Tuesday, October 25, 2016

பட்டினத்தார் சிந்தனை


==================
நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன?நீ மனமே
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?
ஆற்றில் கிடந்தும்துறையறி யாமல் அலைகின்றையே !
*பட்டினத்தார் பாடல்*
திருநீற்றை தவறாது அணிந்தாலும் புனித நீராடினாலும் மனமே மாற்றிபிறக்கும்வழிதெரியாமல் என்ன பயன் அனைத்து நூல்களை கற்றாலும் மந்திரங்கள் பல கற்றாலும் என்ன பயன் உண்மையான பக்தி இல்லாவிட்டால் ஆற்றில் இருந்தும் கரை அருகிலேயே இருந்தும் கரையறியாமல் தேடி அலைகின்றாயே என்று வருந்துகிறார் .

No comments:

Post a Comment