Friday, June 17, 2016

போதி தர்மர் வாழ்க்கை வரலாறு

போதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARMA – THE GREATEST ZEN MASTER”;

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்
கொண்டு ஆண்டு வந்த பல்லவ
மன்னனான
கந்தவர்மன்க்கு மூன்றாவதாகப்
பிறந்த குழந்தைதான் போதிதர்மர்.
இவரின் இயற்பெயர் புத்த வர்மன்
(பௌத்தவர்மப் பல்லவன்).
கந்தவர்மன்னின் மூன்று மகன்களென
அறியப்படுவோர்:
1. நந்திவர்மன் I
2. குமாரவிஷ்ணு II
3. புத்தவர்மன் (போதிதர்மா)
(பௌத்தவர்மப் பல்லவன்)
அக்காலத்தில் பல்லவ வம்சத்தில்
பிறந்த கடைசிக்
குழந்தையை புத்த
மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு.
எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் 3
மகனின் குருகுல வாழ்க்கைக்காக
பிரஜ் என்கிற சமய குருவிடம்
சேர்த்திருக்கிறார் . இவர்
காஞ்சியில் தங்கி பௌத்த
சிந்தனைகளைப் பரப்பி வந்தவர்.
சிறுவன் போதியின் அபார
ஞானத்தைப் பார்த்து பிரமித்த
பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக
28வது குருவாக
போதியை நியமிக்கிறார்.
காலப்போக்கில் போதி தர்மர்
காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல
கலைகளைக் கற்றுத் தேர்கிறார்.
இதில் களறி, வர்மம் போன்ற
அதிரடிக் கலைகளும் உண்டு.
காஞ்சியிலிருந்துநாலந்தாசென்றுஅங்கிருந்துகி.பி.526-
ல் தெற்கு சீனாவிற்குச்
செல்கிறார்
போதி தர்மர்.போதிதர்மாவின்
காலம் கி.பி.475-550
என்று பதிவுகள் கூறுகின்றன.
அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர்
"லியாங் வு டீ".புத்த மதத்தில்
கொண்ட ஈடுபாட்டால் பௌத்த
ஆலயங்களையும்
விகாரங்களையும் நிறுவிய சீனப்
பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த
புத்தத் துறவியான
போதிதர்மரைகேள்விப்பட்டுமிகுந்த
மரியாதையோடும், அன்போடும்
உபசரித்து சீனாவில் தங்கிவிட
வேண்டுகிறார். அங்கு ஷாஓலின்
என்ற இடத்தில் தங்கி பௌத்த
மதத்தைப் பரப்பிய போதி தர்மர்,
தமிழகத்தில் தான் கற்ற
கலைகளையும் சீனர்களுக்குப்
பயிற்றுவித்தார்.
அப்படி போதிதர்மர் கற்றுக்
கொடுத்த கலைகளில் ஒன்றுதான்
குங்ஃபூ.
போதிதர்மர் சீனாவில் இருந்த
காலத்தில் புத்தபிக்குகள்
எடுத்துக்கொண்டுபிச்சைபலவீனமானவர்களாகவும்
சமுதாயத்திற்கே பாரமாகவும்
இருந்தார்கள். மற்றவர்களால்
வாழ்ந்திருந்தார்கள்துன்புறுத்தப்பட்டுக்கொண்டுபயந்தே.
ஆனால் போதிதர்மர் தம்முடைய
சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின்
சில நுணுக்கங்களைச் சொல்லிக்
கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின்
மூலம் மனதின் இயக்கத்தையும்
உடலின் செயல்பாட்டையும்
அடக்கமுடியும்.
இன்னொரு பயிற்சியின்மூலம்
உடலை வலுவாக்கி அசுரபலத்தைப்
பெறமுடியும்.
மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த
முடியும். உடற்பயிற்சிகளையும்
சொல்லிக்கொடுத்தார். அத்துடன்
அரிய நுட்பக்கலையான வர்ம
சாஸ்திரத்தையும்
சொல்லிக்கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம்,
சிறுதொழில்கள் போன்றவற்றைச்
செய்யச் சொல்லிக் கொடுத்தார்.
தங்களது கோயில்களைச்
சுற்றிலும் தங்களுக்குத்
தேவையான
உணவைஅவர்களேவிளைவித்துக்கொண்டார்கள்.
