Wednesday, July 26, 2017

வயதானால் நோய்வருமா எவன்டா சொன்னது? *வயதானால் நோய் வரும் என்பது தவறு*

முழுவதும் படிக்கவும:

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்.

- கண்களின் பார்வை மங்கும்

- காதுகள் கேட்கும் திறன் குறையும்

- ஞாபக மறதி வரும்

- பல் கொட்டும்

- வாய் பேச குழறும்.

- மூச்சு விடச் சிரமம் வரும்

- சாப்பாடு செரிக்காது

- மலச்சிக்கல் வரும்

- கை வலி வரும்

- இடுப்பு வலி வரும்

- கால் வலி, கால் பாத வலி வரும்

- நடக்க, நிற்கச் சிரமம்

- சிறுநீர் கழிக்க சிரமம்

- மலம் கழிக்க சிரமம்

- இரவில் தூக்கம் வராது

- சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு வரும்

- உடலுக்குப் பல வகையான நோய்களும் தொந்தரவுகளும் வரும்.

- இன்னும் பல...

*இப்படி, எந்தப் பன்னாடையாவது சொன்னால், நம்பவே நம்பாதீர்கள்.

வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கை சட்டமும் கிடையாது.*

உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும், அது  *உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது*.

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் ஆத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் *எவனாவது வயதானால் அந்த நோய் வரும், வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்*.

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக, சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*----------

முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லம் உங்கள் மனதிலும்,
அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள்.
செயல்கள் மாறும். அதனால்,
ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

*மரணம்*----------

*மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.*😀

அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். சந்தோஷமாக வாழுங்கள் என்று. அவன் குடும்பத்தினரிடம் விடை பெற்று.
😌 மகிழ்ச்சியாக உடலைத் துறக்க வேண்டும்.

*யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.*

*சிந்தனையை மாற்றுங்கள்,  

நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன், அதற்கேற்ப என் செயல்களை ஒழுங்கு படுத்தி கொள்வேன் என்று நம்பிக்கையுடன் எண்ணுங்கள். நம்புவதை செயல்படுத்துங்கள்.

எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment