Saturday, February 11, 2017

திருக்குறள் =========== அறத்துப்பால் - வான்சிறப்பு - குறள் 11 :


வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

மு.வ உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய !
மாரி அளவாய்ப் பொழிக !! மக்கள் வளமாய் வாழ்க !!!

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

No comments:

Post a Comment