Monday, July 17, 2017

*சிவாக்கியர் பாடல்

*
------------------------------------
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்

வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்

நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

விளக்கம்
---------------

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள்.

வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.

ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள்.

இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயயோ ஈசனே..........!!!

       🌸சிவ சிவ🌸
RAJAJI JS.  17.7.17

No comments:

Post a Comment