Tuesday, February 28, 2017

இறந்து போன மீன்கள் தான்*

*இறந்து போன மீன்கள் தான்* *தண்ணீரின்*
*திசையிலே* *செல்லும்..*

*உயிருள்ள மீன்கள்*
*தண்ணீரை எதிர்த்து* *தான் செல்லும்..*

*உனக்கென ஒரு வழியை உருவாக்கு..*
*உன் வாழ்க்கை உன் கையில்...*
*நீங்கள் ஒரு வாய்ப்பைத்* *தவறவிட்டால்*
*உங்கள் விழிகளைக்* *கண்ணீரால் நிரப்பாதீர்கள்..!*

*உங்கள் கண்ணீர்,*
*உங்கள் முன் உள்ள* *இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்..!*

*அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!*
*தன் மீது விழும் மண்ணைச்*
*"சுமையென" நினைப்பதில்லை விதை...!*

Monday, February 27, 2017

சிவவாக்கியர்

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
🌸 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.
சிவவாக்கியர் முறம் முடைந்து கொண்டிருந்தார்.

சிவனடியார்கள் சிலர் அவருகே வந்து...."சுவாமி,...உங்களால் எங்களுக்கு ஒரு காரியம் கூடவேண்டும் என ஏக்கமாக கேட்டனர்.

கேளுங்கள்!......

*சித்தர்கள் தரிசனம் கோடி பாவங்ககள் நாசமாகுமாமே!*அதனால் எங்கள் பாவங்கள் ஒழிந்தொலைய, உங்களைப்போல சித்தரொருவரை  தரிசித்து வணங்கிக் கொள்ள விழைகிறோம். ஏற்றுக் கொணர்வீர்களாக! என வேண்டினார்கள்.

சிவவாக்கியர்க்கு இவ்வடியார்களின் எண்ணக்குமுறல் எண்ணவென்று உணரப் பெற்றார்.

ஐயா!...அடியார்களே!,,,சித்தர்கள் தெய்வமயமானவர்கள். அவர்களை நீங்கள் பார்க்க நினைப்பது, காணக்கிடைக்கக்கூடியதாக தெரியவில்லை. நீங்களோ ஆசாபாசங்களுடன் உழன்றழைகிறீர்கள். இவ்வாசைகளுடன் நீங்கள் பார்க்க நேர்ந்தாலும், அவர்கள் செய்யச் சொல்லும் செயல்பாட்டை உங்களால் கடைப்பிடிக்க முடியாதே!... அதைத் தவறாகப் பட்டால், அவர்கள் சாபம் கொடுத்து விடுவார்கள். ரிஷிகள், முனிவர்கள் சாபத்திற்குக் கூட விமோசனம் கேட்டுப் பெறலாம்! ஆனால் சித்தர்களின் சாபத்திற்கு விமோசனமே கிடையாது.....என்றார்.

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும் நாங்கள் சித்தர்களை தரிசிக்க விரும்புவதெல்லாம் அவர்கள் செய்யும் சித்துவிளையாட்டைக் காண்பதற்காகத்தான். மேலும் தங்கம் உருவாக்குதல் அறிந்து, அதனைக் கொண்டு உலக வறுமையனைத்தையும் ஒழிக்க விழையப் போகிறோம் என்றார்கள் அவர்கள்.

சிவவாக்கியருக்கு இவர்களின் நோக்கம் தெளிவாக புரிந்து போனது. இறைவனையும் அவனால் படைக்கப்பட்ட பஞ்சபூதங்களையும் உள்ளபடி உணர்ந்த சிவவாக்கியருக்கு அவர்களது உள்ளத்தில் உள்ளது தெரியாமல் போகுமா?...........

"ஐயா!,...உங்களைப் போன்றவர்கள் அதிகம் பேர்கள் வந்து தங்கரகசியத்தை அறிய முற்படுவதினால்தான், சித்தர்கள் உங்களின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.

