Sunday, June 12, 2016

ஆவி உங்களைப் பிடித்தால்தான் தப்பு,

SIDDHA HEALTH CARE:9047225560
ஆவி உங்களைப் பிடித்தால்தான் தப்பு, ஆனால் ஆவியை நீங்க பிடித்தால் தப்பில்லை. என்ன‍டா இவன் குழப்புகிறானே என்று தானே தோன்றுகிறது. மேற்கொண்டு வரும் வரிகளை படித்தீர்களானால் உங்களுக்கே புரியும்.
முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும்,ஆவி பிடிப்பதுபோல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப்பொரு ட்களும் வேறுபடும். ஒருவேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்க விளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும்
ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமா க்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.
ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறி விடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?
சூடான நீரை வைத்து, ஒருபோர் வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.
ஆவிபிடிப்பதால் என்ன நன்மை ?
* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும்போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்து விடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவிபிடி க்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய் விடும்.
*மற்றொரு நன்மைகள் என்னவென்றா ல், முதுமை தோற்றத்தை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல்
தங்கிவிடுவதால்தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமைதோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்து விடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்து விடலாம்.
* ஆவி பிடிக்கும் போது முகத்திற் கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும்போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்துபோன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல், கூந்தலுக்கு செய்யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான்

No comments:

Post a Comment