Tuesday, October 1, 2019

Be calm. Silence power

*༺♦༻*
*எல்லா சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு~அமைதியாக இரு (பொறுத்திரு)*
*༺♦༻*

ஒரு முறை புத்தர் தனது சிஷ்யர்கள் சிலருடன் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வழியில் ஒரு ஏரி இருந்தது. புத்தர் ஒரு சிஷ்யனிடம், *“எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, ஏரியிலிருந்து பருகக் கொஞ்சம் குடிநீர் கொண்டு வா”* என்று சொன்னார். அந்த சிஷ்யர் தண்ணீர் இருக்கும் இடத்திற்குச் சென்றார்.

*༺♦༻*
அப்பொழுது ஒரு மாட்டு வண்டி அந்த ஏரியைக் கடந்துச் சென்றது. அதன் காரணமாகத் தண்ணீர் மிகவும் கலங்கி இருந்தது. சிஷ்யன் *“அந்த கலங்கியத் தண்ணீரைக் குருவிற்குப் பருக எவ்வாறுக் கொடுப்பது?”* என்று எண்ணினார். புத்தரிடம் *“அந்தத் தண்ணீர் மிகவும் கலங்கி இருக்கிறது. குடிப்பதற்குச் சரியாகாது”* என்று கூறினார்.

*༺♦༻*
அரை மணி நேரம் கடந்ததும், புத்தர் திரும்பவும் அதே சிஷ்யனை ஏரியிலிருந்துத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். சிஷ்யன் திரும்பவும் அங்குச் சென்று பார்த்தப் பொழுது, தண்ணீர்க் கலங்கியேக் காணப்பட்டது. மறுபடியும் விஷயத்தைப் புத்தரிடம் கூறினார்.

*༺♦༻*
புத்தர் மற்றொருமுறை அந்தச் சிஷ்யனை அனுப்பி வைத்தார். இம்முறை சிஷ்யன் சென்றப் பொழுது வண்டல் அடியில் தங்கி, தண்ணீர் சுத்தமாகக் கலங்காமல் இருந்தது. ஆதலால், ஒரு குடத்தில் அந்தத் தண்ணீரை ஏந்தி, புத்தரிடம் கொடுத்தார்.

*༺♦༻*
புத்தர் தண்ணீரைப் பார்த்தார். பிறகு, சிஷ்யனை நோக்கி சொல்லலுற்றார், *“நீ அந்தத் தண்ணீரைச் சுத்தமாக ஆக்குவதற்கு என்னச் செய்தாய் பார்த்தியா?”* நீ அமைதியாக இருந்ததும், வண்டல் அடியில் தேங்கித் தெளிவானத் தண்ணீர்க் கிடைத்தது. உன் *மனதும் அதுப் போன்றது தான். ஏதேனும் சிந்தனையில் கலங்கி இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும். தானாகவேத் தெளிந்து விடும். எந்த முயற்சியும் தேவையில்லை.*

*༺♦༻*
நீதி:

மன நிம்மதி அடைவதுக் கடினமான காரியம் இல்லை. மிக எளிமையானது, ஏனென்றால்……….

*நிம்மதியே நம் ஆத்மாவின் குணம்.*
*༺♦༻༺♦༻*

No comments:

Post a Comment