நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலறு மாதமாய் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிக் போட்டுடைத் தாண்டி.
விளக்கம்!
பத்து மாதம் தவம் செய்து பெற்ற இந்த மனித உடலை போற்றி பாதுகாக்காது அற்ப சுகங்களுக்கு ஆசை பட்டு மனித உடல் என்னும் தோண்டியை போட்டு உடைக்கின்றாயே. இந்த உடல் இருக்கும்போதே ஆன்மா இறையுடன் கலக்க வழி தேட வேண்டாமா என்று கேட்கிறார் கடுவெளி சித்தர்.
கடுவெளி சித்தர் காஞ்சிபுரத்தில் ஜீவசமாதி அடைந்தார் என்று போகர் அவருடயை பாடலில் இவ்வாரு தெரிவிக்கிறார்.
வேறு விளக்கம்!
ஏழை ஆண்டி ஒருவன் தினசரி பிச்சை எடுத்து உண்பவன் தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனமொன்றில் வித விதமான வண்ண மலர்களை காண்கிறான். நந்தவனத்தின் அருகில் ஒரு குளம் இருப்பதையும் பார்தான் ஆனால் என்ன பயன் குளத்தின் நீரை எடுத்து நந்தவனத்திற்கு பயன்படுத்த முடியவில்லையே என்று நினைத்தான். தனக்கு ஒரு குடம் (தோண்டி) இருந்தால் , அந்த குடத்தை வைத்து குளத்து நீரை தினசரி நந்தவனத்தில் ஊற்றினால், பல மலர்கள் பூக்கும் அந்த மலர்களை விற்று ஒரு மண்டபம் கட்டுவேன் என்றும் அதில் பல ஆண்டிகளை தங்கவைப்பேன் என்றும் கற்பனையில் மிதந்தான்.
பக்கத்து ஊரில் உள்ள குயவனிடம் சென்று தனக்கு ஒரு குடம் தானமாக வேண்டும் என்று கேட்டான் அந்த குயவன் அதற்க்கு இணங்கவில்லை. ஆண்டி பத்து மாதங்கள் அங்கு இருந்து குயவனிடம் மன்றாடினான். குயவனும் மனம் இலகி ஒரு குடத்தை தானமாக கொடுத்தான்.
ஆண்டி தனக்கு தோண்டி கிடைத்த சந்தோசத்தில். தோண்டியை தலையில் வைத்து ஆடாத ஆட்டம்மெல்லாம் ஆடி தோண்டியை கீழே போட்டு உடைத்து விட்டான். பத்து மாதங்கள் மன்றாடி வாங்கியதோண்டியை பத்து நாழிகைகளில் உடைத்து விட்டான்.
சிவாயநம.
Wednesday, May 11, 2016
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment