Thursday, May 19, 2016

மனம் தூய்மையாக

* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும்தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், மனம் பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் நிலை உண்டாகும். இதுவரை அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அன்றாட வாழ்வின் அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும்பலருக்கும் தீமை செய்திருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கை, கால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் நல்லெண்ணத்தை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.
-

No comments:

Post a Comment