சமுதாயத்திடம்
பிச்சையெடுப்பதில்லை. உடல்
உறுதி அசுரபலம்
ஆகியவற்றைக்கொண்டு சில
தற்காப்பு முறைகளையும்,
தாக்குதல் முறைகளையும்,
ஆயுதங்களிலிருந்துபாதுக்காத்துக்கொள்ளும்
முறைகளையும், உடலில் காயம்
ஏற்படா முறைகளையும்
கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில்
புத்தபிக்குக்கள், சமுதாயத்தின்
உழைப்பின் பலன்களையெல்லாம்
பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள்
என்ற
ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள்
சிலர், பிக்குக்களை அடித்துக்
கொல்வித்தபோது போதிதர்மரின்
சீடபரம்பரையும் கோயில்களும்
மட்டும் தப்பின.
அவ்வாறு போதிதர்மர்
தோற்றுவித்த
பௌத்தக்கோயில்களை ஷாஓலின்
(Shaolin) கோயில்கள் என்பார்கள்.
போதி தர்மர் வாழ்ந்த
இடத்தை சீனாவில் "ஷாஓலின்
கோயில்" என்று இன்றைக்கும்
வணங்கி வருகிறார்கள். அந்தக்
கோயிலில் உள்ள கல்வெட்டில்
‘தென் இந்தியாவிலிருந்து வந்த
போதி தர்மர் கற்றுத் தந்த
கலை குங்ஃபூ’
என்று குறிக்கப்பட்டுள்ளது.
அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா"
என்றுதான் செல்லமாக
அழைக்கின்றனர்.
போதிதர்மாவைப் பற்றிய
பதிவுகள்
அவரை குங்ஃபூ தற்காப்புக்
கலையின் பிதாமகர்
என்று காட்டுகின்றன. ஆனால்
போதிதர்மா சீன தேசம்
சென்றதுகுங்ஃபூவைஉருவாக்குவதற்குஅல்ல,
பௌத்த சமயத்தின்
ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச்
சென்றவர் அவர். பௌத்த சமயத்தின்
ஆன்மா என்பது தியானம் தான்.
எனினும் அவர் குங்ஃபூ கலையின்
பிதாமகராகக் கருதப்படுவதற்கும்
சில பின்னணிகள் இருக்கின்றன.
போதி தர்மா
குகை
போதிதர்மா பற்றிய
தொன்மையான பதிவுகள்
எதுவும்
நம்பகத்தன்மை வாய்ந்தவையாக
இல்லை என்றேவரலாற்று அறிஞர்கள்
கூறுகின்றனர். அவரைப் பற்றிய
புனைவுகள் நிறைய
பின்னப்பட்டுள்ளன.
குங்ஃபூ கலை பற்றி அவரின்
பெயரால் அழைக்கப்படும்
நூல்களும்
வேறுயாரோஎழுதியவைஎன்றேசொல்லப்படுகின்றன.
போதிதர்மா தன் கைகளால்
நேரடியாக எந்தப் புத்தகத்தையும்
எழுதவில்லை. அவருடைய
போதனைகளை அவரின் சீடர்கள்
பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
தமிழகத்தில் இருந்து சீனா சென்ற
போதிதர்மா மன்னர் ’வூ-டி’யைச்
சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக்
கடந்து ஹெனான் பகுதியின்
மலைச் சிகரங்களில் உள்ள
ஷாவொலின்
மடலாயத்திற்கு வந்து சேர்கிறார்.
அங்கு தியானம்
செய்துகொண்டிருந்த புத்த
பிட்சுக்களைப்
பார்த்தபோது அவருக்குப்
பெரிதும் ஏமாற்றமாக இருந்தது.
நாட்பட்ட பட்டினியாலும்
தவத்தாலும் அவர்களின் தேகங்கள்
வத்தலும் தொத்தலுமாக இருந்தன.
ஆன்மிகவாதிகள் என்றால்
இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க
வேண்டும் என்று அவர்களின்
மனதில் ஒரு தவறான கருத்து கால்
மேல் கால்
போட்டு அமர்ந்திருப்பதை அவர்
கண்டார். அவர்களின்
ஆன்மா ஒளி வீசிக்
கொண்டிருந்தாலும் உடல்
படு மோசமாக இருந்தது.
