்
#கேள்வி : ஓஷோ , நீங்கள் சில கேள்விகளுக்குப் பலசமயம் பலவிதமாகப் பதில் அளிக்கிறீர்கள் .
அது பலசமயம் முரண்பாடாகவும் இருக்கிறது .
இது எங்களைக் குழப்புகிறது .
இதற்கு என்ன காரணம் ? '
நீங்கள் இந்த உலகத்திலேயே ஒரு மிகுந்த முரண்பட்ட
மனிதர் என்ற கருத்து நிலவுவது உங்களுக்குத் தெரியுமா ?
#ஓஷோ_பதில் :
" ஆமாம் ! எனக்குத் தெரியும் .
அதில் எந்தத் தவறும் இல்லை .
ஒன்றை முதலில் தெரிந்துகொள்ளுங்கள் .
நான் மனதால் பேசுவது இல்லை .
ஆனால் மனத்தைக் கொண்டு பேசுகிறேன் .
அதாவது நான் மனதை ஒரு கருவியாக உபயோகிக்கிறேன் .
என் உயிர்த்தன்மைதான் ( Existence )
உங்களுக்குப் பதில் அளிக்கிறது .
அது ஒரே மாதிரியாக அச்சடித்ததுபோல பதில் கூறாது .
ஏனெனில் அது மாறிக்கொண்டே இருக்கும்
தன்மை படைத்தது .
மனத்தால் பேசும் உங்களால்தான் அப்படி ஒரே மாதிரியாகப் பதில் கூற முடியும் .
நீங்கள் ஞாபகத்தில் வாழ்கிறீர்கள் .
நான் அப்படி இல்லை .
நான் கணத்துக்குக் கணம்
அந்த உயிர்த்தன்மையைப் போல வாழ்கிறேன் .
நான் அப்போதைக்கப்போது செயல்படுபவன் .
இதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை .
நான் முழுமையில் முழுமையாக வாழ்பவன் .
என்னுடைய பேசும் ஒலி
உங்கள் இதயத்தைத் தொடட்டும் என்று கூறுகிறேன்
மூளையை அல்ல .
என் வார்த்தைகள் உங்கள் இதயத்தில்
உங்களை அறியாமலே ஒரு ஆன்மீக மாற்றத்தை உண்டுபண்ணும் .
தேவையானபோது மட்டும்
உங்கள் மூளையால் கேளுங்கள் ! போதும் .
அடுத்து , நான் பேசுவதை வைத்து
நீங்கள் ஒரு நிலையான கருத்தை உண்டாக்கிக் கொள்ளக்கூடாது
என்பதில் நானே உறுதியாக இருக்கிறேன் .
ஏனென்றால் ,
நான் இங்கு இருப்பது உங்கள் தலையைப் பெரிதாக ஆக்க அல்ல ;
மாறாக உங்கள் இதயத்தைப் பெரிதாக்கவே .
இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் !
மனதில் இருந்து செயல்படுவதை விட்டு விட்டு
உங்கள் இருத்தலில் செயல்படுங்கள் .
வாழ்வின் அற்புதம் புரியும்.
No comments:
Post a Comment