Friday, January 8, 2016

திருவள்ளுவர் கூறுகிறார்

திருவள்ளுவர்  ஞானவெட்டியான்  நூலில். கூறுகிறார்.
     இந்த  பூமியில்  பிறந்து  எல்லாம்  சம்பாதித்து  வாழ்ந்து  நிலையான  வாழ்வாக  ஆக்கும்  முயற்சியில்  நானும்  ஈடுபட்டேன்.
         இந்த  பிரபஞ்சத்தில்  கொண்ட  இச்சை  எல்லாம்  வீணானதாகப்  போனது.
       உங்களுக்கும்  நீங்கள்  என்னைச்  சேர்ந்தவர்கள்  என்பதால்  இதை  சொல்கிறேன்.
   பற்றுக்  கொண்டு  அலையாதே  . கர்மாவின்படி  வினைப்  பயனை  கழிக்க  வந்த  இடம்.
     உடல்  புழுக்கூடு  என்ற  உண்மை  அறி.  இதிலிருந்து  தப்ப  உன்னை  அறி.
   உயிர்  போனபின்  உடல்  அழியும்.
  அழியாத  உயிரை  அறிந்து  அதனைக்  கைப்பற்று. நினைவால்  அறி.
   உயிரைக்  கையில்  பிடித்தல்  ஞானம்
உடல்  கரத்தால்  அல்ல.
          இறைவனின்  திருக்கரமாகிய  மலர்மிசை  ஏகுதல். .
மலர்  மிசை  ஏகினான்  மானடி  சேர்ந்தார்  நிலமிசை  நீடுவாழ்வார்.

No comments:

Post a Comment