போதிதர்மா ஒரு முழுமைவாதி.
உடல்
ஆராதனைக்கு உரியது என்னும்
கருத்துடையவர். ஓர்
ஆன்மிகவாதிக்கு உடல்
உறுதியாக இருக்க வேண்டும்
என்பதை அந்த
பிட்சுக்களுக்கு எடுத்துச்
சொல்லி அதற்கான
செய்முறைகளைஅவர்களுக்குவகுத்துக்
கொடுப்பதாக வாக்களிக்கிறார்.
அதற்காக அருகில் இருந்த
ஒரு குகையில் ஒன்பது வருடங்கள்
தியானம் செய்கிறார் போதிதர்மா.
ஒன்பது வருடங்களும் அவர்
ஒரு சுவற்றைப்
பார்த்தபடி அமர்ந்து தியானம்
செய்ததாகச் சொல்லப்படுகிறது.
9 வருடங்கள்
தியானம்
இருந்த
போதி தர்மாவின்
நிழல்
குகையின்
பாறையில்
இருப்பதாக
நம்பப்படுகிறது.
ஒன்பது வருடங்கள் தியானம் செய்த
போதிதர்மாஅங்கிருந்துகிளம்பியபோதுஅந்த
இடத்தில் இரும்புப்
பெட்டி ஒன்றை விட்டுச்
செல்கிறார். பிட்சுக்கள் அதைத்
திறந்து பார்த்தபோது அதில்
இரண்டு கிரந்தங்கள் இருந்தன.
”க்ஸி சுய்
ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு)
மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின்
மாற்றம்) என்னும் நூல்கள் அவை.
இவற்றில் முதல்
நூலை போதிதர்மாவின் சீடரான
ஹுய்கே என்பவர்
எடுத்துக்கொண்டுஅங்கிருந்துமறைந்துபோகிறார்.
இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள்
எடுத்துக்கொண்டு அதில் இருந்த
பயிற்சிகளைமாற்றியமைத்துஷாவொலின்
குங்ஃபூ கலையாக
மாற்றிவிட்டார்கள். இப்படித்தான்
போதிதர்மா குங்ஃபூவின்
பிதாமகராக புனையப்பட்டார்
என்று டாங் ஹாவோ, ஸூசென்,
மத்ஸுடா ர்யூச்சி, லின்
போயுவான் போன்ற
வரலாற்று அறிஞர்கள்
கூறுகிறார்கள்.
இதுஒருபுனைவுக்கதையாகவேஇருந்தாலும்
இதில் அற்புதமான ஒரு உள்-
பார்வை இருக்கிறது. அதாவது,
போதிதர்மா மனம்-உடல்
இரண்டையுமே வலிவுள்ளதாக
மாற்றுவதற்கான
பயிற்சிகளைத்தான்
வழங்கியிருக்கிறார்.
மஜ்ஜை என்பது அகத்தைக்
குறிக்கும். தசைகள்
என்பது உடலைக் குறிக்கும்.
இன்னொரு பார்வையில்
மஜ்ஜை என்பது ஆன்மிக
சாராம்சத்தைக் குறிக்கும்.
தசைகள் என்பவை புறச்
சடங்குகளைக் குறிக்கும். ஆனால்
அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின்
ஆன்மிக
சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும்
நிலையில் இல்லை.
எனவே அது ஒரு சீடரின்
வழியேரகசியமாக்கப்பட்டுவிட்டது.
பிட்சுக்கள்
புறச்சடங்குகளை மட்டும்
எடுத்துக்கொண்டார்கள். அதனைப்
போர்க்கலையாக
மாற்றிவிட்டார்கள்!
போதி தர்மர் தியானம் இருந்த
குகையின் முகப்பு
இதில் இன்னொரு புள்ளியும்
கவனத்திற்குரியது. அதாவது,
போதிதர்மா சீனாவிற்குச்
சென்றபோதே அங்கே பௌத்த மதம்
ஏற்கனவே பரவியிருந்தது.
பிறகு ஏன்
போதிதர்மா சீனாவிற்குச்
சென்றார்? இதற்கான அருமையான
விளக்கத்தை ஓஷோவின்
“BODHIDHARMA – THE GREATEST ZEN
MASTER” என்னும் நூலில்
காணலாம்.
போதிதர்மா ஓஷோவைக் கவர்ந்த
மிக முக்கியமான ஆன்மிக
ஆளுமை.
