Thursday, November 30, 2017

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?

பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்

அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.

இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்

எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது

அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Tuesday, November 28, 2017

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,*

*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்._

Saturday, November 18, 2017

மூச்சுப் பயிற்சியின் ரகசியம்* :

*
**********************************

*கோரக்கர் சந்திரரேகை* என்ற நூலில் கோரக்கர் சித்தர் ,  மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் அசைக்காமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு மூச்சை சூரிய கலையிலும், சந்திர கலையிலும் மாற்றி மாற்றி இழுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கைகால்களை ஆட்டாமல் கை வைக்காமல் மூச்சுப் பயிற்சி எப்படி செய்வது , அவ்வாறு செய்யும் முறை உண்டா?

*" காற்றே கடவுள் "*
**********************

அனைவரும் மறைத்து வைத்த சூட்சுமத்தை திறக்கின்றோம். இந்த சரீரத்துள்ளே எண்ணற்ற ரகசியங்களை இறைவன் புதைத்து வைத்துள்ளான். அது எவ்வாறு என்று வெளிப்படையாக கூறுகின்றோம்.

ஒரு நாழிகைக்கு *360* சுவாசம் , ஒரு நாளைக்கு *21,600* சுவாசம். மூச்சுப் பயிற்சியில் *" பூரகம் "* என்பது மூச்சை உள்ளே இழுப்பது, *" கும்பகம் "* என்பது உள்வாங்கிய மூச்சை (காற்று) உள்ளே நிறுத்துவது, *" ரேசகம்* " என்பது மூச்சை வெளியிடுவது. நமக்கு எந்த நாசியில் சுவாசம் ஒடுகின்றதோ அதற்கு *"பூரணம் "*என்று பெயர்.

*" சீதாக்காயம் "*என்று கோரக்கர்  சித்தர் கூறியிருக்கிறார். சீதாக்காயம் என்பது நமது நாசி (மூக்கு ) தான். நாசிக்குமேல் காசி என்று கூறுவார்கள். அது என்னவென்றால் " சுழிமுனை" என்து ஆகும்.

              நமக்கு இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசியில் சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.

இரண்டு நாசிகளிலும், *மூச்சுக் காற்று வந்தால் அதற்கு " சுழிமுனை "* என்று பெயர். பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரிய கலையில் ஓடும். அதிக வெயில் அடிக்கும் பொழுது சந்திர கலையில் சுவாசம் ஓடும். இது இயற்கையாகவே அமைந்துள்ள அற்புதம் ஆகும். ஏனெனில் உடலில் சூடும், குளிர்ச்சியும், சமநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு குறைபாடு இந்தாலும் நமது உடலல் பல உபாதைகள் ஏற்படும். நம் மூச்சுக் காற்றிலே இறைவன் எவ்வளவு சூட்சுமத்தை வைத்துள்ளான் பார்த்தீர்களா?

*உடலைச் கீங்காரித்தாய் !*
*உயிர்க்கு என்ன செய்தாய் ?*

மேலும் ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் மூன்று நாட்கள் ஓடினால் அவருக்கு ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஒடினால் மூன்று மாதத்தில் மரணம் ஏற்படும். சூரிய கலையில் ஓடக்கூடிய காற்று 8 அங்குலம் . சந்திர கலையில் ஓடும்
காற்று 16 அங்குலம்.

மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒரு வனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.

               அதனால்தான், சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன.

இதைப் பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை.

நம்முள் சுவாசம் நடக்கும் அளவு

அமர்ந்திக்கும் போது - 12 அங்குலம்

நடக்கும் போது             - 16 அங்குலம்

ஓடும் போது                  - 25 அங்குலம்

உறங்கும் போது          - 36 அங்குலம்

உடலுறவு கொள்ளும் - 64 அங்குலம் போது

*சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்*

*11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்*

*10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்*

*9 அங்குலமாக குறைந்தால்  விவேகி ஆவான்*

*8 அங்குலமாக குறைந்தால்  தூர திருஷ்டி காண்பான்*

*7,அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்*

*6,அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்*

*5, அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்*

*4,அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்*

*3,அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.*

*2, அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்*

*1, அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்*

உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பாணம் நீங்கும்

எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும்  என்பதைப் பற்றி காண்போம்

ஞாயிறு, செவ்வாய் , சனி – இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.