மேலும்.... தங்கமே... தங்கமே......
என்று, தங்கத்தின் மீது மோகப்பட்டவர்களிடம் தங்கம் அடைக்கலமாகாது. மீறினால் கெடுதல்தான் மிகுந்து,  குடும்பம் பிரிவினை ஏற்படும். ஒற்றுமையான குடும்பம் குலையும்.  வழக்கு ஏற்பட்டு அலைவர். நிறைய பாவங்கள் கணக்கிலேற்றப்படும். களவு இகழ்வு நிலை உறுதிப்படும். இவையெல்லாம்  சாதாரணமாக நடக்கும். இந்தப் பாவங்களுக்கெல்லாம் நீங்கள் ஆட்படுவீர்களென எண்ணியே சித்தர்கள் உங்களுக்குக் காணப்படுவதில்லை என்றார்.

இரசவாத வித்தைத் தனங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் தங்கம் உருவாக்குதல் செய்யலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு வந்தவர்கள், சிவவாக்கியர் முன்வந்து, அவர் தந்த அறிவுரைகளைக் கேட்டு தலை குனிந்து நின்றார்கள்.

அன்பானவர்களே! எனவே உங்களின் பொன்னாசையை ஒழியுங்கள். பொருளாசையை அழியுங்கள். சித்தத்தை சிவன்பால் வையுங்கள். இவ்விதமாகும்போது, நீங்களே தங்கமாக மாறியிருப்பீர்கள்! இதுதான் தங்கத்தை நாடசிறந்த சுலபவழி என அவர்களுக்கு மீண்டும் உபதேசத்தருளி அவர்களை அனுப்பி வைத்தார்.

ஞான மார்க்கத்தில் திகழ்ந்த சித்தரான சிவவாக்கியரைத் தேடி நாளும் புதிய புதிய சீடர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

அவரிடம் சேர்ந்தவர்கள் திரும்பத் திரும்ப இரசவாத வித்தை செய்ய விரும்புவதிலேயே ஆர்வம் காட்டினார்களே தவிர ஆன்மார்த்தமான அறிவைத் தேடிப்பெற எவரும் முன்வரவில்லை.

தேடி வந்தவர்கள் எல்லாம், அவரிடம் ஞானம் தேடுவதை விட தங்கத்தைத் தேடுவதற்காகத்தான் வந்து சேர்ந்தனர். இச்செயல் சிவவாக்கியர்க்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் சிவவாக்கியரை சந்திக்க கொங்கணவர்க்கு ஆவல் உண்டானது. அப்போது சிவவாக்கியரின் சீடர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. வரும் கொங்கணவரை சந்தித்து இரசவாதம் பற்றி அறிந்து கொள்ள விரும்பினர்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த சிவவாக்கியர் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். தங்கத்தின் மீது எவரொருவர்க்கு பற்றில்லாதிருக்குமோ, அவர் உருவாக்கும் இரசவாதந்தான் சித்தியாகும். சித்தர்கள் பலரும் இரசவாதம் அறிந்தவர்கள்தான்.  அவற்றையெல்லாம் பற்றி தாமறிந்த அனுபவங்களை இந்த பிரபஞ்சத்துக்கக் காணிக்கையாக்கி விட்டுப் போயிருக்கின்றனர்.

யோக நெறியில் நின்று இரசவாதம் செய்பவர்கள் தேவர்களுக்கு நிகர் நிகர் அவர்களே! அத்தகைய தவ வலிமையும், யோகநெறியும் உடைய சித்தபெருமான்களுக்குத்தான் இரசவாதம் சித்தித்து வந்தது. மேலும் அவர்கள் கண்களுக்கு மட்டுந்தான் தென்படுவார்கள்.

பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தியினால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். தமது கடுந்தவத்தாலும் யோகத்தினாலும் பெற்ற சித்திகள் அனைத்தையும் பலவீனமான மனிதர்களுக்கே அர்ப்பணம் செய்துள்ளனர்.

சித்தரைப் போல் நாம் மேன்மை நிலை அடைய விரும்புகிறோமா?, அல்லது பலவீன மனிதர் நிலையே போதும் என நினைக்கிறோமா?.

சிவவாக்கியர் இறைவனது எண்ணத்தில் ஆழ்ந்தார். உள்ளம் உருகியது. தன் அனுபவங்களை.எல்லாமா பாடல்களாக ஆக்கினார். சிவவாக்கியரால் உருவான அப்பாடல்கள் அனைத்தும் சிவவாக்கியம் என அழைக்கப்பட்டது.

சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் பெளர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் அவர் சமாதி பூஜை நடைபெற்று வருகிறது.

