Thursday, December 29, 2016

கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை

🌼 கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை 🌼
🌼 ஒரு நாள் நான் முடிவு செய்தேன்
இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…
🌼ஆம்,
எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை
🌼 அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.
🌼 அப்போது…
கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
🌼 “கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்...???”
🌼 கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…
🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”
🌼 “ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.
🌼 “நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.
🌼 அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.
புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது.
அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.
🌼 ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.
🌼 இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது.
ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை.
ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.
🌼 “மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.
🌼 ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.
🌼 அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.
🌼ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.
🌼 “இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.
தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது.
அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.
🌼 பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.
🌼 எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன்.
அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.
🌼 மேலும் கடவுள் என்னிடம்,
🌼 “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய்,
🌼 நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய்.
மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.
🌼 மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.
🌼 ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.
🌼 “மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான்.
ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
🌼 இறுதியாக,
“உன்னுடைய நேரம் வந்துவிட்டது.
நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”
🌼 நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்...???”
🌼 “மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.
🌼 “எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.
“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.
🌼 “அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா...???” என்று வியந்தேன் நான்.
🌼 “ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார் 🌼
❤ பகிர்வு ❤

No comments:

Post a Comment