Thursday, January 24, 2019

Karunanichi asset's

[1/24, 8:53 PM] ‪+91 98840 80504‬: நெருப்புடா..🔥

Energy can neither be created nor destroyed; rather, it can only be transformed or transferred from one form to another. இது Law of conservation of energy. சின்ன வயதில் படித்து விட்டு மறந்திருப்போம்.. இல்லை அப்போதே சாய்சில் விட்டிருப்போம்.

இது பணத்துக்கும் பொருந்தும். அது கருப்பு பணமாக இருந்தாலும் சரி. வெளுப்பு பணமாகவும் இருந்தாலும் சரி. பணம் பணமாகவே இருக்கமுடியாது. ஏதோ ரூபத்தில் வெளிப்பட்டுவிடும். தமிழில் சொல்வதானால்.. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.

உதாரணங்களுக்கா நம்மிடம் பஞ்சம்?

மொத்தமாக எத்தனை சொத்துக்கள் எங்கெங்கே இருக்கிறது என்பது தங்கமலை ரகசியத்துக்கு சற்றும் குறைவில்லாத ரகசியம்தான் என்றாலும் சசிகலா, இளவரசி, விவேக், தினகரன், திவாகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தின் சொத்துக்கள் யாரால் அவர்களுக்கு கிடைத்தது என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

வாடகை வீட்டில் இருந்துகொண்டு வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விட்டவர்கள் அண்ணாமலை ரஜினி போல ஒரே பாட்டில் பணக்காரர்களாகிவிடவில்லை. எல்லாம் ஜெயலலிதா என்னும் மகாசக்தியின் கடாட்சம்.

அத்தனை சொத்துக்கள் பற்றியும் தெரியாவிட்டாலும் மிடாஸ் மது ஆலை, கொடநாடு எஸ்டேட், ஜாஸ் சினிமா, ஜெயா டிவி, சிறுதாவூர் பங்களா என்று அவர்கள் முதலீடு செய்துள்ள சொத்து விவரங்கள் நாம் அறிந்ததுதான்.

சசிகலா ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என்று அவரே சொன்னது மட்டுமில்லாமல் முப்பது வருடமாக ஒரே வீட்டில் வசித்தவர். மற்ற சொத்துக்காரராகள் எல்லாம் சசிகலாவின் சொந்தக்காரர்கள்.

இன்னொரு பக்கம் அடையார் ஆலமரம் போல பரந்து விரிந்த கலைஞர் குடும்பம். எத்தனை சொத்துகள் எங்கெங்கே இருக்கின்றன என்று அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. அது தங்கமலை ரகசியம் என்றால் இது பிரபஞ்ச ரகசியம்.

டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை சில வருடங்களுக்கு முன் ஒரு பட்டியலை வெளியிட்டது. எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியவில்லை என்று ஜவுளிக்கடை விளம்பரம் ஒன்றில் வரும். அது போல எதை தனியாக பட்டியல் போடுவது என்று தெரியாததால் பத்திரிகை செய்தியின் இணைப்பை தந்திருக்கிறேன். பார்த்து, படித்து, அதிர்ந்துகொள்ளவும். இது 2011 நிலவரம்.

https://tamil.oneindia.com/news/2011/08/06/pm-shocked-over-karunanidhi-family-property-list-aid0136.html

கருணாநிதி, அவர் மனைவி தயாளு அம்மாள், இணைவி ராஜாதி அம்மாள், மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி அவர்கள் பிள்ளைகள்,மாறன் குடும்பத்தார் என்று குடும்ப சொத்து முழுக்க ரத்தசொந்தங்களிடம். இங்கும் பணம் பலவித முதலீடுகளில்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் பெயரில் மட்டுமே 18 கோடிக்கு சொத்து இருப்பதும்.. ஜெகன் மோகன் ரெட்டி என்னும் முன்னாள் ஆந்திர முதல்வரின் மகனிடம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதும்..

இன்னும் இதே போல தேசமெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள் சரத் பவார், லாலு பிரசாத், முலாயம் சிங்,ப சிதம்பரம் எல்லாரும் தத்தம் சொத்துகளை வாரிசுகள் பெயரில் குவித்து வைத்திருப்பதும்  இது ஏதோ தமிழ் நாட்டின் தலைவிதி என்று மட்டும் எண்ணாமல் நாடு முழுதும் இப்படித்தான் என்று ஆறுதல் பட்டுக்கொள்ள உதவுகிறது.

