Tuesday, April 25, 2017

எவ்வாறு பிராண சக்தி சிகிச்சை தொழிற்படுகின்றது

பிராணா சிகிச்சை முறை, சக்தியூட்டல் (energetic) வைத்தியம் என்று சொல்லப்படுகின்றது. வருத்தங்கள், நோய்கள், உடலின் எதிறிக் (ethiric) கவசத்தில் உள்ள நாடிகளில்தான் உருவாகின்றன. இவையே, நோவாகாவும், மன அழுத்தங்களாகவும் உருவாகிப்பின் நோயை உடலில் உருவாக்குகின்றன. இந்த பிராணவாயு சிகிச்சையைச் செய்பவர் இத்தகைய நோவுகளையும், மன அழுத்தங்களையும், வருத்தங்களையும், இரண்டாவது உடல் கவசமான எதிறிக் (ethiric) படிவத்தில் சுத்தமாக்கி (cleansing), பின் அதனை மீள் சக்தியூட்டுவதனால் (re-charging) முற்றாக நீக்கலாம். மேற்குறிப்பிட்ட நோய்கள் பெரும்பாலும் உணர்வு சம்பந்தப்பட்டவை ஆகும். ஆதலால் முதல் இரண்டு படிவங்களை அஸ்ரல் (astral), எதிறிக் (ethiric) என்பன கவனிக்கப்படவேண்டியவை. இதேபோல் மனம் (mental) சம்பந்தப்பட்ட குறைகளும், பிராண வைத்தியங்களால் ஒரு குறிப்பிட்ட காலச் சிகிச்சைக்குப்பின் அதன் தொடர்பான எல்லா உடல் கவசங்களுக்கும் தேவைப்பட்ட அளவில், பிராண சிகிச்சை செய்வதின் மூலம் முற்றாக நோய் நீங்க வாய்ப்பு உண்டு.
இந்த சிகிச்சை உடலில் (physical body) தேவையான நல்ல ஆரோக்கிய மாற்றத்தை அல்லது நிவாரணத்தை உண்டாக்க, ஓரளவு நேர இடைவெளியும், தகுந்த சிகிச்சையும் தேவைப்படும்.
உயிர்ச்சக்தி படிவம் தான் எமது தேகத்தின் முதல் கவசம் அல்லது உறை ஆகும். இங்கு தான் பிராணா நேரடியாகத் தொழிற்படுகின்றது. இதுதான் பிராணாவை உறிஞ்சிக்கொள்வதும், உடலின் எல்லா பாகங்களுக்கும் விநியோகிப்பதும் ஆகும். உயிர்ச்சக்தி உடல் கலசம் தான் எமது உண்மையான உயிர்ப்பாகும் (vitality). இதுவே பிராணா சிகிச்சைக்கு முற்றும் தேவையானது. இந்த உயிர்ச்சக்தி உடல் நாடிகளாலும், சக்கரங்களாலும் (chakaras) வழி நடத்தப்படுகின்றது. இந்த நாடிகளும், சக்கரங்களும், எதுவித அடைப்புக்களுக்கு உட்பட்டால், அதனால் உயிரின் சமநிலை குலைந்து நோய்கள் உருவாக காரணமாகலாம்.
உடலானது ஒரு சிக்கலான அமைப்பனதால், மேற்கூறிய குழப்பத்திற்கு உரிய அடிப்படை அல்லது மூல காரணத்தை அறிந்து கொள்வது பொதுவாகக் கடினமானதாகும்.
பிராணா சிகிச்சை முறை, உடல் சமநிலை குலைந்த அறிகுறியோ அல்லது முன்னேற்பாடோ இல்லாமல் ஆரம்பிக்கப்படுகின்றது. நோய்க் காரணத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது உறைவிடம், சிகிச்சைப் படிகளின் முதல் படியான கண்டுபிடித்தல் (detection) முறையாக எதிறிக் (ethiric) உடலை பரிசோதிப்பதின் (scanning) மூலமாகவே அறியப்படுகின்றது. உடலில் இப்பிரச்சனையுள்ள இடம், சுத்திகரிக்கப்பட்டு , பின் பிராணா மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த சிகிச்சை முறையை மீண்டும் மீண்டும் செய்வதன்மூலம், பிராணா சிகிச்சை அக்குறிப்பிட்ட பகுதிக்கு அளிக்கப்பட்டு அப்பகுதி குணப்படுத்தப்படுகின்றது
இம்முறை எமது குடும்பத்தினருக்கு உண்டாகும் தடிமல், காய்ச்சல் (சுரம்), தலையிடி, தசைப்பிடிப்பு, உடல் உபாதை, சளி போன்ற பல தரப்பட்ட சாதாரண அன்றாட நோய்களுக்கும், நோவுகளுக்கும் நிவாரணமளிக்கும் எளியமுறையாகும். இது பல ஆபத்தான நோய்களையும், முறையான பயிற்சி முறையாலும் அவரவர்க்கு கொடுக்கப்பட்ட அருளினாலும் (grace), பிராணாவின் உதவியுடன் தீர்க்கவல்லது. இதற்கு ஒரு தனித்திறமையும் தேவையில்லை. ஒழுங்கான உரிய பயிற்சியை நாள்தோறும் சிலை மணி நேரம் செய்வதால் தாமாகவே நோய் நிவாரணம் பெற முடியும். அல்லது ஒரு தகுதியான பிராண சிகிசையாளரின் மூலம் அதன் சிகிச்சைப்பயனை பெறமுடியும்.
பிராணா ஓர் உயிர்ச்சக்தி என்று சொல்லப்படுகின்றது . ஏனெனில் இது பிரபஞ்சமாயமாக, எல்லா உயிரினங்களாலும், எல்லாக்காலங்களிலும் பெறக்கூடியதாக உள்ளது. பிராணா இயற்கை நிலையில் ஏற்றம் அற்றது (neutral); சமநிலையானது. ஆனால் இதனால் எத்தகைய தன்மைகளையும் ஏற்று அதனைக் கொண்டு செல்லக் கூடியது, எல்லாவித சடங்குகள், சம்பிரதாயங்கள், மூர்த்திகளினால் மனத் தில் ஏற்படும் தாக்கம் யாவும் பிராணாவே! பல்வேறு குணாதிசயங்களை, தன்மைகளை தன்னகத்தே கொண்ட மனநிலையே பிராணாவாகும். சடங்குகளில் நமக்குள்ள அசாத்தியமான நம்பிக்கை இந்தப் பிராணாவின் பிரயோக வலிமையைக் கூட்டுகின்றது. இது அந்தச்சடங்குகளின் வலிமையினால் அல்ல… அச்சடங்குகளின் மீது நாம் கொண்ட அபரிமிதமான நம்பிக்கையேயாகும்.
இந்த அனுபவமே, எல்லா வித கலாச்சார, சமய, மந்திரீக சிகிச்சை என்பன, மனதில் மிக விரைவாக பிராணாவின் ஓட்டத்தை அதிகரிக்கச்செய்வதேயல்லாமல், வேறு ஏதும் இரகசியமான சக்தியினால் அல்ல. பிராணாதான் இந்த அதிசய-யாருமறிந்த சக்தி; இதைத் தவிர வேறு எவ்வித சக்திகளும் உளம் நிவாரணம் பெறத் தேவையானவை அல்ல. எல்லாவித இயற்கை வைத்தியங்களும், பிராணாவையே உபயோகப்படுத்துகின்றன. இது இதனைச் செய்பவரில் தங்குவதில்லை. இந்த பிரணாவின் உயர்சக்தியை உணர்ந்து சிகிச்சையளித்தால் இதன் முயற்சிப் பலன் (effectiveness) பல மடங்கு அதிகமாகும். இதனைச் செய்பவர் ஒவ்வொரு பிரச்னையையும் (case) பிரத்தியேகமாக அணுகிச் சிகிச்சையளித்தால் (அதாவது ஒரு பொதுவான சிகிச்சை முறையை எல்லா பிரச்சனைகளுக்கும் கடைப்பிடிக்காது), அதனால் ஏற்படும் பலன் அதிகமாகும். இச்சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்ட உடற் பாகங்களிலுள்ள மேலதிகமான, தேவையற்ற பிராணாவை அகற்றி, சுத்தம் செய்து, மீள் பிராணா சக்தியூட்டி, வியாதியஸ்தரை புதிய தூய அன்புமயமான பிராணாவின் மூலம் குணப்படுத்தலாம். இச்சக்தி மூலமான குணப்படுத்துதல் இலகுவானது, சிக்கலற்றது. இதனால் எத்தகைய பக்கவிளைவுகளும், கெடுதல்களும் இல்லை. இம்முறை நேரானது, உண்மையானது; இறைத்தன்மை வாய்ந்தது. இதை வர்த்தகமுறைப் படுத்தி (business) வியாபாரமாக்குவதே விரும்பப்படாததாகும்.
இச்சிகிச்சை முறையை எவ்வாறு செய்வது

No comments:

Post a Comment