Sunday, September 11, 2016

மரணமிலாப் பெருவாழ்வு

            மரணமிலாப்                                =====================================                                                                             மூக்கில் மேலும் கீழும் வாசித்துக்
கொண்டிருக்கும் காற்று ,சிந்தைதனில் ஒத்து
ஆடாது,ஓடாதுநின்று போய்விட்டால்
மரணமிலாப் பெருவாழ்வு' என்று பொருள்
கூறுவார்கள்.அதையே அவ்வையார் 'வாசி
வாசி என்று வாசித்த சிவம் இன்று சிவா
சிவா என சிந்தைதனில் நின்று' என்று
பாடினார் . சரிதான்.ஆனால்
'வாசிக்குதிரையேறி (மூச்சு) ஞான
வேட்டையாட வேண்டுமே தவிர குதிரை
முன்னால் சென்று மறிக்கக்
கூடாது'.அதாவது குதிரையின்
கடிவாளத்தைப் பற்றி குதிரையோட்ட
வேண்டுமேயல்லாதுகுதிரை முன்னால்
சென்று மறிக்கக் கூடாது. குதிரையின்
கடிவாளம் எது ?'காற்றைப் பிடிக்கும்
கணக்கை அறிந்திட்டால் கூற்றை உதைத்துக்
குதித்தாட மாட்டேனோ? ' என்றொரு சித்தர்
கூத்தாடுகின்றார்.சித்தர்களின் மரணமிலாப்
பெரு வாழ்வு ஒரு கடினமான காரியம்
இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென
வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும்
மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு
வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள்
சித்தர்கள்.எனவேஅவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ
(சாவை மீறியவர்) என அழைத்துக்
கொண்டார்கள்.அய்யப்பன்
கோவிலுக்குச் செல்பவர்களும் இவ்வாறே
சும்மா அர்த்தம் புரியாமல் அழைத்துக்
கொள்ளுகிறார்கள்.ஒரு நிமிடத்துக்கு 15
மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு
வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள்
ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி
விதியை உருவாக்கி வைத்து
இருக்கிறது.ஒரு நாழிகையான 24
நிமிடங்களில்360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360
மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே
குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின்
கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று
முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு
நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு
ஏற்படுத்தப்பட்டது.216 உயிர் மெய்யெழுத்துக்க
ளும் இந்த 21,600 மூச்சுக்களையே
குறிக்கின்றன.12உயிரெழுத்துக்களும் வலது
நாசியில் ஓடும் சூரிய கலை 12 அங்குலம்
ஓடுவதைக் குறிக்கும்.ஒரு மாதத்தில் சூரிய கலை 12 நாட்கள்
மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது .உயிரெழுத்துக்க
ளில்குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்கள்
ஐந்தை குறிக்கும்.நெடில் ஏழும் நமது உடலில்
உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.வள்ளுவர்
தமது குறட்பாக்களில் முதலடியில் 4
சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று
சீர்களையும் (3+4=7)ஏழும் ,அதிகாரங்கள்
133(1+3+3=7) ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள்
ஏழைக்குறிக்கும்.18 மெய்யெழுத்துக்களும்
இடது நாசியில் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர
கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18
டைகுறிக்கும்.இந்த18 டையே,பதிணென்
சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள்
என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப்புரா
ணங்கள் என்றும், யோக சாதன முறைகளி
ஏற்படும் தடைகள்(நிலைகளும்)
பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள்
பதினெட்டு,பகவத்கீதையில்
பதினெட்டுஅதிகாரங்களைக்
குறிக்கும்,தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்
நடந்த யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம
ராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா
பாரத யுத்தம் பதினெட்டு நாள்,சேரன்
செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம்