போதிதர்மாபுத்தருக்குஅறுநூறுவருடங்கள்
பின்னால் தோன்றியவர். அவர்
செல்வதற்குசீனாஆறுநூற்றாண்டுகளுக்குமுன்பேபௌத்தம்
அங்கே சென்றுவிட்டது.
போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய
மரபில்
இருபத்தெட்டாவது தலைமைக்
குருவாக வருகிறார்.
போதி தர்மா குகை
ஜென் ஞானியான அவருடைய
குரு ஒரு பெண் ஞானி! அவரின்
பெயர் ‘ப்ரக்யதாரா’. அவர்தான்
போதிதர்மாவை சீனாவிற்குச்
செல்லும்படி கட்டளையிட்டவர்.
சீனாவில் பௌத்த மதத்தின்
சடங்குகள் மட்டும் இருந்தன.
அவை ஆன்மிக சாரமற்று வெறும்
சக்கைகளாக இருந்தன.
கன்ஃப்யூசியஸின் ‘அறத்துப்பால்’
மீண்டும் மீண்டும் மக்களைக்
காய்ச்சிக்கொண்டிருந்தது.
லாஓஸு, சுவாங்க்ஸு மற்றும்
லெய்ஸு ஆகிய
தாவோ மூலவர்கள் உருவாக்கிய
அற்புதமான ஆன்மிக
நெறி பொதுமக்களிடம்
சென்று சேராமல் இருந்தது. இந்தச்
சூழலில்தான் போதிதர்மாவின்
பணி தேவைப்படுகிறது.
அப்பணியால் பௌத்தம்
தாவோவுடன்
இணைந்து ‘ச்சான்’ (chan) ஆகிப்
பின்பு அது ஜப்பானில்
’ஜென்’ (ZEN) என்பதாக வடிவம்
கொண்டுவிட்டது.
இது ஒரு மகத்தான ஆன்மிகப்
புரட்சி!
குகையில் தியான
நிலையில் போதி தர்மர்
புறச்சடங்குகள் வெகுஜனங்களால்
ஏற்றுக் கொள்ளப்படுவதும், ஆன்மிக
சாராம்சம் தகுதியான சிலரால்
மட்டுமே ரகசியமாகப்
பேணப்படுவதுமான
நிலையை நாம் எல்லாச்
சமயங்களிலும் பார்க்க முடியும்.
உதாரணமாக, இஸ்லாத்தில்
சூஃபி மரபு தோன்றுவதன்
புள்ளியைக் காட்டும்
ஒரு நபிமொழியைப் பாருங்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடமிருந்து (மார்க்கக்
கல்வியின்)
இரண்டு பாத்திரங்களை நான்
பாதுகாத்துக் கொண்டேன்.
அவற்றில் ஒன்றை நான்
பரப்பி விட்டேன்.
மற்றொன்றை நான்
பரப்பியிருந்தால் என்
வெட்டப்பட்டிருக்கும்அடித்தொண்டை.”(அறிவிப்பாளர்:
அபூஹுரைரா(ரலி), நூல்:
புகாரி, அத்தியாயம் 3 –
கிதாபுல் இல்ம், ஹதீஸ் எண்:120)
போதி தர்மா கோவிலுக்கு
வரும் பக்தர்கள்
புத்தரைப்
போலவே போதிதர்மாவும் ஓர்
இளவரசர். அவர் பல்லவ மன்னனின் மகன்
என்று சொல்லப்படுகிறது.
‘களறிப்பயட்டு’ என்னும் தற்காப்புக்
கலை வளர்ந்திருந்த
கேரளப்பகுதியில் இருந்தவர்
என்று ஒரு கருத்தும் உள்ளது.
புத்தரின் போதனைகளால்
ஈர்க்கப்பட்ட போதிதர்மா அரச
வாழ்வைத் துறந்து பௌத்த
நெறியில்
தீட்சை பெற்றுக்கொண்டார். அரச
வாழ்வைத் துறந்து ஆன்மத்
தேடலில் நாடோடியாகக்
கிளம்புகிறேன் என்ற தன்
முடிவைபோதிதர்மாசொன்னபோதுமன்னர்
அவரைத் தடுத்தார்.