ஞானத்தை அடைவதற்காகத் தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தவம் முடிவதற்குள் இறந்து போய் விட்டார். அவர்தான் சிவவாக்கியராக வந்து பிறந்தார் என்ற ஒரு வரலாறும் பேசப்படுவதுண்டு.

இத்துடன் சிவவாக்கியர்.தொடர் மகிழ்ந்து நிறைந்தது.

*நாளை திருமூலர் வருவார்.*

           திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

மனித உடல் பற்றிய சுவாரஸ்யமாll " தகவல்கள்

!!
🔰 *" மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்* .

🔰 *"இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும் .

🔰 *" நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும் .*

🔰 *" நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும் .*

🔰 *" ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .*

🔰 *"மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் .*

🔰  *"மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும் .*

🔰 *" மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.*

🔰 *" நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம் .*

🔰 *" கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் .*

🔰 *" மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன .*

🔰 *"காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும் .*

🔰 *" கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும் .*

🔰 *" மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும் .*

🔰 *" நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு .*

🔰 _*" மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன .*_

🔰 _*" நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்கு செல்கிறது .*_

🔰 _*" நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும் .*_

🔰 *" மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம் ,*

🔰கண்கள் - *31 நிமிடங்கள் ,*
🔰மூளை.   - *10 நிமிடங்கள் ,*
🔰கால்கள் - *4 மணிநேரம் ,*
🔰தசைகள் - *5 நாட்கள்*
🔰இதயம்.  - *சில நிமிடங்கள் , ,

தாய் பாசம் உள்ளவர்களுக்கு

இந்த கவிதை வலி புரியும்

அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் சேலைதான்
ஈரமானது...

நான் உறங்க...
உன் சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்து
உன் சேலை தான்...

எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் சேலை தான்
எனக்கு திரையானது...

நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் சேலை
தான் குடையானது...

நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் சேலை தான்...

மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் சேலை தான்...

மாம் பழம் தின்று
என் கை துடைத்தும்
உன் சேலை தானம்மா...

ஆசிரியரின்
மிரட்டலுக்கு...
ஓடி ஒளிந்ததும்
உன் சேலைதான்...

அப்பா அடிக்க
வரும் போது...
என்னை ஒலித்து
வைத்ததும்...
உன் சேலை
தானம்மா...

அண்ணனுக்கு தெரியாமல்
மறைத்து வைத்து...
மிட்டாய் கொடுத்தும்
உன் சேலை தான்...

காசு எடுத்தால் என்னை
கட்டி வைத்து அடித்ததும்...
உன் சேலை தான்...

தலை வழிக்கு ஒத்தடம்
கொடுத்தும்...
உன் சேலை
தான் அம்மா...

அம்மா உன் சேலையை
தொட்டு பார்கிறேன்...

தொலைந்த இன்பத்தை
உன் கண்ணில் பார்கிறேன்...

மறு பிறவியிலும்
நீயே வேண்டுமென்று...
இறைவனிடம் கேட்கிறேன்
அம்மாவாக.....       அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாடா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..!

கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...! Pls read and share

மனைவி  பற்றி ஒரு சிறு குறிப்ப

*ு!*

நமது மனதிலும், மனையிலும்  வீற்றிருப்பவள் என்பதால், *மனைவி* என்றும்...

நமது வாழ்வில் கடைசிவரை துணையாய் வருபவள் என்பதால், *துணைவி* என்றும்...

நமக்கு பொன் நகையை தாலாட்டி வருகிறாள் என்பதால், *பொண்டாட்டி* என்றும்...

நம்மை கொஞ்சி மகிழ்ந்து மடியில் சாய்ந்திடுவாள் என்பதால், *பொஞ்சாதி* என்றும்...

காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், *ஆத்துக்காரி* என்றும்...

வீட்டில் இரவு வந்ததும் காரிருளை நீக்கி விடுகிறாள் என்பதால், *வீட்டுக்காரி* என்றும்...

கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், *பீபி* (ஹிந்தி) என்றும்...

உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், *பெல்லாம்* (தெலுகு) என்றும்...

நம்மை மதி மயக்கி அவள் சிரித்துக் கொண்டே இருப்பதால், *ஸ்ரீமதி* (நேபாளி) என்றும்...

