Saturday, March 19, 2016

பயித்தியம் தீர வைத்தியம்-புலிப்பாண

ி

தானென்ற சிறுகீரை வேரைத் தானுந்
தானரைத்து எலுமிச்சங் காய்தான் வீதம்
வானென்ற மூன்று நாளாறு வேளை
வளமாக வெந்நீரிற் கொடுத்துப் பாரு
கோனென்ற ஆறு நாளுப்பாகாது
கொற்றவனே ஏழா நாளெல்லாமாகும்
ஊனென்ற பயித்தியந்தான் தீர்ந்து போகும்
உத்தமனே போகருட கடாட்ச்ந்தானே.(386)

                                 -புலிப்பாணி வைத்தியம் 500
பொருள்:

சிறுகீரை வேரை நன்றாக அரைத்து எலுமிச்சங்காய் அளவு
காலை-மாலையென இரண்டு வேளையும் மூன்று நாட்கள் வெந்நீரில் கலக்கிக்குடித்தால் பயித்தியம் தீர்ந்து போகும்.
மருந்துண்ணும் மூன்று நாளும் மற்றொரு மூன்று நாளுமாக
ஆறு நாட்கள் வரை உப்பிலாமல் கஞ்சி அருந்தவும்பின்னர்
ஏழாவது நாள் முதல் எல்லா வகை உணவுகளையும்
சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

http://sssjna.blogspot.in/2014/02/blog-post_7572.html

No comments:

Post a Comment