போதிதர்மாஅவரைநோக்கி“சாவைவிட்டும்
என்னை நீங்கள் காக்க முடியும்
என்றால் இங்கேயே இருக்கிறேன்.
உங்களால்
அது முடியாது என்றால் நான்
புறப்படுவதைத் தடுக்காதீர்கள்”
என்று சொன்னார். ஆனால்,
மரணத்தை விட்டு ஒருவரை எந்த
மனிதரால்தான் காப்பாற்ற
முடியும்? எனவே கண்ணீரோடும்
ஆசிகளோடும் மன்னர் தன்
இளவரசனை அனுப்பிவைத்தார்.
அப்படிப் புறப்பட்டவர்தான்
போதிதர்மா.
போதி தர்மாவின் சிலை
தன் குரு ப்ரக்யதாராவின்
மறைவிற்கும் பின் அவரின்
கட்டளையை நிறைவேற்ற
போதிதர்மா கி.பி.520-ல்
சீனா சென்றார்.
இந்தியாவிலிருந்துஒருமகாஞானி–
பௌத்த மதத்தின் 28-
வது தலைமைக்குரு -
வருகிறார் என்பதை அறிந்த
நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங்
வூ-
டி அவருக்கு பிரம்மாண்டமான
வரவேற்பு அளிக்கிறார்.
அப்போது அவர் போதிதர்மாவிடம்
கேட்ட கேள்வியும்
அதற்கு போதிதர்மா சொன்ன
பதிலும் மிகவும்
சுவையானவை.
போதிதர்மா எப்படிப்பட்ட
ஞானி என்று காட்ட
அது ஒரு சோற்றுப்பதம்.
போதி தர்மா கோவிலுக்கு
வரும் பக்தர்கள்
ஓஷோவின் வார்த்தையில்
சொல்வதென்றால்
போதிதர்மா ஒரு கிளர்ச்சியாளர்
(REBEL). அவருடைய
அகப்பார்வை சடங்குகளின்
தோலையும் சதையையும்
எலும்பையும்
துளைத்து நேராக மஜ்ஜையைத்
தொடுவது. மன்னர் வூ-
டி சீனாவில் நிறைய புத்த
மடாலயங்களைக் கட்டியிருந்தார்,
அதில் பல்லாயிரம்
பிட்சுக்களுக்கு போஷகம்
அளித்து வந்தார். எனவே அவர் தன்
பௌத்தத் தொண்டினைச்
சுட்டிக்காட்டி போதிதர்மரிடம்
கேட்டார், “மகாஞானியே!
என்னுடைய இந்த தர்ம
காரியங்களுக்காக சொர்க்கத்தில்
நான் பெறப்போகும் சன்மானம்
என்ன?” இதைக் கேட்டதும்
போதிதர்மா மிக நிதானமாகச்
சொன்னார், “உங்களின்
காரியங்களுக்கு எவ்வித
நன்மையும் இல்லை. நீங்கள் நேராக
நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த
விடையைக்
கேட்டு மன்னருக்கு ஆத்திரமும்
குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த
உணர்வு ஏற்பட்டது.
போதிதர்மா ஏன் அப்படிச்
சொன்னார்? அந்த மன்னர்
பெயருக்காகவும்
புகழுக்காகவும்தான் அந்த தர்ம
காரியங்களை எல்லாம்
செய்துவந்தார் என்பதை அவரைப்
பார்த்ததுமேபோதிதர்மாகண்டுவிட்டார்.
போதிதர்மா போன்ற
ஒரு ஞானியின் கண்கள்
உள்ளத்தை ஊடுறுவும்
எக்ஸ்ரே கதிர்கள்
கொண்டவையாகத்தான் இருக்கும்!
சுயநல எண்ணத்துடன்
நிறைவேற்றப்படும் தர்ம
காரியங்களுக்கு எந்த மதிப்பும்
இல்லை என்பதைத்தான் அவர்
அப்படிச் சுட்டிக்காட்டினார்.
இக்கருத்தைக் கூறும்
நபிமொழி ஒன்று என்
நினைவுக்கு வருகிறது:
“செயல்கள் அனைத்தும்
உள்நோக்கத்தைப்
பொருத்தே அமைகின்றன.
