Sunday, September 11, 2016

சுடுகாட்டு  ஞானம்


==============
      ஈமச் சடங்குகள் எல்லாம் பொருள் செரிந்தவையாகும். இறந்த தந்தைக்கு முன் மகன் தோளில் நீர் சுமந்த குடத்தை வைத்துக் கொள்வான். தண்ணீர் குடத்துடன் மூன்று முறை சுற்ற செய்து மூன்று ஓட்டை இட்டு, அப்படியே உடைத்து திரும்பி பார்க்காமல் போ' என்பார்.
தண்ணீர் குடம் என்பது சரீரம். அதில் நிறைந்த தண்ணீர் ஜீவாத்மா . முதலில் இட்ட ஓட்டை தனெஷனை (பணத்தாசை), இரண்டவது இட்ட ஓட்டை தாரெஷனை (மனைவி மேல் வைத்த ஆசை) , மூன்றாவது இட்ட ஓட்டை மக்கள் மேல் வைத்த ஆசை.

இந்த மூன்று ஆசைகளாகிய ஓட்டைகளின் வழி சரீரத்திலிருந்த ஆத்ம சைதன்யமாகிய உயிர் சிந்திவிட்டது. இந்த ஆசாபாசத்தை திரும்பி பாராமல் நீ அறநெறியில் செல்வாயாக என்ற குறிப்பை சட்டியை உடைத்து  காட்டப்படுகிறது ..

நம் முன்னோர்கள் செய்த சடங்குகள் அர்த்தமற்றவை என்று தள்ளாமல்  உண்மையை  உணர்வது மதியுடமை ஆகும்.

No comments:

Post a Comment