நம் மனதில் கார்த்திகை தீபம் போல் ஜொளிப்பவள் என்பதால், *மனகார்த்தி* (கன்னடம்) என்றும்...

கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், *கன்டித்தி* (கன்னடம்) என்றும்...

இந்த உலக சந்தோஷங்களை என்னிடம் பாரய்யா என்பதால், *பாரியா* (மலையாளம்) என்றும்...

வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் இணைந்து இருக்கிறாள் என்பதால் *Wife* (ஆங்கிலம்) என்றும்...

கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் *ஜவ்ஜத்* (அரபிக்) என்றும்...

வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், *அஷாவா பபாய்* (பிலிப்பைன்ஸ்) என்றும்...

காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவ்ளர் என்பதால், *பவுள* (சிங்களம்) என்றும்...

சொல்கிறார்கள் என்பது எமது கருத்து...

😂😂😂😂😂😂😂

மனித உடல் பற்றிய சுவாரஸ்யமாll " தகவல்கள்

!!
🔰 *" மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்* .

🔰 *"இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும் .

🔰 *" நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும் .*

🔰 *" நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும் .*

🔰 *" ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .*

🔰 *"மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் .*

🔰  *"மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும் .*

🔰 *" மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.*

🔰 *" நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம் .*

🔰 *" கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் .*

🔰 *" மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன .*

🔰 *"காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும் .*

🔰 *" கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும் .*

🔰 *" மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும் .*

🔰 *" நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு .*

🔰 _*" மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன .*_

🔰 _*" நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்கு செல்கிறது .*_

🔰 _*" நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும் .*_

🔰 *" மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம் ,*

🔰கண்கள் - *31 நிமிடங்கள் ,*
🔰மூளை.   - *10 நிமிடங்கள் ,*
🔰கால்கள் - *4 மணிநேரம் ,*
🔰தசைகள் - *5 நாட்கள்*
🔰இதயம்.  - *சில நிமிடங்கள் , ,

Thursday, February 23, 2017

கதை சிறுசு,* *கருத்தோ பெரிசு* *~~~~~~~~~~~~~

*~~~~*

*இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.

*தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.

*”நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே”.

°•○●

*கேள்வி :

*ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

*(வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியைக்

*கேட்டு விட்டு, விடை சாென்னால்தான், நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).

°•○●

*தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை.

*கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

*அவள் சொன்னாள் :

*விடை சொல்கிறேன்.

*அதனால்,
*அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும் ;

*உனக்கு உன் நாடு கிடைக்கும்.

*ஆனால் எனக்கு
*என்ன கிடைக்கும் ?

*அவன் சொன்னான்,

*"என்ன கேட்டாலும் தருகிறேன்”.

*சூனியக்காரக்
*கிழவி, விடையைச் சொன்னாள்,
  
   *♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே,

*ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.

°•○●

*இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல,

*அவர்கள் திருமணம் நடந்தது.

*இவனுக்கு நாடும் கிடைத்தது.

*அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.

*வேண்டியதைக் கேள் என்றான்.

*அவள் கேட்டாள்

*"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”.

*கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

*உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

*அவள் சொன்னாள்,

*"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;

*ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.

*இதில் எது உன் விருப்பம் ?” என்றாள்.

*அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்

*"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம் ;     முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,

*அவள் சொன்னாள்,

*"முடிவை என்னிடம் விட்டு விட்டதால்,

*நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.

°•○●

*ஆம்!

*பெண்,
*அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள்.

*முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

*அனைவரும் புரிந்து செயல்படுங்கள் !.

*
*

மனசை தொட்ட பதிவு.

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா

?

*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,

சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது*...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது*.

*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.

*மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது  ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால்  அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை
மடக்கி அமர்ந்துதான்  சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு
ஜீரணம்  நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல்  காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்  யுரோப்பியன் கழிவறையில்  அமரும் பொழுது குடலுக்கு அதிக

அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட  யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து  வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன்  வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில்  ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்
சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு  வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

*சாப்பிடும் முறை*...!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

*அமருங்கள் சம்மணமிட்டு*.