இவர்களில் சிகரம்.. சொல்லவும் வேண்டுமா? எல்லாம் நம் நேரு குடும்பம்தான். நேரு, இந்திரா, ராஜீவிலிருந்து, சோனியா, ராகுல், பிரியங்கா அவர் கணவர் ராபர்ட் வாதரா என்று அது இன்னொரு தனி ஊழல் உலகம். குபேரன் பெருமாளுக்கு கடன் கொடுத்தால் இவர்கள் அந்த குபேரனுக்கே கடன் கொடுப்பார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றுக்குமுள்ள ஒரே முக்கிய சம்பந்தம்.. ரத்த சம்பந்தம்..பினாமிகளிடம் கொடுத்து வைத்தது போக இவர்களிடமே இத்தனை ஆயிரம் கோடிகள் இருந்தால்.. மொத்தமாக எல்லாவற்றையும் சேர்த்தால் நாமே ஒரு உலகவங்கியை உருவாக்கிவிடலாம்..

இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியை பார்க்கலாம். அவருக்கென்று தனிப்பட்ட குடும்பம் இல்லை. இருப்பது தாயும், உடன் பிறந்தவர்கள் குடும்பம் மட்டுமே. அவர் மனைவியை பிரிந்துவிட்டார் என்று ஊர் வைக்கும் குற்றச்சாட்டை அவர் மனைவி யசோதா பென் வைப்பதில்லை. குழந்தை திருமணம் போன்று நடந்த ஒன்றை தொடர மோடிக்கு விருப்பமில்லததால் இருவரும் எப்போதோ பிரிந்துவிட்டனர்.

ரேபரேலி போல் பெயர் இருப்பதாலோ என்னவோ ரபேலிலும் ஊழல் இருக்கும் என்று எதையோ கண்டுபிடித்து அலறும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அப்படி ஊழல் செய்து பணம் சேர்த்திருந்தால் யாருக்காக, எங்கே சேர்த்து வைத்திருக்கிறார் என்றும் சேர்த்து கண்டுபிடித்து உலகத்துக்கு சொல்லலாமே?

குடும்பம், குட்டி என்று எதுவும் இல்லாமல் அரசியலில் உயர்பதவிக்கு வருபவர்கள் சுயநலம் துறந்து சேவை செய்வர் என்ற நம்பிக்கை மக்களுக்கு பிறக்கும்.அப்படி வந்த ஒரு பொன்னான வாய்ப்பை வீணடித்தவர் ஜெயலலிதா, வீணடித்துக்கொண்டிருப்பவர் மம்தா.

ஆனால் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவர் நரேந்திர மோடி மட்டுமே. அவர் தனக்காகவும், தன் வாரிசுகளுக்காகவும் சொத்து சேர்க்கவேண்டிய அவசியமும் இல்லை. அதனால் அப்படி எதையும் அவர் செய்யவுமில்லை.

கலர் கலராக சட்டை போடுகிறார்.அது மட்டும் தான் அவர் செய்யும் குற்றம். அதுவும் அவர் சம்பாதித்த பணத்தில் வாங்கித்தான் போடுகிறார். ஏன் கண்ணை உறுத்த வேண்டும்? அதையும் துறந்து காவி கட்டிக்கொள்ள அவர் என்ன சந்நியாசியா? ஒரு விதத்தில் சந்நியாசி தான், கர்ம சந்நியாசி. காவி சந்நியாசிகள் நம்மிடம் வேண்டிய அளவு இருக்கிறார்கள்.நமக்கு கர்ம சந்நியாசிகள் தான் வேண்டும்.

முதல்வராக இருந்த போதும், பிரதமராக இப்போதும் அவருக்கு கிடைக்கும் சம்பள பணத்தில் பெரும்பகுதியை அவர் தன்னிடம் வேலைபார்க்கும் எளிய ஊழியர்களுக்கு தான் கொடுத்திருக்கிறார். அவருக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்பட்டு அந்த பணமும் பெண்குழந்தைகள் படிப்பு செலவுக்கு தான் போகிறது.

சட்டசபையில் நுழையும் போதே முதல்வராகவும், நாடாளுமன்றத்தில் நுழையும் போதே பிரதமராகவும் கால் வைத்தவர் மூன்று முறை சுமார் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார், நான்கு வருடங்கள் பிரதமராகவும் இருந்திருக்கிறார். அவர் குடும்ப நிலைமை?

அவரின் ஒரு சகோதரர் மளிகை கடை நடத்துகிறார். ஒரு சகோதரர் ரிட்டையராகி பத்தாயிரம் பென்ஷன் பெற்று வாழ்கிறார். இளைய சகோதரர் மட்டும் கொஞ்சம் வசதி, அரசாங்க கிளார்க். மற்ற குடும்ப உறுப்பினர்களும் அப்படியே.