வெள்ளி, திங்கள் , புதன் – இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.

வியாழக்கிழமை -பூர்வபட்சம் (வளர்பிறை) –சந்திர கலை ஓட வேண்டும்.

அமரபட்சம் (தேய்பிறை ) – சூரிய கலை ஓட வேண்டும்.

இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்கு வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.

- *  *

Monday, November 13, 2017

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் :-


🌿 அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿 காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿 சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿 பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
🌿 கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿 மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿 குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿 அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
🌿 புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿 பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿 பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿 பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿 சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿 வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.
🌿 முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿 வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
🌿 முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿 புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿 புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿 நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
🌿 தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
🌿 முரங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿 முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
🌿 பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿 புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿 மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿 மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿 முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿 சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
🌿 வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿 தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿 தவசிக்கீரை - இருமலை போக்கும்.
🌿 சாணக்கீரை - காயம் ஆற்றும்.
🌿 வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
🌿 விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
🌿 கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
🌿 துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿 துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿 காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿 மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.
🌿 நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

Sunday, November 12, 2017

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?


காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

GST. Reduces

*எந்த பொருளுக்கு எவ்வளவு வரி? 28%ல் இருந்து 18% ஆக குறைப்பு*

* பியூஸ்கள், எலக்ட்ரிகல் இன்சுலேட்டர்கள்
* காப்பிடப்பட்ட கடத்திகள், சாக்கெட்டுகள்
* எலக்ட்ரிகல் போர்டு, பேனல்கள் உள்ளிட்ட மரப்பலகை மற்றும் நார் பலகையில் செய்யப்பட்ட மின் கட்டுப்பாடு மற்றும் மின் விநியோக பொருட்கள்
* ஜன்னல், கதவு உள்ளிட்ட மரச்சாமான்கள், மரச்சட்டங்கள்.
