Thursday, December 29, 2016

மரணம்

* ;*
வா  மனிதா . .
நீ  கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."

*மனிதன் ;*
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?" 

*மரணம் ;*
"மன்னித்துவிடு மனிதா . .
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.."

*மனிதன் ;*
நான் 
இரவு , பகலாக  உழைத்து  சேர்த்த   எனது  பொருளாதாரம் . .

*மரணம் ;*
"நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு ..

*மனிதன் ;*
"என்னுடைய திறமைகள். .

*மரணம் ;*
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்மந்தப்பட்டது..

*மனிதன் ;*
"அப்படி என்றால்
என் மனைவி,மக்கள்  மற்றும்   உற்றார்  உறவினர் . .

*மரணம் ;*
அவர்கள்   உன்   இதயத்துடன்  சம்பந்தப்பட்டவர்கள் . .

*மனிதன் ;*
எனது  உடல்?

*மரணம் ;*
"அது இந்த  மண்ணுக்கு
  சொந்தமானது

*மனிதன் ;*
கண்களில்   நீர் வழிய
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?"

*மரணம்* ;
நீ வாழ்ந்த 
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..
நீ  செய்த  தர்மம் , பிறருக்கு  நன்மை 
செய்தது  , பிறர்  துண்பத்தில்   பங்கு 
கொண்டது  ,பிறருக்கு  தீங்கு  செய்யாமல்  இருந்தது ,   போன்ற 
போன்ற  நல்ல  செயல்கள் ,
மற்றும்  நீ  செய்த  பாவ  கருமங்கள்..
இவை  மட்டுமே  உன்னுடையது . .

மற்ற   எதையும்   இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது..

*வாழும்  காலம்  கொஞ்சமே...*
*மனிதா  நீ  மாறிவிடு ,உன்  மறு  உலகத்திற்காக...*

No comments:

Post a Comment