Saturday, January 9, 2016

சின்ன கதை

ஒரு சின்ன கதை :
------------------
ஒரு ஊரில் மழை இல்லாமல் குளங்களெல்லாம் வற்றிவிட்டது.குடிக்க நீர் கிடைக்கவே பெரும் திண்டாட்டம்தான்.

அந்த ஊரில் ஒரு கிழவியும்அவளுடய பேத்தியும் வசித்து வந்தனர்.

ஒருநாள் திடிரென்று மழை பெய்தது
அப்போது ஊரில் உள்ள அனைவரும்
தங்களிடம் உள்ள பாத்திரத்தில் மழை
தண்ணீரை பிடித்து வைத்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த கிழவி தன் பேத்தியிடம் மழைநீரை ஒரு பாத்திரத்தில் பிடிக்குமாறு கேட்டாள்.

ஆனால் பேத்தியோ விளையாட்டு
ஆர்வத்தில் நான் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு ஓட முயன்றாள்..

உடனே கிழவி நீ ஒன்றும் செய்யவேண்டாம் அடுப்படியில் நான்
கழுவி வைத்த பாத்திரத்தை அப்படியே வெளியே வைத்துவிட்டு மட்டும் செல் என்றால்.

பேத்தியும் கிழவி சொன்ன படியேவைத்து விட்டு சென்று விட்டால்.

பிறகு சிறிது நேரத்தில் மலையும் ஓய்ந்தது. பாத்திரத்தில் நிரம்பிய நீரை எடுக்க சென்ற கிழவிக்கு ஒரே அதிர்ச்சி.

ஏன் என்றால்பாத்திரமானது தலை கீழாக கவிழ்த்து வைக்கபட்டிருந்தது.

இதை பார்த்த கிழவிக்குஆத்திரம் பீரிட்டு வந்தது உடனே பேத்தியை நோக்கி அடியே பாதகத்தி என்ன முட்டாள்தனம் செய்தாய்.!!!!

இப்படி பாத்திரத்தை கவிழ்த்து வைத்து மழை நீரை பிடிக்க முடியாமல் செய்து விட்டாயே என்று அடிக்கசென்றால்" உடனே பேத்தி சொன்னால்" நீதானே அடுப்படியில் இருக்கும் பாத்திரத்தை எடுத்து வந்து அப்படியே வைக்க சொன்னாய்நானும் அப்படியேதானே செய்தேன் பிறகு ஏன்என்னை அடிக்க வருகிறாய் என்று கூறினாள்.

பிறகுத்தான் கிழவிக்கு புரிந்தது முந்திய நாள்பாத்திரத்தை கழுவி கவிழ்த்து வைத்தது.

பார்த்திர்களா மழை என்னவோ அனைவருக்கும் பொதுவாய்தான் பெய்தது ஆனால் அந்த கிழவிக்கு மட்டும் நீர் கிடைக்க வில்லை ஏன் ?

இது அந்த பேத்தியின் குற்றமா அல்லது கிழவியின் குற்றமா? ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது இது அந்த மழையின்குற்றம் இல்லை.

இந்த கதையை போலத்தான்நமது பிறவி வாழ்க்கையும்...

அதாவது அந்த கதையில் வரும் கிழவி தான் நாம் அந்தகிழவியின் பேத்தித்தான் நம்முடைய கர்மா மற்றும் அந்த மழை தான் இறைவனுடைய அருள்.

ஒவ்வொரு பிறவியின் போதும் இன்பம்மற்றும் துன்பம் என்பது நாமும் நாம் செய்தகர்மபலனை பொறுத்தே..!!

இதில் கடவுளின்குற்றம் என்பது சிறிதும் இல்லை எனவே நாம் செய்த கர்மம் எப்படியோ அதன் படியே நம்முடைய பிறவியும் அமைகிறது.

சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்நெல்லை போட்டு திணையை அறுக்க முடியாது என்று.

சில பேர் கேள்வி கேட்பார்கள் நாம் முற்பிறவியில் செய்த பலனை இந்த பிறவியில் ஏன் அனுபவிக்க வேண்டும் என்று அவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன்.

அதாவது முற்பிறவி, இப்பிறவி என்ற கணக்கெல்லாம் நமக்குதான் ஆனால் இறைவனுடைய பார்வையில் நம்முடைய ஒவ்வொரு மரணம் மற்றும் ஜனனம் என்பது நாம் இரவு தூங்கி பகலில் எழுவது போல..

சுருங்க சொல்லப்போனால் கிழிந்த ஆடையை மாற்றி புதிய ஆடையை அணிவது போல... ஒருவன் பகலில் பலபேரை கொன்று விட்டு மறுநாள் தூங்கி எழுந்ததும் நான் நல்லவன் நான் யாரயும் கொலை செய்யவில்லை பிறகு ஏன் காவல் துறை எனக்கு தண்டனை தருகிறது என்று கேட்டால் எப்படி இருக்குமோ அதை போலத்தான் இருக்கும் இவ்வாறு நாம் கேட்கும் கேள்வியும்...

நாம் நாளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக இன்றே உழைப்பது போல நம்முடைய பிறவிகள் நன்றாக அமைய இன்றே நல்ல கர்மங்களை செய்ய வேண்டும் என்று நம் இந்து மதம் வழியுறுத்துகிறது .....

லட்சம் லச்சமா காலேஜ் பணத்தை கட்டி பட்ட படிப்பு படிக்கின்றனர். பிறகு 60 வயது காலம் வரை ஒரு கம்பெனியில் வேலை பார்கிறார்கள்.

பிறகு வயதாகிவிடுகிறது நோய் வருகிறது. லொக்கு லொக்குனு இரும்புகிறார்கள், பிறகு இறந்து விடுகிறார்கள்.

இறப்பதற்கு லட்சம் லட்ச்சமாக பணம்
செலவு செய்து பெறிய பெறிய பட்ட
படிப்பு எல்லாம் படிக்கிறார்கள்.

இது இறந்த பின்பு எதற்கு உதவும் ?.

உயிர் உடம்பில் இருந்தால் சிவம்.உயிர்உடலை விட்டு சென்றால் சவம்.

இது தான் சாதாரண மனிதனின் வாழ்க்கை.

மரணமில்லா பெருவாழ்வை இலவசமாக கற்று தருகிறேன் என்று கூப்பிட்டால் யாரும் வருவதில்லை. இலவசமாக கிடைக்கும் பொருளுக்கு மதிப்பு இல்லாமல் போகிறது.

பணம் கொடுத்து வாங்கினால் தான் மதிப்பு அதிகரிக்கிறது. மரணத்தை வெல்லும் நுட்பத்தை அறிவதே உண்மையான கல்வி.

இந்த கல்வி என்றும் அழியாது.

சாகா கல்வி.

🌹நல்லதே நடக்கும்....🌺

No comments:

Post a Comment