* டிரங்க் பெட்டிகள், சூட்கேஸ், பிரீப்கேஸ், டிராவலிங் பேக் மற்றும் இதர கைப்பைகள்
* தோலை சுத்தப்படுத்தப்படும் திரவ மற்றும் கிரீம் பொருட்கள்
* ஷாம்பூ, தலைமுடி கிரீம், தலைமுடி சாயம், ஹென்னா பவுடர் அல்லது பேஸ்ட்.
* ஷேவிங் கிரீம், ஆப்டர் ஷேவ், வாசனை திரவியங்கள், குளியலறை பொருட்கள், அழகு சாதனங்கள், நறுமணப் பொருட்கள், கழிவறை பொருட்கள், அறை நறுமண பொருள்.
* அழகு மற்றும் மேக்கப் பொருட்கள்
* மின்விசிறி, பம்புகள், கம்பிரஷர்கள்
* விளக்கு மற்றும் விளக்கு பொருத்தும் பொருட்கள்
* செல் மற்றும் பேட்டரிகள்
* துப்புரவு பொருட்கள்
* வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், ஷிங்குகள், வாஷ்பேஷின்.
* புல் டோசர், சரக்கு லாரி, ரோடு ரோலர்
* எஸ்கலேட்டர்
* கூலிங் டவர்
* பிரசர் குக்கர்
* அணு உலைகள்
* தையல் இயந்திர உதிரி பொருட்கள்
* பேரிங், கியர் பாக்ஸ் பொருட்கள்
* பால்ரஸ், ஸ்குரூ
* கேஸ்கட்
* ரேடியோ, டிவி எலக்ட்ரானிக் சாதனங்கள்
* சவுண்ட் ரெக்கார்டிங் கருவிகள்
* போக்குவரத்து சிக்னல், பாதுகாப்பு, கட்டுப்பாட்டு கருவிகள்
* உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்கான கருவிகள்
* ஜிம்னாஸ்டிக், தடகள கருவிகள்.
* பளிங்கு, சலவைக் கல் பலகைகள்
* டைல்ஸ் போன்ற மார்பிள், கிரானைட்
* அனைத்து வகை செராமிக் டைல்ஸ்கள்
* வேக்குவம் பிளாஸ்க், லைட்டர் போன்ற இதர பொருட்கள்
* கைக் கடிகரம், கடிகாரம், கடிகாரத்தின் மூவ்மென்ட், வாட் கேஸ், ஸ்டிராப், பாகங்கள்
* தோல் ஆடை, ஜவுளி துணைப் பொருட்கள், பர்-ஸ்கின், guts, செயற்கை பர், சேணம் போன்ற இதர பொருட்கள்
* கரண்டி, ஸ்பூன், டேபிள் ஸ்பூன் போன்ற சமையல் அறை பொருட்கள், ஸ்ட்வ், குக்கர்கள், மின்சாரத்தில் இயங்காத வீட்டு உபயோக பொருட்கள்
* ரேசர், ரேசர் பிளேடுகள்
* பல உபயோக பிரிண்டர்கள், கார்ட்ரிட்ஜ்கள்
* ஆபிஸ் அல்லது டெஸ்க் எக்யூப்மென்ட்டுகள்
* அலுமினிய கதவு, ஜன்னல், பிரேம்கள்
* பிளாஸ்டரில் செய்யப்பட்ட போர்டுகள், ஷீட்கள்
* சிமெண்ட், கான்கிரீட் அல்லது கல் அல்லது செயற்கை கற்களாலான பொருட்கள்
* ஆஸ்பால்ட், அல்லது சிலேட் பொருட்கள்
* மைகா பொருட்கள்
* செராமிக் தரை பிளாக்குகள், பைப்புகள், பைப் பிட்டிங்கள் போன்றவை
* வால் பேப்பர், வால் கவரிங்
* அனைத்து வகை கண்ணாடிகள், முகம் பார்க்கும் கண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, கண்ணாடி ஷீட்டுகள், கண்ணாடி பொருட்கள்
* மின்சார, மின்னணு எடை போடும் இயந்திரங்கள்
* தீயணைப்பான்கள், தீயணைப்பு சார்ஜ்
* போர்க் லிப்ட்கள், லிப்டிங் மற்றும் ஹேண்டலிங் சாதனங்கள்
* அனைத்து இசைக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள்
* செயற்கை தயாரிப்பு மலர்கள், பசுமை பொருட்கள் மற்றும் செயற்கை பழங்கள்
* வெடிபொருட்கள், தாக்குதலை தடுக்கும் தயாரிப்பு, பட்டாசுகள்
* கொக்கோ பட்டர், கொழுப்பு, எண்ணை பவுடர்
* சாறு, எசென்ஸ், காப்பி கான்சென்ட்ரேட், இதர உணவு தயாரிப்புகள்
* சாக்கலேட்கள், சுவிங் கம்/ பபுள் கம்
* மால்ட் சாறுகள், மாவு பொருட்கள் தயாரிப்பு, உமி நீக்கப்பட்ட அரிசி, சாப்பாடு, ஸ்டார்ச் அல்லது மால்ட் சாறு
* வேபிள்கள் மற்றும் வேபர் சாக்லேட்கள் அல்லது வேபர் கலந்த சாக்லேட்கள்
* ரப்பர் டியூப்கள் மற்றும் ரப்பர் உதிரி பொருட்கள்
* கண் கண்ணாடிகள், பைனாகுலர், டெலஸ்கோப்
* சினிமா கேமரா, புரொஜக்டர் மற்றும் இமேஜ் புரொஜெக்ட்டர்
* மைக்ராஸ்கோப், ஆய்வுக்கூடத்தில் பயன்படும் குறிப்பிட்ட சில உபகரணங்கள், மெட்ராலஜி, ஹைட்ராலஜி, ஓசனோகிராபி, ஜியாலஜி என குறிப்பிட்ட சில அறிவியல் உபகரணங்கள்
* சால்வெண்ட், தின்னர்கள், ஹைட்ராலிக் திரவங்கள், உறைவதை தவிர்க்கும் தயாரிப்புகள்

*28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:*

* அரவைக்கல் கொண்ட வெட் கிரைண்டர்
* டாங்க் மற்றும் இதர ஆயுதம் தாங்கிய போர் வாகனங்கள்

