ஒரு சிஷ்யன் குருவிடம் தன் சந்தேகத்தை கேட்டான்.
குருவே " வாழ்க்கை இனிமையானதா இல்லை கடுமையானதா?" என்றான்.
அதற்கு அந்த குரு " வாழ்க்கை பூனையின் பற்களைப் போன்றது " என்று பதிலளிக்க சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை.
" என்ன நாம் வாழ்க்கையை பற்றி கேட்டால் இவர் சம்மந்தமில்லாமல் பூனையின் பற்களை பற்றி சொல்கிறாரே! " என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்ற சிஷ்யனிடம் குரு அதனை விளக்கினார்.
ஒரு பூனையின் குட்டியிடம்
" பூனையின் பற்கள் எப்படிப்பட்டது " என்று கேட்டால் " பூனையின் பற்கள் மிக மென்மையானவை, இனிமையானவை " என்று சொல்லும்.
பூனை தன் குட்டிக்கு சிறிதும் வலிக்காதவாரு அக்கறையுடன் அதனை மிகப்பாதுகாப்பாக தன் பற்களால் கவ்விக்கொண்டு போகும்.
அதே ஒரு எலியிடம்
" பூனையின் பற்கள் எப்படிப்பட்டது " என்ற அதே கேள்வியை கேட்டால்
" ஐயோ பூனையின் பற்கள் மிகக்கொடுமையானவை " என்ற பதில்தான் வரும்.
" பூனையின் பற்களை போலத்தான் வாழ்க்கையும்.
அது வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொருத்தே அமையும் " என்று விளக்கினார் அந்த துறவி.
ஒரு ஜென் கதை.
No comments:
Post a Comment