகளுக்கு பருவ வயது வந்தவுடந்தான் வித்துக்குழம்பு உண்டாகும். அதற்குமுன்பு உயிர்ச்சக்தி எங்குள்ளது ? அதேபோல் முதுமை அடைந்ததும் விந்து சக்தி குறைந்துவிடுகிறது ; அப்போது உயிர்ச்சக்தியும் குறைவாக இருக்குமா ?

பதில் :
======

தாய் தந்தை விந்து நாதத்தைக் கொண்டேதான் குழந்தை தன் உடலைக் கட்டிக்கொண்டு வருகிறது. உடல் வளர்ச்சியோடு விந்துவின் அளவும் வளர்ந்துகொண்டே வருகிறது.. 3 வயதிற்குள் மூளையை முழுமையாக கட்டிக்கொள்ளும்.

சுமார் 12 வயது வரை உடலைக்கட்டிக்கொள்வதற்கே விந்து செலவாகும். மீதம் இருக்காது.

உடல் வளர்ச்சிக்கு செலவானது போக எந்த வயதில் விந்து உபரியாக வருகிறதோ அதுதான் பருவமடைதல் (Age Of Maturity) . மேல்மிச்சம் ஏற்படுகிறபோது கழிவு ஏற்படுகிறது.

அப்போதுதான் கீழே அணு அணுவாக முதுகுத்தண்டு வழியாக வந்து சுரப்பியில்(Sexual Gland) தங்குகிறது. அதுவரை அது மூளையிலேயே தங்கி இருக்கும்.

விந்து உற்பத்தி மூளையில் ; தங்குமிடம் கருமையம் என்னும் உடல் மையத்தில்.

விந்து நாதம் இணைந்த முதற்கொண்டு உயிர் பிரியும் வரைக்கும் - குழந்தைகளாக இருந்தாலும் - முதியவர்களாக இருந்தாலும் விந்தானது சீவகாந்த மின் குறுக்கால் (Short Circuit) கொட்டிப்போனால்; அதுதான் மரணம்.

பருவ வயதிற்குள் குழந்தைகள் இறந்தால் மூக்கில், கண்களில், நீர் வரும்.
பெரியவர்களுக்கு பால்சுரப்பியில்(Sexual Gland) மின்குறுக்கு ஏற்படும்; விந்து நாதம் முறிந்து பிறப்புறுப்பு வழியே கொட்டிவிடும்.

எல்லோருக்கும் வாழ்வின் கடைசி வரை விந்து நாதம் இருக்கும். ஏழாவது தாதுவான விந்தின் உற்பத்தி இளம்வயதில் அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குறைவாக இருக்கும்; ஆனால் உயிரைத்தாங்கும் அளவு இருக்கும்.

வயது முதிர்ச்சியில் விந்துவின் அளவும், அதற்குத்தகுந்தவாறு உயிர்ச்சக்தியின் அளவும் குறையும். அதனால் தான் முதுமையில் பலவீனம் ஏற்படுகிறது, உறுப்புகள் செயலிழக்கின்றன.

-வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் !

மனிதநேய பதிவு,,,

என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.

அடுத்து வந்த இளைஞர் ten coffee five suspended என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார்.

பின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார்.

என் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன இது? என்று கேட்டார்.

பொறுங்கள் என்றார் அவர் நண்பர்.

சிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார்.
Any suspended coffee என்று கேட்டார்.

Counter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார்.

என் நண்பருக்கு மெய் சிலிர்த்தது. என்ன ஒரு மனித நேயம்.

வறுமைக்கோட்டில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கு நேர்மையான உதவி.

இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த பழக்கம் நேபாள் நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.,,

பிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர் எல்லாம் தெய்வமே.

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?

நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?

ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.

மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.

மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..

அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .

அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.

இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

#நம்_முன்னோர்கள்_ஒன்றும்_மூடர்கள்_அல்ல..!

மாணவர்களுக்கு யோகா கல்வி (Yoga education for students) 📚

📚

🌷 *மனிதனும் வாழ்வும்* 🌷

🇮🇳 * இயற்கையின் உச்சகட்ட நிகழ்ச்சி மனிதன்.

*  இயற்கைப் பொருட்களையும், சமுதாயத்தோடு இணைந்து ஈட்டிய பல  உற்பத்திப் பொருட்களையும்,  உடல்நலம் காக்கவும் உலக இன்பங்களைத் துய்க்கவும் பயன்படுத்தி வாழ்பவன் மனிதன்.

* பொருளாலும் அறிவாலும் எல்லோரும் இன்பமாக வாழ உதவுபவன் மனிதன்.

*மனிதன் வாழ்வாங்கு வாழ என்ன தேவை....???*

* இயற்கையின் அமைப்பு, இயக்கம், விளைவுகள் பற்றிய அறிவு

* சக மனித குலத்தோடு நட்புநலம் பேணும் அறநெறி அறிவு

* இயற்கை வளங்களைக்கெடுக்காமல் தேவையான பொருட்களை மட்டும் ஈட்டும் தொழிலறிவு

* உடல்நலம் காக்கும் அறிவு

* இன்ப துன்பங்களுக்கான செயல்விளைவு நீதி (Law of nature) அறிவு

* மன நிறைவுக்கு மனம் பற்றிய அறிவு

மேற்கண்ட அறிவுக்கான கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.

"மூளைத்திறன் (Brain power) மேம்பாட்டுக்கான பயிற்சிகள்"

* இயங்காத மூளை செல்களை இயங்கச்செய்யவும், சிந்தனைத்திறன் ஓங்கவும் தவப்பயிற்சி (தியானம், Meditation) மிகவும் அவசியம்.

