Saturday, November 19, 2016

காயகல்பப் பயிற்சி*

*

நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி வளம் பெறும் கலை.

நம் முன்னோர்களில் பலர் நூறு ஆண்டுகளுக்கும்மேல் வாழ்ந்திருக்கிறார்கள். தற்போது வாழும் மக்கள் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம்
ஆகிய ஐந்திலும் அழுவுமுறை மீறி வாழ்வதால் நரம்புமண்டலம் தளர்ந்து வயோதிகம் முந்திக்கொள்வதால் ஆயுள் குறைந்துவிடுகிறது.

காயகல்ப பயிற்சியில் அஸ்வினி முத்திரை பயிற்சியை முறையாக செய்து ஆயுளை நீட்டித்துக்கொள்ளலாம்.

காயகல்ப பயிற்சியில் அஸ்வினி முத்திரை செய்து வர வர
நரம்பு மண்டலம் முழுவதும் பலம் பெறுவதால் மூளை செல்களும்
நாளமில்லா சுரப்பிகளும் பலம்பெறுகின்றன.
வயோதிகமும் தள்ளிப்போடப்படுகிறது.

"காயகல்பம் செய்துவிட்டான் இவன் வாழ்நாளை கணக்கிட்டு
வயதுரைப்பார் யாருமில்லை" என்கிறார் பாரதியார்.

பொதுவாக முத்திரைகள் செய்யும்போது நாடிநரம்புகளில்
உயிரோட்டத்தடைகள் இருந்தால் நீங்கிவிடும்.
முத்திரைகளில் அஸ்வினி முத்திரையை மகாமுத்திரை என்று
யோக நூல்கள் கூறுகின்றன.

உடலில் உள்ள 72,000 நாடிநரம்புகளும் தசநாடிகளுக்குள்
(வலப்பக்கம்-5; இடப்பக்கம்-5) அடக்கம். தச நாடிநரம்புகளும்
குதச்சதையில் முடிவதால், அஸ்வினி முத்திரை போடும்போது
அனைத்து நரம்புகளிலும் உயிரோட்டாம் சீராக அமைந்து
எல்லா உறுப்புகளும் சீராக இயங்கும்.

குறிப்பாக பாலுறுப்புகளும் பால்சுரப்பிகளும் பலம் பெறுகின்றன. குழந்தைப்பேறு, பாலுறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எளிதாக நீங்குகின்றன. வித்துக்குழம்பும் ஓஜஸ் அலையாக மாறிவிடுகிறது.

நம்முடைய செயல் காரணமாகவோ, புறநிகழ்ச்சிகள் காரணமாகவோ,
உடல் இரசாயனத்தில் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு.
அக் குழப்பங்களை தானாகவே சீர்செய்து கொள்ளும் ஏற்பாடு
உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ளது.
அதுதான் ஓஜஸ் என்னும் சத்துப்பொருள்.

ஆன்மீக அறிவில் ஆர்வம் கொண்டு சிற்றின்ப வாழ்வில்
அளவுமுறை காப்பவர்களுக்கு பீனியல் சுரப்பியில்
இருப்பு வைக்கப்பட்ட ஓஜஸ் அமுதரசமாகமாறி
தானாகவே ரத்தத்தில் கலந்து உடலில் ஏற்படும்
இரசாயன குழப்பத்தை சீர்செய்து
நோய்களை குணப்படுத்திவிடும்.

ஆன்மிக சாதனையில் ஈடுபடாதவர்களும்
புலனின்பத்தில் கட்டுப்பாடு இல்லாதவர்களும்
காயகல்பப் பயிற்சியில் ஓஜஸ் மூச்சுப்பயிற்சி
செய்துவரவேண்டும்.

சிற்றின்ப நாட்டத்தால் மூலிதாரத்திற்கு அதிகமாக
இறங்கிவிட்ட வித்துக்குழம்பை பீனியல் இருப்புவைத்து
அமுதமாக்கி நோய்எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொள்ளலாம்.

ரசாயனக்குழப்பத்தால் ஏற்படும் எல்லா நோய்களும்
தானாக குணமாகிவிடும்.

காயகல்பப் பயிற்சி செய்பவர்களுக்கு
ஓஜஸ் உடல் செல்களில் பரவி செல்களுக்கு
தேஜஸை கூட்டி விடுகிறது.
இதனாலும் செல்களின் ஆயுள் கூடிவிடும்.
உணவு தேவையும் குறைந்துவிடும்.
அறிவு தானாக புலன்கடந்து சிந்திக்கும்.
உடல் நலமும் மனநலமும் ஓங்கும்.

இல்லறத்தவர்களுக்கு பாலுறவு பிரச்சனைகள் இருக்காது.
துறவிகளுக்கும் காயகல்பபயிற்சி அவசியம்.

*காயகல்ப பயிற்சி பலன்களின் சுருக்கம்*

1) உடலுக்கு இளமைத்தோற்றம் நீடிக்கும்.

2) ஆயுள் நீளும்.

3) இரத்தத்தில் இரசாயன குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுத்து, நோய் எதிர்ப்புசக்தியைக் கூட்டிக்கொள்ளலாம்.

4) இரத்தத்தில் இரசாயனக் குழப்பத்தால் வந்த எல்லா நோய்களையும்,
எளிதாக போக்கிக்கொள்ளலாம்.

5) தவம் செய்வதற்குத் தேவையான உயிர்ச்சக்தி
உடலில் இருப்பாக இருக்கும். தவஆற்றல் கூடும்.

6) மூளைசெல்களுக்கு சிந்தனைத்திறன் ஓங்கும்.

7) ஆன்மீக நாட்டம் இயல்பாக ஏற்பட்டு எளிதாக
ஆன்மாவை உணர்ந்துகொள்லாம்.

8) பாலுணர்வு ஒழுங்கு பெறும்.

9) தாம்பத்திய உறவில் நிறைவு ஏற்படும்.

10) இயற்கையையும், ஆன்மாவையும், தன்னையும் எளிதாக அறிந்து,
அறிவில் முழுமைபெற்று மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழலாம்.

*சித்தர்களின் காயகல்ப பயிற்சியை கற்றுக்கொள்ள அனைவரும் வாருங்கள்*

*நேரம் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை,*

முகவரி:
*மஞ்சக்குப்பம் அறிவுத்திருக்கோயில்*
ஆன்மீக உள்ளுணர்வு கல்வி மையம்
எண்:10-D, சின்னப்பன் தெரு, மஞ்சக்குப்பம், கடலூர்-607001.

போன்:98417 94591

அன்பர்கள், உயிரை வளப்படுத்தி, இளமையோடு, ஆரோக்கியத்தோடு
நீண்ட நாட்கள் வாழ உதவும் இந்த சிறப்பான பயிற்சியை பற்றி
தங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் கூறி
பயிற்சியில் கலந்து கொள்ள வலியுறுத்தவும்.
நீங்களும் மறுபயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

பயிற்சிக் கட்டணம்: தனிநபர்: 150/-, மாணவர்: 50/-, மறுபயிற்சி: 50/-

வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment