Tuesday, July 9, 2019

Vethathri thought JULY"9

*வாழ்க்கை மலர்கள்: ஜூலை 9*

*பூஜ்யமும் பூஜ்யரும்*

பூஜ்யம், முழு எண் ஒன்று இருக்குமானால் அது பூஜ்யம் ஒன்று தான். ஏன் என்றால் மற்ற எண்ணெல்லாம் ஒரு பக்கம் ஆரம்பிக்கும். ஒரு பக்கம் முடியும். உருவம் கோணல் மாணலாக இருக்கும். “1” என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், அதற்கு மேல் முனை, கீழ் முனை என்று இரண்டு இருக்கின்றன, “2” என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், முன் முனை இருக்கிறது. பின் முனை இருக்கிறது. மற்ற எண்கள் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் வளைகின்றன. 3, 4, 5, 6, 7, 8, 9, என்று எல்லா எண்களும் கோணல் மாணலாக இருக்கின்றன. ஆனால் பூஜ்ஜியத்தை எடுத்துப் பாருங்கள் “0” அது எங்கே தொடங்குகிறதோ, அங்கே போய்த்தான் முடிகிறது.

பூஜ்ஜியம் தான் முழுமையான எண். மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம். ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணினை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் முன்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10. பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமில்லாததை மதித்து அதற்குப் முன்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகி விட்டது. பூஜ்ஜியத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்ஜியத்தை அலட்சியப்படுத்தி 1ஐ பின்னால் போட்டால் 1இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1]

அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன். யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள், இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களை பூஜ்யர் என்பார்கள்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*

No comments:

Post a Comment