புரிந்தது பதினெட்டு நாழிகை,
பதினெட்டாம் படிக்கருப்பசாமிஎன்றழைப்பதும்
இதனால்தான், ஏன் பைபிளில் ஆகமங்கள்
பதினெட்டு,அதே போல இடது நாசியில்
மூச்சுஓடும் நாட்களும் ஒரு மாதத்திற்கு
பதினெட்டு நாட்கள். இப்படி அங்குலம்
ஓடக்கூடிய சந்திர கலையை மதி என்றும்
கூறுவார்கள்.அந்தந்த திதிகளில் ஓட வேண்டிய
மூச்சு அந்தந்த திதிகளில் ஓடவில்லை என்றால்
வியாதிகள் ஏற்படும்.எந்த நாசியில் மூச்சு ஓட
வேண்டுமோ அதற்கு எதிர் நாசித்துவாரத்தை
(வலது நாசியில் மூச்சு ஓட வேண்டும்
என்றால் இடது நாசியையும்,இடதுநாசியில்
மூச்சு ஓட வேண்டும் என்றால் வலது
நாசியையும் பஞ்சினால் அடைத்து
வைக்கவும்)பஞ்சினால் அடைத்து வைத்து 48 நாட்கள்
மூச்சை ஓட்ட கேன்சர் முதலான கர்ம
வியாதிகளே பறந்தோடும்.மற்றவியாதிகள்
இதன் முன் நிற்குமோ? இதனாலேயே
விதியை மதியால் வெல்லலாமென்றும்
கூறியுள்ளார்கள்.பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது,பதி
னாறு பேறுகளையல்ல, பதினாறு
குழந்தைகளையும் அல்ல,பதினாறு அங்குலம்
ஓடக்கூடிய சந்திர கலையை ஓடாமல்
பெற்றுவிட்டால் மரணமில்லாப் பெருவாழ்வு
வாழலாம் என்பது குறித்தே இந்த
வாழ்த்து.ஆத்தி சூடி
இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும்
முழுவெண்மேனியான்(சிவன்)கருநிறம்
கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்(கண்ணன
்),மஹமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
(அல்லா)ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்(பரம
பிதா)உருவகத்தாலே உணர்ந்து
உணராதுபலவகையாகப் பரவிடும்
பரம்பொருள் ஒன்றேஅதனியல் ஒளியுறும்
அறிவாம்அதனிலை கண்டார் அல்லலை
அகற்றினார்அதனருள் வாழ்த்தி அமர வாழ்வு
எய்துவோம்.(நன்றி பாரதியார்)சைவத்தில்
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும்முழுவெண்மேனியானான
சிவன்,வைணவத்தில் கருநிறம் கொண்டு
பாற்கடல்மிசை கிடப்போனான
கண்ணன்,முஸ்லீம்மதத்தில் மஹமது நபிக்கு
மறையருள் புரிந்தோனான
அல்லா,கிறித்துவமதத்தில்ஏசுவின்தந்தை(பரம
பிதா) எனப்பல மதத்தினர் உருவகம் செய்து
கொள்கின்றனர்உருவகத்தால் மட்டும் உணர்ந்து
கொண்டு,அதன் உண்மை நிலை அறியாது
இருக்கிறார்கள்.இப்படி பலவகையாக பரவி
நிற்கும் பரம்பொருள் ஒன்றே. அதனிலை
தெரிந்து கொள்வதுதான் ஒளி பொருந்திய
அறிவு (மற்றைய அறிவெல்லாம் இருள்
அறிவு).அதனிலை தெரிந்து கொண்டவர்கள்
உலகத்தில்உள்ள அல்லல்களையெல்லாம் அகற்றிக்
கொண்டவர்கள்,மற்றவர்களின் அல்லல்களை
அகற்றுபவர்கள்(அவர்கள்தான் சித்தர்கள்).அந்த
ஒளி பொருந்திய அருட்பெருஞ்சோதி
ஆண்டவரை வேண்டி வழிபட்டு(எனில் அவர்
நம்முடலில் இருக்குமிடம் தெரிந்து)அமர
வாழ்வான மரணமில்லாப் பெருவாழ்வு
வாழ்வோம்.இந்த சித்தர்களின்
சாகாக்கலைக்கு முக்கியமான ஒன்றான சர
நூல் சாஸ்திரத்தை இங்கே பார்க்கலாம்.இந்த சித்தர் சரநூல் சாஸ்திரம்
என்பது சிவன் பார்வதிக்குச் சொல்லி ,
பார்வதி நந்திதேவருக்குச் சொல்லி,
நந்திதேவர் அகஸ்தியருக்குச்சொல்லி,
அகஸ்தியர் பதிணென் சித்தர்களுக்கு சொல்லி,
சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும்
இரகசியமாக உபதேசிக்கப்பட்டு வருவது.சரம்
என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால்
மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை
அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம்
என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை
அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும்,
அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது
என்பதற்காகவும்,அண்ட சராசரம்(அண்டம் என்றால்
முட்டை என்று பொருள்) என்று அழைத்து
வந்தனர்.1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி
நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600
மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்
துக்கள் 216 என்பது இந்த 21,600
மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன்
வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு
மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய
ஆயுள் 120 ஆண்டுகளாகும்.ஆனால்
உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும்
போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும்,
தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின்
போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில்
சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில்
ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு
எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு
தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.நாம்
செய்யும் காரியங்களில் வெற்றி பெறவும்,
காரியத்தடை நேராமல் தடுத்துக் கொள்ளவும்,
பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும்
நபருக்கு காரியசித்தியாக்குதலையும்,
இன்னும் பல காரியங்களுக்கும் இந்த சரநூல்
சாஸ்திரம் பயன்படுகிறது. சரம் பார்க்கத்
தெரிந்தவனே “பார்ப்பான்” என்று
அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத்
தெரிந்தவனிடம் எந்த மோதலையும்
வைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே
“சரம் பார்ப்பவனிடம் பரம் போகாதே” என்று
வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன்,
எனவே அகத்தியர் தனது சரநுநூல்
சாஸ்திரத்தில், சரத்தை இறைவனுக்கு
சமமாகவும் பஞ்சபூதங்களின் ஒடுக்க
ஸ்தானமாகவும்கூறுகிறார். இந்த சரநூல்
சாஸ்திரத்தின் விரிவைப் பார்ப்போம்.சூரிய
கலை, சந்திர கலை அவற்றின் வேகம் மற்றும்
எண்ணிக்கையைப் பற்றி பார்த்தோம். ஒரு
நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின்
எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம்
சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில்64 கை
மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான
கலைகளாகும். 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன.
அவை ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சின்
எண்ணிக்கையை குறிக்கும். 5 வெள்ளிப்
படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து
மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச
பூதங்களையும்) குறிப்பன.இதையே
விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்.
இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல
மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய
சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள்
விருத்தியாகும்.எனவே விதி முடிவும்
விலகியே போகும்.நந்தனார் கீர்த்தனையில்
எட்டும் இரண்டறியாத மூடன் என்கிறார். 8
என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில்
குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ'
காரமாக தமிழ் எழுத்துக்களில்
குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம்
என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம்
ஓடும் சந்திரகலையை குறிக்கிறது. 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'அகார(8), உகாரம்(2),யகாரம்(10).தமிழ் எழுத்துக்களில் எண்ணாகவும் எழுத்தாகவும் திகழ்கின்றனவோ அவையே அகாரம் மதி,உகாரம் ரவி,சுடர் மகாரம்,இந்த மூன்றும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம்.ரவி, மதி,சுடர்,மூன்றிலும் இருப்பது சிகாரம் என்றழைக்கப்படும் நெருப்பு.'நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்'“குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்குழவி அலியாகும் கொண்ட கால் ஒக்கிலே”திருமந்திரம் 482உடலுறவில் இணைகின்ற ஆணுக்கு வலது நாசியில் சுவாசம் நடந்தால் ஆண்குழந்தை தோன்றும். சுவாசம் இடது நாசியில் நடந்தால் பெண்குழந்தை தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை அலியாகும். வலது அல்லது இடது நாசியில் சுவாசம் நடந்து அப்போது அபானன் என்ற வாயு எதிர்க்குமானால்இரட்டைக் குழந்தை தோன்றும்.பிறவியிலேயே கூன், குருடு, ஊமை போன்ற பல குறைகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை சித்தர்கள் சரநூலில் பல இடங்களில் கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்மாத உதரம் சலமிகில் மூங்கையாம்மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை.மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே'திருமந்திரம் 481உடலுறவின் போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு மூளை வேகமாக செயல்படாது மந்தமாக இருக்கும். பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம், சிறுநீர் இரண்டும் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண் குருடாகும் என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.“பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்.பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்பாய்கின்ற வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே”திருமந்திரம் 480ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள் வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும் சரியான அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால் ஆணின் சுவாசம் தேவையான அளவை விட குறைந்து வெளிப்படுமானால்பிறக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். சுவாசம்திடமின்றி வெளிப்படுமானால்பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.'பாய்ந்த பின் அஞ்சோடிய ஆயுளும் நூறாம்பாய்ந்த பின் நாலோடி பாரினில் எண்பதாம்'திருமந்திரம் 479உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம் பாய்ந்தால் பிறக்கும் குழந்தை நூறு வயது வரை வாழும்.நான்கு மாத்திரை நேரம் ஓடினால் எண்பது வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும் மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்'கொண்ட வாயு இருவருக்கும் ஒத்தொழில்கொண்ட குழவியும் கோமளமாயிரும்கொண்ட நல்வாயு இருவருக்கும் குழறிடில்கொண்டதும் இல்லை கோல்வினையாட்கே.'திருமந்திரம் 483உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம் சீராக ஒரே அளவாக ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறாசந்திர கலை சூரியகலை சூரியன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள் குறிப்பிட்டிருந்தோம்.சூரியன் உதிக்கும்போது சூரியகலையில் அதாவது வலது நாசியில் ஓட வேண்டிய திதிகளில் காலை 6 மணிக்கு ஓட ஆரம்பித்து ஒரு மணிநேரம் கழித்து சந்திர கலை ஓட ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட ஆரம்பிக்கும். இதே போல்சூரியன் உதிக்கும் போது சந்திர கலையில் ஓட வேண்டிய திதிகளில் சூரிய உதயத்தில் சந்திர கலையில் ஒரு மணிநேரம் மூச்சு ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே மாறி மாறி மூச்சு ஓடிக்கொண்டிருக்கும்.“நாத விந்து கலாதி நமோ நமவேத மந்திர சொரூபா நமோ நம”-அருணகிரிநாதர் திருப்புகழ்-
நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே வேத மந்திர சொரூபனான இறைவனுக்கே வணக்கம் தெரிவிக்கிறார்.இதையேதிருப்புகழில்“அருகுநுனி பனியனைய சிறிய துளிபெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்”என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச் சக்தியைப் பெற்றிருக்கின்றன. எனவே “விந்து விட்டவன் நொந்து கெட்டான்” என்று சித்தர்கள் கூறுகின்றனர். நாம் அணியும் திருநீறு வெள்ளை நிறமாக இருந்து இந்த விந்தையே குறிக்கிறது. குங்குமம் சிவந்த நிறமான பெண்களின் நாதத்தைக் குறிக்கிறது.இதையே உலக இயக்கம் என்பதால் குங்குமமும். திருநீறும் நெற்றியில் அணிகிறோம். எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.ஆண், பெண்களின் சேர்க்கையே லிங்க சொரூபம். இடப் பாகம் சக்தியென்பதால் லிங்கத்தின் இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் அந்த இடப்பாகத்தையே நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. சக்தியான சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே, இது கோயிலில் அமைப்பாக காட்டப்பட்டுள்ளது.