ஒவ்வொரு மனிதருக்கும் அவர்
எண்ணியதுதான்
கிடைக்கிறது.”(அறிவிப்பாளர்:
உமர் பின் கத்தாப் (ரலி), நூல்:
புகாரி, அத்தியாயம்: 1 – கிதாப்
பத்உல் வஹ்யி, ஹதீஸ் எண்: 1)
போதிதர்மாவைப் பற்றிப்
பேசும்போது மறக்காமல்
பேசவேண்டிய இன்னொரு விஷயம்
தேநீர். ஆமாம், குங்ஃபூ கலையின்
பிதாமகர் என்று அவர்
சிலாகிக்கப்படுவதுபோலவேதேநீரைக்
கண்டுபிடித்தவர் என்றும்
போற்றப்படுகிறார்.
போதிதர்மா இரவும் பகலும்
தொடர்ந்து தியானம்
செய்து வந்தார்.
அப்படி இருக்கையில்
அடிக்கடிசொக்கிக்கொண்டுதூக்கம்
வந்தது. தியான நிலையில்
இருந்து நழுவித் தூக்கத்தில் மனம்
விழுவதை எண்ணி அவருக்குத்
தன்மீதே கோபம் வந்தது. ஒரு நாள்
அவர் தன் இமைகளைப்
பிய்த்து மண்ணில் வீசியெறிந்தார்.
அவை விழுந்த இடத்தில் புதர்
ஒன்று முளைத்தது. அவர்
தியானம் செய்து கொண்டிருந்த
மலையின் பெயர் ’டாய்’.
எனவே அந்த மூலிகை சீன
மொழியில் ‘டே’
என்று அழைக்கப்பட்டது. அதன்
இலைகளைக் கொதிநீரில்
போட்டு கசாயம் வைத்துக்
குடித்தபோது சோம்பலை நீக்கிப்
புத்துணர்ச்சிஏற்படுவதைஅறிந்தார்கள்.
அப்போதிலிருந்து தேநீர்
அருந்துவது ஜென் நெறியிலும்
சீனக் கலாச்சாரத்திலும்
ஒரு முக்கியமான நிகழ்வாக,
தியான முறையின் ஒரு அங்கமாக
நிறைவேற்றப்பட்டு வருகிறது.
போதிதர்மா தன் கையில்
எப்போதும்
ஒரு கைத்தடி வைத்திருப்பார்.
பேருக்குத்தான்
அது கைத்தடியே தவிர, அதைப்
பார்த்தால் அவர்
மரத்தையேஏதோஒருவேறோடுபிடுங்கிவைத்திருப்பதுபோல்
இருக்கும்.
முண்டு முடிச்சு உள்ள அந்தத்
தடியை அவர் ஆன்மிக
போதனைக்கும் பயன்படுத்தினார்.
அதாவது, ‘மனம்
அலைபாய்ந்துகொண்டேஇருக்கிறதுமாஸ்டர்’,
‘மனம் குரங்கு போல்
தாவிக்கொண்டேஇருக்கிறதுமாஸ்டர்’,
‘மனதிலிருந்துவிடுதலைஅடைவதுஎப்படி?’
என்றெல்லாம்
கேட்டுக்கொண்டு வரும்
சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த
மனதைப் பிடித்துக்
கொண்டு வாருங்கள்.
ஒரே அடியில் போட்டுத்
தள்ளிவிடுகிறேன்.”
என்று சொல்லித் தன்
கைத்தடியைக் காட்டுவார்! (இந்தக்
கைத்தடியைபோதிதர்மாவைத்திருப்பதாக
‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில்
காட்சிப் படுத்தியிருப்பதைப்
பார்க்க நன்றாக இருக்கிறது.)
போதி தர்மருக்கு நீரில் மிதக்கும்
திறன் இருந்ததை உணர்த்தும்
ஓவியம்
இதையெல்லாம்
படிக்கும்போது அவர் ஒரு தமாஷ்
பேர்வழியாக நமக்குத் தெரியலாம்.
அது உண்மைதான். ஜென்
நெறியில் தமாஷ் செய்யத்
தெரியவில்லை என்றால் ஞானம்
அடைந்த குருவாக
ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஞானத்தின் அலாதியான
சுவைகளில்
நகைச்சுவை அவர்களுக்குப்
பிரதானமானது. சூஃபி மரபில்
நகைச்சுவைக்குஒரேஒருமுல்லாநஸ்ருத்தீன்
மட்டுமே இருக்கிறார். ஆனால்
ஜென்னில் ஏறத்தாழ
எல்லா ஞானிகளுமே முல்லாக்கள்தான்!
