Monday, September 19, 2016

தண்ணீருக்குள் ஏன் சுவாசிக்க முடிவதில்லை?             ===============

===================        வளிமண்டலக்காற்றை நமது நுரையீரலுக்கு எடுத்துச்சென்று அதிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து ரத்தத்தில் கலப்பதுதான் சுவாசம்.நீருக்குள் இருக்கும்போது நுரையீரலுக்குள் நீர் அல்லவா சென்றுவிடும்.நீரிலிருந்து ஆக்சிஜனை பிரிக்கும் தன்மை விலங்குகளின் நுரையீரலுக்கு இல்லை.எனவே நுரையீரலில் நீர் தேங்கி சுவாசம் முட்டி விலங்கினத்தைச் சேர்ந்த நமக்கு இறப்பு நேரிடுகிறது.                                                                       நம்மைப்போலவே மீன்களுக்கும் உயிர்வாழ ஆக்சிஜன் தேவை.ஆனால் தண்ணீருக்குள் எப்படி மீன்கள் தங்களுக்குதேவையான ஆக்சிஜனைப் பெறுகின்றன? ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் நிறைந்தது நீர்.அதைப்பிரித்து ஆக்சிஜனை மட்டும் தனியாக உட்கொள்ளமுடியாது.பின் எப்படி நீருக்குள் இருக்கும் மீன்கள் ஆக்சிஜனைப்பெறுகின்றன? தண்ணீர் கலக்கப்படும்போதும்,நீர்த்தாவரங்கள் வழியாகவும் நீரில் நுண்ணிய காற்றுக்குமிழிகள் கரைந்து கலக்கின்றன.அதிலிருந்து மீன்கள் தங்களுக்குத்தேவையான ஆக்சிஜனைப்பெறுகின்றன.மீன்களின் உடலமைப்பில் நீருக்குள் இருக்கும் ஆக்சிஜனைப் பிரித்து எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றும் செவுள்கள் (Gills) என்ற பாகம் உள்ளன.இதன் மூலமாகத்தான் நீருக்குள் மீன்களின் சுவாசம் நடைபெறுகிறது.கடல் மீன்களின் வாய் வழியாக உள்ளே செல்லும் நீர்,செவுள்களில் இருக்கும் நுண்ணிய துகள்கள் வழியாக ஆக்சிஜனை உறிஞ்சி,ரத்தத்தில் சேர்க்கிறது.நன்னீர் மீன்கள், செவுள்கள் வழியாகவே நீரை உள்வாங்கி சுவாசிக்கின்றன.                                                                                                                                          வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment