Monday, September 19, 2016

2500 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை

..
================================                 (சமூக வலைத்தளங்களில் உலாவரும் தற்போதைய நகைச்சுவைப்பதிவு)

தன் வீட்டு மொட்டை. மாடியில்
பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர்
சாதனை .(அரிசி. கம்பு. சோளம்.) 

உலகத்தில் அதிக (30)வருடம் உயிர் வாழ்ந்த
மனிதர் கின்னஸ் சாதனை .
வேங்கைமான் அருகே பூமிக்கு அடியில் தண்ணீர் இருப்பதை மஸ்ரோ செயற்க்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது..

புளூட்டோவில் இருந்து பூமிக்கு பனி நீர்
எடுக்கும்
திட்டத்தை நவீன மத்திய அரசு முடிவு செய்தனர் .

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த
பாக்கிஸ்தான் ரோபோக்களை இந்திய
ரோபோக்கள்.
சுட்டதில் ஐந்து ரோபோக்கள் பழுதடைந்தன. 

செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும்
இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக நாடுகள்
முடிவு செய்தனர்.

கும்பகோணம் அருகில் மிக பழமையான 500
வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய
இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது
அதற்கு சைக்கிள் என்று பெயர் இருந்ததாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தேர்தலில் வாக்குப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன் கிரகத்தில் வாழும் இந்தியர்கள் அங்கிருந்து1000 G இண்டர்நெட் மூலம் வாக்களிக்களாம்.

சனிக்கோளில்  வாழும்' இந்தியர்களுக்கு பணம் கொடுப்பதற்காக  ராக்கெட் மூலம் எடுத்துச்சென்ற 1 கோடி ரூபாய் பணத்தை  தேர்தல் பறக்கும் படையினர் பறந்து சென்று பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த ராக்கெட்டின் RC Book, Insurance யை விண்வெளி போலிஸார் பறிமுதல்  செய்து செய்வாய் கிரகத்தின் உச்சநீதி மன்ற கிளையில் ஒப்படைத்தனர்.

செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள்
குண்டம்
இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர்.

நேற்று இரவு திடிரென்று விண்ணில்
இருந்து பொழிந்த நீர் துளிகளாள்
மக்கள் அஞ்சி நடிங்கினர் பிறகு விஞ்ஞானிகள்
அதற்கு மழை என்றும்
10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும் என்றும் கூறினர்...

No comments:

Post a Comment