(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போக முனிச் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில் 'யின்'(yin)என்றால் இடப்பக்கம் என்றும் பெண் தன்மை என்றும் ,யாங்(yang) என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை என்றும் கூறப்பட்டுள்ளது.)“மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்நாலு நாலு முன்னிலொரு நாட்டமாகி நாட்டில்பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்.ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை உண்மையே”“இருக்கலாம் இருக்கலாம் அவனியிலே இருக்கலாம்அரிக்குமால் பிரம்மனும் அகண்ட மேழ் அகற்றலாம்கருக்கொளாத குழியிலே காலிடாத கண்ணிலேநெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ”“சிவ வாக்கியர்”மேற்கண்ட பாடல்களில் மூலமான மூச்சை சரியான படி அறிந்து அளவிட்டு 4 அங்குலமட்டில் ஓட விட்டால் பாலன் போன்ற தோற்றமும், பரப்பிரம்மான இறைவனுக்குச் சமமாகவும் ஆகலாம் என்று சிவவாக்கியர் இறைவன், இறைவி மீது ஆணையிட்டுக் கூறுகிறார்.இந்த அவனியான பூமி இருக்கும் வரை, அரி, மால் பிரம்மன்., அண்டங்கள் இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத கண்ணிலேஎன்ற மூச்சுவிடாத (கால் என்றால் காற்று) நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில்நெருப்பறை திறக்கும். “நெருப்பறை திறக்குமானால் , நீ நான் அனைவரும் ஈசனே.உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்குஉறங்குகின்ற போதெல்லா மதுவேயாகும்.பெண்ணின் பாலிந்திரியம் விடும்போ தெல்லாம்பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லுதின்னுங் காயிலை மருந்தும் அதுவேயாகும்.தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்மண்ணு}ழி காலமட்டும் வாழ்வார் பாரு.மரலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.அகத்தியர்தம் ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.எனக்கு சொந்த அனுபவத்தில் சில மருத்துவ கலைகளின் அறிவு உண்டு. ஆனால் சித்த மருத்துவக் கலையில் எனது முன்னோர்கள் பரம்பரையாகச் செய்து வந்திருக்கின்றனர். இவற்றில் முக்கியமான விஷயம், என்னை பிரமிக்க வைத்த விஷயம் ஒன்று உண்டு. எல்லாவைத்திய முறைகளும் உடலில் ஏற்படுகின்றன பிணிகளைப் போக்கிக் கொள்ளும் முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன. அதிலும் சில நோய்கள் மனித குலத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் சவாலாகவே அமைந்திருக்கின்றன.ஆனால்சித்தர்களோஉடலில் ஏற்படுகின்ற வியாதிகளின் எண்ணிக்கை 4448 வியாதிகள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன் அவற்றைப் போக்கும் முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி என்று கூறுவதுடன் மரணம் மாற்றம் முறைகளையும, மரணமிலாப் பெருவாழ்வு என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன் கடைபிடித்து வெற்றியும் கண்டுள்ளனர்.குரு குல கல்வி முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டுவந்தன.இந்த மேம்பாடான் கல்விமுறை அழிந்து தற்கால சந்ததியினருக்குகிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மெக்காலே கல்வி முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டது.அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள்,சுயம் என்பது போய் தன் காலில் நிற்கத்தெரியாதவர்களாகவும்,அரசாங்க வேலையை எதிர்பார்த்து ,அதற்கு கையூட்டு கொடுப்பவர்களாகவும். கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதி தொலைத்து,முறையற்ற வழியில் பணம் தேடும்பிசாசுகளாய் வாழ்ந்து,முடிவில் இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.

1 comment:

  1. என்ன ஒரு அற்புதமான செய்தி.
    ஓரு சித்தர் புக் படிச்சமாறி இருக்கு.
    நன்றியை வார்த்தையால் சொல்ல இயலாது.
    இருப்பினும் நன்றிகள் கோடி உங்களுக்கு.

    ReplyDelete