Saturday, January 9, 2016

மூளை – தலைமைச் செயலகம்

மூளை – தலைமைச் செயலகம் – பாகம் 2

1. மூளையும் – பிரபஞ்ச சக்தியும் :

நாம் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையெனில், நமக்கு உற்சாகம் , சுறுசுறுப்பு எல்லாம் போய்விடுகின்றது – ஏன் ??

உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கவில்லை . நாம் தான் தினமும் 3 வேளை உணவு சாப்பிடுகின்றோமே என்று கேட்டால், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை – இந்த உடலுக்கு பிரபஞ்ச சக்தியும் மிகவும் அவசியம் ஆகும்

அதனால் தான் புனித நூல் பைபிள் : ” Man does not live by bread alone” என்று சொல்கின்றது

நாம் தூங்கும் போது , மூளை ஓய்வெடுத்துக் கொள்கின்றது – அப்போது அது பிரபஞ்சத்திலிருந்து ( cosmic space ) சக்தியை கிரகித்துக் கொள்கின்றது – அதனால் உடலுக்கு தேவையான சக்தியும் – சுறுசுறுப்பும் , தெம்பும் , உற்சாகமும் கிடைத்துவிடுகின்றது .

இதை கண்டறிந்த ஞானிகளும் ரிஷிகளும் , தூங்காத தூக்கம் என்ற சாதனை செய்து – அதன் மூலம் சிதாகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து , உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்று, ஊண், உறக்கம் , ஓய்வு இல்லாமல் தங்கள் சாதனையில் முன்னேறி, தங்கள் லட்சியத்தை அடைந்தனர்

ஞானிகள் , தங்கள் சாதனையில், மனதை – மூளையை அமைதி – ஓய்வடையச் செய்து , இந்த சக்தியைப் பெற்றனர் என்பது உறுதி .

அதனால் நாமும் , அதிக நேரம் சாதனைக்கு செலவிட்டால், உணவு, உறக்கம் , தாகம், ஓய்வு இல்லாமல் வாழலாம்.

இது எப்படி இருக்கிறதுவென்றால் : சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சக்தியை குறைப்பதுபோல், பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தி, நாம் உணவு, நீர், தூக்கம் மீதுள்ள சார்பு நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்

புறத்திலுள்ள சூரியன் – ஆன்ம சூரியன் ஆகும்

2. கோவில் கருவறை அமைப்பு :

தமிழ் நாட்டில் , அனேகமாக எல்லா கோவில்களிலும் , மூலஸ்தானம் – மூலவர் – ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பார். அதன் உண்மையான தாத்பரியம் யாதெனில் :

ஆயிரங்கால் மண்டபம் – மூளை
மூலவர் – ஆன்மா

மூளையின் நடுவே உட்புறத்தில், ஆன்மா ஆழமாக வைக்கப்பட்டிருக்கின்றது

3. நாம் திருவடிக் கொண்டு பயிற்சி செய்ய செய்ய , இருள் சூழ்ந்துள்ள செல்கள் எல்லாம் , ஒளி மயம் ஆகி, கெட்ட குணங்கள் ஒழிந்து , மேலான குணங்களான அன்பு, கருணை, தயவு ஓங்கி வளரும் – இதனால் சத்துவ குணம் தழைத்து சாந்தம் , அமைதி , மௌனம் எல்லாம் வரும்

வெங்கடேஷ்

No comments:

Post a Comment