துர்கா ஸ்டாலினையும், ராஜாத்தி அம்மாளையும் ப்ரதக்ஷிணம் செய்து சீட்டு வாங்கும் உடன்பிறப்புகளை பார்த்த நமக்கு ஒரிஜினல் உடன் பிறப்புகளை அரசியல் பக்கமே சேர்க்காமல் இருப்பது அதிசயமாகத்தான் இருக்கும். பதவி வேண்டாம் குறைந்த பட்சம் அரசின் சலுகை, பணம்? சாதராண மக்களுக்கு கிடைப்பது தான் அவர்களுக்கும்.

கிட்டதட்ட இருபதாண்டுகள் அரசியலில் உச்சத்தில் இருக்கும் ஒருவரின் குடும்பம் மிக மிக சாதாரண நிலையில் இருப்பது அவரின் புடம்போட்டு நேர்மைக்கு நற்சாட்சி பத்திரம். அது மோடி என்னும் தன்னலம் கருதா மனிதராலும், அதே போன்ற எண்ணம் கொண்ட அவர் குடும்பத்தினரால் மட்டுமே செய்ய முடிந்த அதிசயம்.

அவரை நோக்கி ஊழல் குற்றம் சுமத்தும் முப்பது தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் ராகுல், ஸ்டாலின் போன்றோர் இதை எல்லாம் அறிந்தும் மக்களை முட்டாள் என்று நினைத்து ஏமாற்ற பார்ப்பது  மக்களின் அறியாமை மீது வைத்துள்ள அவர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு தவிர வேறு எதுவுமில்லை.

மோடி சொன்னதை செய்யவில்லை என்று எதிரிகள் குற்றம் சொல்லட்டும், பாதகமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் ஓடும் தேனாறும் ஓடும் என்றும் எல்லா அரசியல்வாதிகளையும் போல வாக்குறுதி அளித்துதான் மோடியும் வந்திருக்கிறார்.

உண்மையை சொல்லி ஓட்டு கேட்டால் நாம் போடுவோமா? சொர்க்கம் இறங்கி வந்துவிடவில்லை என்றாலும் அவர் செல்லும் பாதை சரியானது, மாற்றங்களுக்கான விதையை விதைத்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை.

இதில் மாற்று அபிப்பிராயங்கள் இருந்தாலும் அவர் மீது ஊழலின் நிழல் கூட படவில்லை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கை நீட்டுவதனால் முதல் முறை முதல்வரானபோதே நீட்டியிருக்கமாட்டாரா? யாருக்குக்காக அவர் பணத்தை சேர்க்கவேண்டும். அவர் கற்ற ஆன்மிகம் அவரை நெருப்பு போல வைத்திருக்கிறது.

அளவுக்கதிகமாக ஒன்றை அவர் சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்றால் அது கறுப்புப்பணம் வைத்திருக்கும் கயவர்களையும், வரி காட்டாமல் ஏய்க்கும் வியாபாரிகளையும், இந்த தேசத்தை வேரறுக்க காத்திருக்கும் தீவிரவாதிகளையும், அவர்களுக்கு சாமரம் வீரசும் அர்பன் நக்ஸ்லைகளையும் எதிரிகளாக சேர்த்து வைத்திருக்கிறார். அதனை அவர் மேலும் மேலும் சேர்க்க வாழ்த்துவோம்.  

V. வெங்கடேஷ்
சிங்கப்பூர்
[1/24, 8:53 PM] ‪+91 98840 80504‬: பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15லட்சம் கோடி. அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக பொய் கூறினோம். ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே.

நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால் மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள் அவர்களின் அடுத்த நகர்வு என்ன என்பதை கண்காணிக்க தான்.

இந்த உண்மையை வெளிக்கொண்டுவரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகியது.

மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றிவிடுவார்கள்.

அதுமட்டுமல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்தியபணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர். இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது.

இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ளபணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள். ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது. அதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். சற்றும் தாமதிக்காமல் 500,  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டார். வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகம் உள்ளவர் அவர்.

அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால் இந்நேரம் சோமாலியாகவா மாறியிருக்கும்.

ஆக கள்ளப்பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மீண்டும் நாட்டிற்குள் வரும். நாடு வீழ்ச்சி அடையும்.

பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது

ரகுராம்ராஜன்
RBI முன்னாள் கவர்னர்

தமிழனா இருந்தா ஷேர் பண்ணு.

No comments:

Post a Comment