Saturday, September 17, 2016

தாங்கும் ஏழு சக்கரங்களும் அதன் சுபாவங்களும

மனித உடலில் உயிரைத் தாங்கும் ஏழு சக்கரங்களும் அதன் சுபாவங்களும்:

மனித உடலில் ஏழு சக்கரங்கள் இயங்குகின்றன.இந்த ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது.

அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரம்.

வீரிய சக்தியான மூலாதாரம் முதுகெலும்பின் கடைசிப்பகுதியில் (நமது மலத்துவாரத்துக்கு சற்று மேலே) அமைந்துள்ளது. இது விநாயகரின் ஆசி பெற்ற
இடமாகும். ஐம்பூதங்களில்  இது மண்ணுக்குரியது.

ஆசாபாசங்கள், மனிதனின் அடிப்படை உணர்வுகள் மற்றும் சிருஷ்டிக்குரிய ஸ்வாதிஷ்டானம் தொப்புளுக்குக் கீழே அமைந்துள்ளது. இது  நீருக்குரியது.

தொப்புள் பகுதியில் அமைந்துள்ளது மணிப்பூரகம். இது பயம், பதற்றத்துக்குரியது.  இது பஞ்சபூதங்களில் அக்கினிக்குரியது. இது பெண்களுக்குரிய  சக்தி  மையம்  ஆகும்.

இரண்டு மார்புகளுக்கு நடுவே அமைந்திருப்பது அனாகதம். கருணை, அன்பு போன்றவற்றின் இருப்பிடமான இது ஐம்பூதங்களில் காற்றிற்குரியது.

தொண்டைக்குழியில் இருப்பது விசுக்தி.  சிந்தனை, சுதந்திர உணர்வு, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் திறன் ஆகிவற்றிற்குக்  காரணகர்த்தாவான  இது ஆகாயதத்துவத்தின் அடிப்படையில் இயங்கி வருகிறது.

புருவத்தின் நடுப்பகுதியில் இருப்பது ஆக்ஞா. இது உள்ளுணர்வின் இருப்பிடம் ஆகும். ஐம்பூதங்களில் மனதின் சக்தியிது. (Pituitary gland).

சஹஸ்ரஹாரம் உச்சந்தலை தியானமும்,பிரபஞ்ச பிரக்ஞையும் பிறக்குமிடம். (Pineal gland).

இந்த ஏழுச் சக்கரங்களுக்கு உரிய திருஸ்தலங்களே
திருவாரூர், திருவானைக்கால்(திருச்சி), திருவண்ணாமலை, சிதம்பரம், திருக்காளஹஸ்தி, காசி, திருக்கயிலை.

இந்த ஏழுச்சக்கரங்களைத் திறக்கும் தியான முறைகளில் மனவளக்கலையும், ரெய்கியும் ஆகும். ஆனால், இரண்டின் வழிமுறைகளும் முற்றிலும் வேறுபட்டவை. நமது தினசரி வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டே நம்மை ரிஷியாக்கும் வழிமுறைகள் இவையாகும். முயற்சிக்கவும்;

இறையருள் மற்றும் குருவருளால் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றிபெறவும்.யோக வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில்,தியானம், குரு தீட்சை, தியான ஆராய்ச்சி என இறங்குபவர்கள் இந்த ஏழுச் சக்கரங்களைத் திறக்கத்துவங்கினால்,  இடையில் நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால், அவர்கள் மரணம் அல்லது மன நிலை பாதிப்பில்தான் வீழ்ந்தாக வேண்டும், என்று நம்பப்படுகிறது .

தகுந்த  குருவின்  துணையோடு மட்டுமே ஆன்மீக சாதனைகளை நிகழ்த்திட வேண்டும்.  இது மிக மிக அவசியம்.

No comments:

Post a Comment