Friday, September 30, 2016

வாழ நினைத்தால் வாழலாம்

'' வழியா இல்லை பூமியில்''..
..''மஹாளய அமாவாசை'':

''எமனேஸ்வரம் சொர்ணகுஜாம்பிகை உடனுறை
மல்லிகார்ஜுனேஸ்வரர், எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்'' .ஆலய தொடர்புக்கு
;9486013533...இத்தலத்தில் அமாவாசை நாட்களில் விநாயகர்,முருகர்,
மல்லிகார்ஜுனேஸ்வரர், எமனேஸ்வரமுடையார் ,சொர்ணகுஜாம்பிகை,பைரவர்
சன்னதிகளில் தீபம் ஏற்றி,நம் முன்னோர்களின் அதாவது பித்ருக்களின் நினைவாக
''மோட்ச தீபம்''ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இனம்புரியாத நோய்கள்,
உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும்
திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள்குழப்பம், கடன்
தொல்லை,தரித்திரம்,சேமிக்க முடியாத சம்பாத்தியம் போன்ற குறைகளுக்கு ஒரு
சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை
செய்வதுதான்.அதுவும் மஹாளய நாட்களில் செய்ய முடியதாவர்கள் மஹாளய அமாவாசை
நாட்களில் மட்டுமாவது செய்வது சிறப்பு.அன்று இத்திருக்கோயிலில் முறைப்படி
மோட்ச தீபம் ஏற்றி வழிபடலாம்.[புரட்டாசியில் வரும் அமாவாசை, மஹாளய
அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் 15
நாட்களை மஹாளய பட்சம் என்று சொல்வார்கள்.பிற மாதங்களில் வரும் அமாவாசை
நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக
அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில்
முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம்
அடைவர். ]பரமக்குடியில் இருந்து நயினார்கோயில் செல்லும் பாதையில் 3
கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்து உள்ளது.இத்தல பைரவர் நாய்
வாகனம் இல்லாமல் எமதர்மனின் ஆயுதமான தண்டத்தை கையில் ஏந்தி
உள்ளார்.இவருக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பு.கி.பி.1220
ல் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட ஆலயம்
இது.வரசித்தி விநாயகர்,அரசமர நாகர்,ராஜ கணபதி,வள்ளி தெய்வானை உடனுறை
முருகப்பெருமான்,நடராஜர் சன்னதிகளும் சிறப்பு மிக்கவை.பித்ருக்களின்
பரிபூரண ஆசி நமக்கும் ,நம் சந்ததிகளுக்கும் கிட்ட இத்தலம் வந்து அமாவாசை
நன்னாளில் மோட்ச தீபம் ஏற்றுவோம்.வறுமை,தரித்திரம்,வரவு இருக்கும் ஆனால்
செலவு செல்லும் வழி தெரியாத வண்ணம் சேமிப்பு இல்லாமை,சேமிக்க இயலாமை
,உடல் நோய்கள்,விபத்து,காரிய தடைகள்,குழந்தைகள் உடல்
குறைபாடுகள்,குழந்தைகள் கெட்ட வழியில் செல்லுதல் முதலிய அத்தனைக்கும் ஒரே
காரணம் தான்.ஆம்!''பித்ரு வழிபாடு''செய்யாமை..உண்மை இப்படி இருக்க,''ஐயோ
இந்த உலகத்தில் வாழ முடியவில்லையே,பிரச்சனைமேல் பிரச்சனை வருகிறது,கடன்
தொல்லை,குழந்தைகள் சரி இல்லையே,குழந்தைகள் மன வளர்ச்சி சரி இல்லையே,மண
வாழ்க்கை மனம்[மணம்] இல்லையே''என்றெல்லாம் புலம்பி தவிப்பவர்கள் அமாவாசை
நாட்களில் இத்தலம் வந்து நம் முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி
வழிபட பித்ருக்கள் மகிழ்வர்,நம் வாழ்வு சிறக்கும்.வாழ்வின் சொல்லொணா
துயரங்கள் அகலும்..குடும்பம் வாழையடி வாழையாய் விருத்தி அடையும்.ஆம்!வாழ
நினைத்தால் வாழலாம்..பித்ரு வழிபாடு முறைப்படி செய்து வந்தால்...வழியாய்
இல்லை பூமியில்?...பூமியில் வழி இருக்கிறது...அதுவே அமாவாசை நாட்களில்
பித்ருக்களுக்கு ஆராதனை செய்து மோட்ச தீபம் ஏற்றுவது....
நன்றி:- சிவா,வாட்ஸ் அப்

No comments:

Post a Comment