* தவத்தில் ஓங்க  உயிரோட்டத்தை சீராக வைத்திருக்க உடற்பயிற்சி

* மாணவப் பருவத்தில் பாலுணர்வை ஒழுங்குபடுத்த, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி சீவவித்துக்குழம்பையும்
மூளையில் இருப்பு வைத்து அதை அமுத ரசமாக  மாற்றும் காயகல்பப்பயிற்சி

* நல்லதையே எண்ணி நல்லதையே செய்து பழக அறுகுண சீரமைப்பு பண்பாட்டுப்  பயிற்சி

*வாழ்க்கையில் வெற்றி என்பது என்ன...???*

இயற்கைத்தத்துவ அறிவிலும், தொழிலறிவிலும், ஒழுக்க பழக்க அறிவிலும் உயர்ந்து அவ்வறிவின் வழியில்  வாழ்ந்து உடல்நலம் காத்து, தேவையான பொருட்களை ஈட்டி, மக்கள் உறவில் இனிமைகாத்து, உலக இன்பங்களை அனுபவித்து மனநிறைவு பெறுவதே வாழ்க்கையில் வெற்றி

இவ்வகைக் கல்வி தான் மாணவப் பருவதில் அளிக்கப்பட வேண்டிய யோகா (ஆன்மீக) கல்வி.
   
கல்வித்துறை அரிஞர்களே...!!! யோகா கல்வி மாணவர்களுக்கு கிடைக்கப்பெற ஆவனசெய்வீர்.....!!! 🇮🇳

🌹 அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி 🌹

கண்ணாடிப் பயிற்சி

ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த
தவமுறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை.

இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்,
பல்வேறு தரப்பட்ட மக்களால், பல்வேறு வடிவங்களில்பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, வருகிறது.

கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச் சிறந்த தவமுறை.

கண்ணாடிப்பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்
அவருக்குகீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,

1.ஆன்மா விழித்துக் கொள்கிறது
2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து
தனித்து இயங்கும்தன்மையைப் பெறுகிறது
3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான
திறவுகோலைப்பெறுகிறது

மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான ஒரு பாலமாக
கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது.
கண்ணாடிப் பயிற்சிமுறையை சுருக்கமாக ஞானத்திற்கான
திறவுகோல் என்றுசொல்லலாம்.
சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி
சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது.
இதனை இன்னும்சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.
சூக்கும உடல்விழிப்புற்று,
காரண உடல் ஜோதி மயமாகிறது

கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள்
அனைத்தும் மூடப்பட்ட நிலையில் , அதனை திறக்கும்திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டுவருகிறது
என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லை.
கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும்
அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டியவழிமுறைகள்

1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி
ஒன்றேகால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்.

2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமரவேண்டும்.

3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்.

4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறுயாரும் பயன்படுத்தக் கூடாது.
மறைவாக ஒரு துணியால் மூடிமறைத்து வைத்து விட வேண்டும்.

5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல்கட்டு
திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டு
கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்

6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரைசெய்யலாம்
அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்

கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்
பலவிதநிலைகளில் செய்யப்பட்டு வருகிறது.
அதில் ஒரு சில கண்ணாடிப்பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.

கண்ணாடிப் பயிற்சி முறை 1

1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்யவேண்டும்.

2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்.

3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்.

4.பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்.

5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்.

கண்ணாடிப் பயிற்சி முறை 2

1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்.

2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்.

3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்.

4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்.

கண்ணாடிப் பயிற்சி முறை 3

1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்யவேண்டும்.

2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்.

3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்.

4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்.

5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்.

இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்திவந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்கு கிடைக்கும்.

கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்

கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும்.
இதுகண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர
அதுவே முழுபலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்துஎதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரியவசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்.

கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்துசெய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முகவசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெறவேண்டுமானால்
சர்வ சித்தி தனா உறர்ஸன சங்கல்பம் என்ற ஒருமந்திரம் இருக்கிறது .
அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்துகண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும்வசியமாகும்.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் சர்வ சித்தி தனா உறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம்.

கண்ணாடி என்பது யந்திரம்.

தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான்
கண்ணாடிப்பயிற்சியின் சூட்சும வி‘ஷயம் நமக்குத் தெரிந்து விடும்.

கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ

கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும்
செய்துவந்தால் பலன் தெரியும.

நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுதெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும் படியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன்
எடுத்துக்கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை
சிறிது நேரம் பார்த்துவிட்டு வைத்து விட வேண்டும்.

தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும்.
இந்த போட்டோவைவேறு யாரும் பார்க்காதவாறு
மறைவாக வைத்திருக்க வேண்டும்.
எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ
அந்தசெயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லி விட்டு
போட்டோவைவைத்து விட வேண்டும்.
இதே முறையில் தொடர்ந்து செய்து வர
நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.
எண்ணிய காரியம் முடிந்தவுடன்அடுத்து நடக்க வேண்டிய செயலை
நினைத்துக் கொண்டுபோட்டோவைப் பார்க்க வேண்டும்.

கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள்எல்லாம் குறைவே.
கண்ணாடிப் பயிற்சி எளிதில் யாரும் அறிந்துகொள்ள முடியாத
கணக்கிலடங்காத அரிய பொக்கிசங்களைதன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. அதன் திறவுகோல் மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது.
திறவுகோலை கண்டுபிடியுங்கள்.
அரியபொக்கிசங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

அருகில் உள்ள "மனவளக்கலை மன்றங்களில் " எளியமுறை குண்டலினியோகப்
பயிற்சிகளுடன் இந்தப் பயிற்சியினையும் சிறந்த ஞானாசிரியர்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்!

வாழ்க வளமுடன்!!