Tuesday, July 11, 2017

சுஸூகி ரோஷி என்பவர் புகழ் பெற்ற ஜென் மாஸ்டர்.

❤🌹🌹🌹🌹

அவரிடம் பல இளைஞர்கள் பாடம் படித்துவந்தார்கள்.

அந்த இளைஞர் கூட்டத்தில் ஒரு பெண். அவள் தன்னுடைய குருநாதரை நேசிக்கத் தொடங்கிவிட்டாள்.

இது தவறு என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

ஆனாலும் அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

காதல் எண்ணங்கள் அவளைத் துரத்தித் துரத்தி அடித்தன.

ஒருநாள், அவள் தன் குருநாதரைத் தனிமையில் சந்தித்தாள்.

தனது பிரச்னையைச் சொன்னாள். ‘இப்போது நான் என்ன செய்யவேண்டும் குருவே?’ என்று கேட்டாள்.

சுஸூகி ரோஷி சிரித்தார். ‘பெண்ணே, நீ நினைப்பதில் தவறில்லை!’ என்றார்.

‘நம் இருவருக்கும் தேவையான காதல் உன்னிடமே சுரந்துகொண்டிருக்கிறது!’

‘அப்படியானால், நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்வீர்களா?’ ஆவலுடன் கேட்டாள் அந்தப் பெண்.

‘அது முடியாது!’ என்றார் சுஸூகி ரோஷி. ‘காரணம்,

நம் இருவருக்கும் தேவையான கட்டுப்பாடு என்னிடம் சுரந்துகொண்டிருக்கிறது!’🌹🌹🌹🌹

RAJAJI JS 11.7.17

No comments:

Post a Comment