Wednesday, April 5, 2017

*இது யாரோட இந்தியா வைரமுத்து அணுகுண்டு கவிதை:

*இது யாரோட இந்தியா வைரமுத்து அணுகுண்டு கவிதை:*
************************************************
*ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா?*

*வி ஐ பி களுக்கே இந்தியா…!!!*

பாவனா -வுக்கு

பாவாடை கிழிந்தால்

பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது

நந்தினி

ஹாசினி -களுக்கு

கருவறுக்கப்பட்டாலும்

அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …!!!

அம்பாணி, அதாணி

மல்லையா கடன் வாங்கினால்

அது தள்ளுபடி செய்யப்படுகிறது

இராமையா

மூக்கையா இராமசாமி -கள்

கடன் வாங்கினால்

தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..!!!

அரசியல்வாதிகள்

ஆற்றுமணலை கொள்ளையடித்தால்

சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது

அன்றாட காய்சிகள்

மாட்டு வண்டியில்

மணல் எடுத்தால்

மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகிறது..!

கல்வியை தொழிலாக்கி

அதை காசுக்கு விற்று

பணம் பார்க்கும் கபோதிகளுக்கு

கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது

தேர்விலே

பக்கத்தில் இருப்பவனை பார்த்து

காப்பி அடித்தால் மாணவனுக்கு

மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!

போலி நாயகனுக்கும்

அரசியல் வாதிகளுக்கும்

சட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது

சாமானியனுக்கோ சட்டம்

தன் கடமையை செய்கிறது..!

இயற்கையை அழிப்பவன்

இறைவனென போற்றப்படுகிறான்

இயற்கையை காக்க போராடுபவன்

தேசதுரோகியென தூற்றப்படுகிறான் .

ஆக இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?

*குறிப்பு: இக் கவிதை வாட்ஸ் அப் பதிவில் 26-02-2017 இல் கண்டது.*
*ஒரு வேளை நெருக்கடி வந்தால் எனது கவிதை இல்லையென்று மறுக்கவும் வாய்ப்புள்ளது.*

No comments:

Post a Comment