*18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:*

* பதப்படுத்தப்பட்ட பால்
* சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சர்க்கரை கட்டிகள்
* பாஸ்தா
* குழம்பு பசை, புளிப்பு பொருட்கள், சாலட் அலங்காரம்
* உணவுக்கு சுவை கூட்டும் கலவைகள்
* நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள்,
* மருத்துவத்துக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டர்
* அச்சிடுவதற்கான மை
* கைப்பைகள், சணல், பருத்தியில் செய்த ஷாப்பிங் பைகள், தொப்பிகள்
* விவசாயம், தோட்டம், வனம், அறுவடை, அரவை இந்தியரங்கள் உதிரி பாகங்கள்
* தையல் மிஷின் குறிப்பிட்ட பாகங்கள்
* மூக்கு கண்ணாடி பிரேம்கள்
* மூங்கில், பிரம்பில் செய்யப்பட்ட பர்னிச்சர்கள்

*5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்ட பொருட்கள்*

* குருணை தானியங்கள்.
* சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் உலர் காய்கறிகள்.
* தேங்காய் சிரட்டை.
* கருவாடு.
* கற்கண்டு சர்க்கரை
* பொறி பர்பி
* கடலைமிட்டாய், எள்ளு மிட்டாய், சட்னி பவுடர், உருளைக்கிழங்கு மாவு

*28சதவீத வரியில் நீடிக்கும் பொருட்கள்*

*உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய சுமார் 50 பொருட்கள் அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன்படி, பான் மசாலா, காற்றடைக்கப்பட்ட நீர் மற்றும் பானங்கள், சுருட்டு மற்றும் சிகரெட்டுகள், புகையிலை பொருட்கள், சிமெண்ட், பெயிண்ட், வாசனை பொருட்கள், ஏசி, டிஸ் சலவை எந்திரம், வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டிகள், வாக்யூம் கிளீனர்ஸ், கார்கள், இருசக்கர வாகனங்கள், விமானம் மற்றும் படகு உள்ளிட்ட 50 பொருட்கள் அதிகபட்ச வரி விதிப்பு பொருட்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன.*

Sasikala assets. Raid

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீது ஏன் இப்பொழுது வருமானவரித் துறையின் சோதனை என்பதன் காரணம் கீழே உள்ள விபரங்களை படியுங்கள் புரியும்

அரசியல் காழ்புணர்ச்சியும் அல்ல மோடி தினகரன் சசிகலாவை கண்டு பயப்படுவதாக கூறும் கூற்றாலும் அல்ல

பரோலில் வந்த நாட்களை கவனமாக கண்காணித்து எடுக்கப் பட்ட நடவடிக்கை

இந்த பரிமாற்றங்கள் ச்சிகலா பரோல் வந்த ஐந்து நாளில் நடந்திருந்தால் மகா அயோக்கியதனம்

பரோல் நிபந்தனைகளை சகட்டு மேனிக்கு மீறியதாகும் குற்றமாகும்

சென்னை: சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில்கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 600 சொத்துக்கள் சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டவை என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

கடந்த மாதம் 6ம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து பரோலில் வந்த சசிகலா ரகசியமாக சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரப் பதிவு செய்ததும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது

சசிகலா மற்றும் இளவரசி சேர்மனாக இருக்கும் நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் ஜெயா டிவி உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களை ஏற்கனவே இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியா மற்றும் மகன் விவேக் ஆகியோர் பெயர்களில் மாற்றி அமைத்துள்ளனர்

மேலும் பரோலில் வெளியே வந்த 5 நாளில் சசிகலா 600க்கும் மேற்பட்ட பத்திரங்களை இரவும் பகலும் மாறி மாறி பெயர் மாற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவசரமாக பத்திரப் பதிவு செய்ய 6 மூத்த பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகளை சென்னையிலுள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்துள்ளனர்.

அவர்களை அங்கு 3 நாட்களாக தங்க வைத்து பத்திரப் பதிவு சம்பந்தப்பட்ட வேலைகளை செய்துள்ளனர்

இதற்காக 30 க்கும் மேற்பட்ட நம்பகமான ஆட்களை பணியில் அமர்த்தி இரவு பகலாக பல்வேறு ஆவணங்களை மாற்றி அமைத்துள்ளனர்

இந்த ஆவணங்களில் பெரும்பாலும் சசிகலாவின் குடும்பத்தில் அவர்களுக்கு நெருக்கமான, சசிகலாவின் பின்னால் இருக்கும் தொழிலதிபர்களுக்கு பெயர் மாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது

சசிகலா அவசரமாக அழைத்ததின் பெயரில் 150 நபர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடமும் கையெழுத்து வாங்கியுள்ளனர்

இதில் சிலருக்கு சொத்தை மீண்டும் கொடுப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது

அவர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த இருக்கிறார்கள்

அதனால்தான் சொத்து வேறு பெயர்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்

இப்போது உங்களிடம் இருக்கும் சொத்துக்களை நீங்களே கவனித்து கொள்ளுங்கள் வெறும் டாக்குமென்ட்கள் மட்டுமே மாறுகிறது. சொத்து எங்கும் போகவில்லை  என ஆறுதல் சொல்லி சமாதானம் செய்துள்ளனர்

இப்படி சசிகலா சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த 5 நாட்களில் 600க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் பல்வேறு நபர்களின் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

எனவே கடந்த மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான 5 நாட்கள் பத்திரப் பதிவுத்துறையில் நடந்த சொத்து பரிமாற்றங்களின் பட்டியலை கையில் எடுத்துக் கொண்ட வருமான வரித்துறை

அதிலுள்ள நபர்களை பட்டியலிட்டு குறிவைத்து விசாரிக்க ஆரம்பித்தது.

மத்திய, மாநில உளவுத்துறையில் இதற்காக ரகசியமாக சிலரை நியமித்து பல்வேறு தகவல்களை ஒப்பீடு செய்து சரி செய்து கொண்ட பிறகே

சசிகலா மற்றும் நடராஜனுக்கு கீழுள்ள அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளை பொறி வைத்து பிடித்துள்ளது

புதியதாக சிக்கிக் கொண்ட நபர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த வருமான வரித்துறையினர்

அவர்களிடம் துருவிதுருவி விசாரணை செய்ததில் 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்

அந்த ஆவணங்கள் அனைத்தும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டவை

சுடச் சுடச் கையெழுத்து போட்ட ஆவணங்களாக இருப்பதை பார்த்த வருமான வரித்துறையினர் ஆடிப்போய் உள்ளனர்

மேலும் கைப்பற்றிய ஆவணங்களின் உண்மையான மதிப்பு எவ்வளவு என சரிபார்க்கும் வேலை முடிந்ததும்

இந்த மெகா ரெய்டை மிக விரைவில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய தயாராகி  வருகிறார்கள் வருமான வரி துறையினர்

இதில் இன்னும் வேடிக்கை என்ன வென்றால்

இந்த ரெய்டுக்கு கார்களை அனுப்பிய நிறுவனம் ஃபாஸ்ட் டிராக் நிறுவனம். ஆனால் இவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்றும், ஓபிஎஸ் கட்டளையிட்டதன் பேரிலேயே கார்கள் அனுப்பப்பட்டதாகவும் தினகரன் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஃபாஸ்ட் டிராக் உரிமையளர் ரெட்சன் அம்பிகாபதி கூறியதாவது:

நவம்பர் 9ஆம் தேதி 200 கார்கள் ஒரு திருமணத்திற்கு தேவை என்று முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த கார்கள் ரெய்டுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது எனக்கே டிவி பார்த்து தான் தெரியும்

நான் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது உண்மைதான். ஆனால் இந்த ரெய்டுக்கும் ஓபிஎஸ்க்கும் என்ன சம்பந்தம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

நாளை தினகரன் தரப்பினர்கள் 200 கார்கள் கேட்டாலும் அனுப்புவேன். இது என்னுடைய பிசினஸ்

இதற்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்

இதில் அரசியல் சாயம் பேசாமல் நேர்மையாக நடந்தால் பல உண்மைகள் வெளிவரலாம்

வருமா?