Saturday, January 9, 2016

மூளை – தலை நகரம் – பாகம் – 3

மூளை – தலை நகரம் – பாகம் – 3

ஒரு போரில்
ஒரு நாட்டின்
மற்ற நகரங்களை விடவும்
தலை நகரமே முக்கியம்
அது வீழ்ந்தால்
அந்நாடு கைப்பற்றப்பட்டது எனலாம்

அது போல்
மூளையாம் தலை நகரை ஆக்கிரமித்துள்ள
இராவணனிடமிருந்து இராமனும்
துரியோதனாதிகளிடமிருந்து பஞ்ச பாண்டவர்களும்
மீட்டெடுத்தால் தான்

அஸ்தினாபுரம் என்னும் நம் உடல்
வாழ்வாங்கு வாழும்
மரணமிலாப் பெருவாழ்வு எய்தும்
இல்லையெனில் மண்ணுக்குள் புதைந்து போம்
நெருப்புக்கு இரையாகும்

வெங்கடேஷ்

No comments:

Post a Comment