Friday, November 18, 2016

Maharishi message Nov 18

வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

இன்றைய சிந்தனை:

நவம்பர் 18 :

மனதின் மூன்று நிலைகள் :

உயிரின் படர்க்கை நிலையில் மனம் இயங்கும் நிலைகளை மூன்றாகப் பிரித்துக் காணலாம்., அதாவது மேல்மனம் அல்லது புறமனம், நடுமனம், அடிமனம் என்று மூன்று நிலைகளாகும். இதில் அடிமனத்திற்கும் புறமனத்திற்கும் தொடர்புபடுத்தி இருப்பது நடுமனமாகும். இதில் நடுமனம் தான் மிகவும் முக்கியமானது.

உணர்தல், துய்த்தல், கணித்தல், சிந்தித்தல், பதிவுகொள்ளல் என்ற ஐவகைச் செயல்களைக் கொண்ட மனமானது தேவை, பழக்கம், சூழ்நிலை, சந்தர்ப்பம் இவற்றால் புலன்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு செயல் புரியும் போது அச்செயல் பதிவுகள் அதனதன் அழுத்தத்திற்கேற்ப மேல்மனம் அல்லது புறமனம் (conscious mind) நடுமனம் (Sub-conscious mind) அடிமனம் (Super-conscious mind) என்ற மூன்றிலும் பதிவுகள் ஏற்படுகின்றன.

தொழில் செய்வதால் உடல் கருவிகளுக்கு ஏற்படும் திறனே இந்திரியப் பதிவு [ஞானகர்மேந்திரியப் பதிவுகள்]. இப்பதிவுகளை ஒட்டிய மன இயக்கம் மேல்மனம் அல்லது "புற மனமாகும்".

தொழில் செய்வதால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் மூளையில் பதிவாகிறது. இது தான் "நடுமனம்".

இவைகள் அனைத்தும் சூக்குமமாக வித்து அணுத் திரளில் பதிவாகி விடுகின்றன. இதுவே "அடிமனம்".

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment