Wednesday, April 5, 2017

வாசி யோகம்- 8*

*
*******************

*நன்றி... ராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா....*

*அடுத்த பயிற்சி சந்திர யோகம்*
***********************************

கேளப்ப பூரனச் சந்திரனை நோக்கி
கெட்டியாய் நவமி முதல் தொட்டுபாரு
ஆலப்ப இடகலையிற் சுலழினை நோக்கி .
அண்டரண்ட தீ எல்லாம் மகன்று போகும்
மாள்ப்பா தீபத்தில் சுழினை நோக்கி
மருவி அங்கே பார்க்கையிலே ஒளிதான் வீசும்
நாளப்ப அறுபதுநாள் இப்படியே பாரு
-அகத்தியர் பூஜா விதி பாடல்

சந்திர யோகம் என்பது சந்திரனை கண் கொட்டாமல் பார்ப்பது .

அமாவாசையில் இருந்து ஒன்பதாம் நாள் நவமி நாள்  அன்று இரவு சநதிரை கண் கொட்டாமல் பாருங்கள் . முடிந்தவரை பாருங்கள் அதன் பின் கண்ணை மூடி அன்னாகிற்கு மேல் உள்ள சுழிமுனையில் உள்ளே பாருங்கள் . . உங்களுக்கு சந்திர ஒளி உள்ளே தெரியும் . இவ்விதம் பெளர்ணமி அன்று வரை பாருங்கள் வளது நாசியை பெரு விரலால் அடைத்து இடது நாசிவழி சுவாசிக்கவும் . ..

அப்பொழுது ஓம் ந மா சி வா ய அல்லது விருப்ப மந்திரம் ஓதலாம் . சக்கிரத அவஸ்தை என்ற நல்ல நினனைவுடன் இதை செய்யுங்கள் .

சூரிய யோகத்தையும் சந்திர யோகத்தையும் அறுபது நாள் செய்யுங்கள் .

*இதன் தத்துவம்*
********************

நமது இடது நாசி வழி செல்லும் மூச்சு சநதிர கலை . இது சந்திர யோகத்தால் பலப்படும் சந்திரனிடம் இருந்து வரும் உயிர் சக்தி முழுமையாக கிடைக்கும் . இந்த சூரிய சந்திர யோகங்களால் சூரிய சக்தியும் , சந்திர சக்தியும் வசப்படும் . .

உடல்வலுவும் .,மனவலுவும் , ஓங்கும் . மனம் குவியும் . மிகுந்த சக்தி கிடைக்கும் . அறிவு சுடர்விடும் .

நான் இந்த யோகத்தை சில ஆண்டுகள் செய்தேன். இன்னும் அவ்வப்பொழுது பெளர்ணமி அன்று செய்கிறேன் . . செய்து பாருங்கள் அனுபவம் சொல்லுங்கள்.

*வாசி ரகசியங்கள் இன்னும் ஆழமாக தொடரும்.....*

*ஓம் ஜெய் குருவே துணை*

- *சித்தர்களின் குரல் shiva shangar*

No comments:

Post a Comment