Friday, November 11, 2016

நூறு வயது வரை வாழ…*

*

ஒரு முறை திருதராஷ்டிரன்,தன்
சகோதரர் விதுரரிடம், *‘‘மனிதனுக்கு*
*ஆயுள் நூறு வருடம் என்பர்.* *எனினும் இதுவரை நூறு வருடங்களைக்*
*கடந்த மனிதர்கள் எவரும் இல்லை*
*என்றே தோன்றுகிறது. இதற்குக்*
*காரணம் என்ன?’’* என்று
கேட்டார்.

விதுரர் பதில்
சொன்னார்: ‘‘அரசே…
*மனித ஆயுளை அறுக்கும் வாள்கள்....ஆறு.*

_*முதலாவது கர்வம்.*_
மனிதர்களில் பலர், ‘இந்த உலகில்
நானே கெட்டிக்காரன்.
மற்றவரெல்லாம் முட்டாள்!’
என்று நினைக்கிறார்கள்.
ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால்
கடவுள் சும்மா இருக்க
மாட்டார். ஆகவே, கர்வம்
இல்லாமல் இருக்க, தனது குற்றம்
குறைகளைப் பார்க்க வேண்டும்.
பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.

_*இரண்டாவது வாள்-*_
_*அதிகம் பேசுவது.*_ தனக்குப் பேச
விஷயங்கள் இல்லாதபோதும்,
வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

_*மூன்றாவது வாள்- தியாக*_
_*உணர்வு இன்மை.*_ அதீத ஆசையே
மனிதனின் தியாக உணர்வைத்
தடுக்கிறது. இதை உணர்ந்தால்,
தியாக உணர்வு தானே வரும்.

_*நான்காவது வாள்-*_
_*கோபம்.*_ கோபத்தை வெல்பவனே
உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது
என்பது தெரியாமல் போகிறது.
விவேகம் இழந்து பாவங்களைச்
செய்ய நேரிடுகிறது.

_*ஐந்தாவது*_
_*வாள்- சுயநலம்.*_ சுயநலமே
எல்லா தீமைகளுக் கும் காரணம்.
சுயநலம் கொண்டவன்
தனது காரியத்துக்காக பாவம்
செய்யத் தயங்குவதில்லை.

_*ஆறாவது வாள்- துரோகம்.*_ இந்த
உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத்
துரோகம் செய்வது தவறு._

இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன்
விலகி வாழ்ந்தால் நிச்சயமாக
அவன் நூற்றாண்டை நிறைவு
செய்வான்.’’

No comments:

Post a Comment