Saturday, February 20, 2016

மகாலட்சுமி சக்கரம்  !!!

Rajaji JS 21.02.2016மகாலட்சுமி சக்கரம்  !!!

சக்கர வழிபாடு மிக சக்தி வாய்ந்தது. எந்த சக்கர வழிபாடு செய்கிறோமோ அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது.

பொருட் செல்வம் வர ஆரம்பித்து விட்டால் இதரச் செல்வங்களும் தானாகவே தேடி வரும் என்பதில் ஐயமில்லை. "ஸர்வ ஸம்பத் ஸம்ருத்யர்த்தம்'' என்ற மந்திரத்தைத் தினந்தோறும் இருபத்தையாயிரம் முறை ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும். அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டுக் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

எத்ருஸா த்ராகீயஸ்யா தரதஸித-நீலோத்பல-ருசா
தலியாம்ஸம் தீ நம ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநே நாயம் தந்யோ பவதி நசதே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர''

இந்த மந்திரத்தை ஜெபித்து மகாலட்சுமியை வணங்கும்போது தேவிக்கு நிவேதனமாக தேன் அல்லது பாயசம் வைத்து வழிபட வேண்டும். தேவியின் கடைக்கண் பார்வைப் பட்டால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும்.
ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல்படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்து விடும்.

இவ்விதம் வருவதற்கு மகாலட்சுமி சக்கரத்தை வைத்துப் பூஜை செய்து வர வேண்டும். செப்புத் தகட்டிலோ, வெள்ளித் தகட்டிலோ அல்லது பஞ்சலோகத் தகட்டிலோ இந்தச் சக்கரத்தைப் பதித்துப் பூஜையறையில் வைத்தும் வணங்கி வரலாம்.

வெள்ளியினால் செய்த தாயத்தினுள்ளோ, தங்கத்தினால் ஆன தாயத்தினுள்ளோ இந்தச் சக்கரம் பாதிக்கப்பட்ட தகட்டை அடைத்துக் கையில் கட்டிக் கொள்ளலாம். நிச்சயமாக நன்மைகள் பெருகவும், நலம் சேரவும் பக்கத் துணையாக விளங்கும்.

RAJAJI JS.  21022016

No comments:

Post a Comment