போதி தர்மாவின் அடக்க ஸ்தலம்
போதிதர்மா தன் கடைசிக்
காலத்தில் இமயமலைப் பகுதிக்குச்
செல்ல விரும்பினார்.
ஹாய்கோ என்னும் சீடனைத் தன்
வாரிசாக அறிவித்தார். இதனால்
அவர் மேல் மனத்தாபம் கொண்ட
ஒருசில சீடர்கள் அவரின் உணவில்
விஷம் வைத்து விட்டார்கள்.
அதை உண்ட
போதிதர்மா ‘கோமா’வில்
விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக
அறிவித்துமடாலயத்திலேயேஅவரைப்
புதைத்துவிட்டார்கள்.
சீடர்களால் விஷம்
வைத்து கொள்ளப்பட்ட
போதி தர்மர் தான் உயிருடன்
இருப்பதை
எல்லை காவலாளி மூலம்
உணர்த்தும் காட்சி
இது நடந்து சில நாட்கள்
கழித்து சீனாவின் எல்லையில்
அவர் நடந்து செல்வதை எல்லைக்
காவல்காரன் ஒருவன் காண்கிறான்.
அவனுக்குபோதிதர்மாவைநன்றாகத்
தெரியும். அவர் தன் கைத்தடியின்
முனையில் ஒற்றைச் செருப்பைக்
கட்டித் தொங்க விட்டிருப்பதைக்
கண்டு அதற்கான
காரணத்தை வினவுகிறான்.
“மடாலயத்திற்குப் போய் என்னை நீ
இந்தக் கோலத்தில் பார்த்ததாகச்
சொல். விவரம் உனக்கே விளங்கும்”
என்று போதிதர்மா அவனிடம்
சொல்லிவிட்டு எல்லையைக்
கடந்து இமயமலைக்குச்
சென்றுவிட்டார். அந்தக் காவலன்
மடாலயத்திற்குச் சென்று தான்
போதிதர்மாவைப் பார்த்ததாகச்
சொல்கிறான். அவர்கள் அவரின்
கல்லறையைத்
திறந்து பார்த்தபோது அதனுள்
அவருடைய
மற்றொரு செருப்பு மட்டும்
கிடப்பதைப்
பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
இப்படியாக போதிதர்மாவின்
முடிவு சொல்லப்படுகிறது.
‘மனதிலிருந்துவிடுதலைஅடைய
வேண்டியதில்லை. மனதிற்குள்
ஆழ்ந்துஆழ்ந்துபோய்க்கொண்டேஇருங்கள்.
இறுதியில் மனமே புத்தராக
இருப்பதைக் காண்பீர்கள். மனதின்
எதார்த்த நிலையே ஞானம்”
என்பதுதான் போதிதர்மாவின்
போதனைகளின் சாரம். மனம்
என்பது ஆறாம் அறிவாகச்
சொல்லப்படுகிறது. ஏழாம்
அறிவு என்பது மனத்திற்கு அப்பால்
உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த
நிலையை அடைவதாகும்
என்று சொன்னவர் அவர். அந்த
நிலையைஅடையும்போதுமனத்தின்
உண்மையான ஆற்றல் வெளிப்படும்.
கால-இடத்
தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
போதிதர்மாவின் ஞானம் மிளிரும்
பல நூறு பொன்மொழிகளில்
சில .....
நல் ஆசிரியர்களை, தேடும்
முட்டாள்கள் உணர்வதில்லை,
அவர்களது மனம் மிகச்சிறந்த
ஆசிரியர், என்பதை!
’மனம் எப்போதும் இக்கணத்தில்
இருக்கிறது.
நீதான் அதைக் காண்பதில்லை’
பாதையை அனைவரும்
அறிவார்கள்.
அதில் நடப்பவர்கள் சிலரே’
’மாயைகளை உருவாக்காமல்
இருப்பதே ஞானம்’
’வாழ்வும் சாவும்
முக்கியமானவை.
அவற்றை வீணடிக்காதீர்கள்’
’ஞானமே உங்களின் நிஜ உடல்,
உங்கள் நிஜ மனம்’
’மொழியைக் கடந்து போ,
எண்ணத்தைக் கடந்து போ’

No comments:

Post a Comment