Sunday, June 11, 2017

வாசி என்றால்என்ன???


வா-என்றால் காற்று
சி-என்றால் நெருப்பு.
சுவாசத்தையும் அதனூடே உள்ள நெருப்பையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசி எனப்படுவதாகும்.
இந்த சுவாசக்காற்றைக் கொண்டு முறையாகவாசிக்கும் பொழுது தச வாயுக்களை சீரமைத்து உடம்பிலுள்ள மனம் ,உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.
வாசி இருப்பிடம்
எல்லோரும் அறிவார் நவ வாசல், அறியாதார் திருவாசல் என்ற பத்தாவது வாசலின் இருப்பிடமான உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனைஅளவேயுள்ள இடுக்கமான ll வழியாக ‘செல்லும் சுவாசத்தின் பெயரே வாசியாகும்.. இந்த சுவாசத்தின் [டெக்னிக்-யுக்தியை] கொண்டு ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்கவல்ல யோகமாகும்.
வெளிசுவாசம் – உள்சுவாசம்
இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக்கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக்கொண்டு சுவாசத்தை கவனியுங்கள்.அப்போதுவெளிசுவாசம் மாற்றப்பட்டுஉள்சுவாசம் வாசிப்பதை உற்று கவனியுங்கள்.
காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினால் சோர்ந்து, பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்தியை மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும்தருவாயில். ஆனவம்,கன்மம்,மாயை,பசி,தாகம்,விருப்பு,வெருப்புகள் பற்றற்ற நிலையில்உள்சுவாசமான [வாசி ] மட்டுமே இயங்கி விடிந்தால் வெளிசுவாசத்திற்கு சக்தியை அளிக்கவல்லதாகிறது.
மாமருந்து
சுவாசத்தை கணக்கறிந்து மேலேற்றிமூலவரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஓங்காரப்பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின்நடுனாடி வழியாக ஓடி பத்தாவதுவாசலின் உச்சியில் கனல் ஆவியில்உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினியாகும்.
மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்பால் ஏதுக்கடி குதம்பாய
------------------[குதம்பை சித்தர்]
நன்றி

No comments:

Post a Comment