Friday, December 16, 2016

படித்ததில்_பிடித்தது_(வலித்தது)

#

#கண் தெரியாதவர் - நான்
தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

... #காது கேளாதவர் - நான்
ஒட்டு கேட்டதே கிடையாது...

#வாய் பேசாதவர் - நான் பொய்
பேசியதே கிடையாது..

#குள்ளமானவர் - நான் யார் முன்னும்
தலை குனித்து நின்றது கிடையாது..

#கை இல்லாதவர் - நான் யார்
குறையையும்
பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

#கால் இல்லாதவர் - நான் காசு பணம்
வந்ததும் கால் மேல் கால்
போடுவது இல்லை...

அதனால் தான்
எங்களை #மாற்றுத்திறனாளி
என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்..

எங்களால் செய்ய இயலாத செயல்கள்
செய்யும் நீ தான் ஊ.. --!!
அந்த வார்த்தையை உபயோகிக்க மாட்டேன்
#ஏனென்றால் அந்த வார்த்தையின்
வலி எனக்கு தெரியும் !!!!

No comments:

Post a Comment