Saturday, January 9, 2016

சாகாக்கல்வி – மீண்டும் வாரா

சாகாக்கல்வி – மீண்டும் வாரா வழி

* மனம் அமைதி அடைவதற்கு வழி கேட்டேன்
திருவடியை பற்றி நில் என்றது

* வினைகளை ஒழிப்பது எப்படி என்றேன் ??
இரகசியம் எலும்பில் இருக்கின்றது என்றது

* மீண்டும் வாரா வழி கேட்டேன்

போதப் பந்தை தட்டாதே
பந்தை நிலை கொளச் செய்
சாகரத்தை அலையில்லாமல் ஆக்கு
ஐம்புலக் கதவுகளை மூடு
ஐம்புலன்களை ஒன்று சேர்

போதம் தேய்ந்து தேய்ந்து
திருவடியில் தோய்ந்து தோய்ந்து நில்
திருவடியில் அமிழ்ந்துவிடு
நான் திருவடியில் கலந்திருக்கின்றேன் என்பதையும் மறந்து விடு

இதனை ஆற்றின்
மீண்டும் வாராய் இப்புவியில் என்றது

BG Badhey Venkatesh

No comments:

Post a Comment