Thursday, January 24, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு.
அரசு ஊழியர்களுக்கு ஓர் அறிவுரை! ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் சம்பளம் என்பதே உங்களுக்கு அதிகம். நீங்க செஞ்சு கழட்டுற வேலைக்கு எண்பதாயிரம், தொண்ணூறாயிரம், ஒரு இலட்சம் என்று சம்பளம் கொடுக்கின்றோம். யாரு வீட்டுப் பணம்டா இதெல்லாம்?  மக்கள் பணம், மக்களின் வரிப்பணம், சாராயக்கடை நடத்தி ஏழைகளின் வயிற்றில் அடித்துப் பிடுங்கிய பணம்.

சம்பளம் போதவில்லையா? அரசாங்க வேலையை வேண்டாம் எனச் சொல்லிவிட்டுப் போய்விடு!
எத்தனையோ தொழிலைச் சொந்தமாகச் செய்யலாம். சம்பளம் கட்டுபடி ஆகவில்லை என நினைப்போர் வேலையை வேண்டாமெனச் சொல்லிவிட்டு வேறு தொழிலுக்கு மாறிக்கொள்ளுங்கள். அரசு வேலையை எதிர்பார்க்காமல் சொந்தத் தொழில் செய்பவர்கள்தான் திறமைசாலிகள். விவசாயம் செய்வதுதான் உயர்வான தொழில்.

சொந்தமா தொழில் செஞ்சு சம்பாதிச்சுப் பாருங்கடா, தினக்கூலி வேலைக்குப் போங்கடா!

குறைந்த சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை, அரசுவேலை கிடைத்தால் போதுமென நினைக்கும் படித்தவர்கள் திறமையானவர்கள் பலகோடி பேர் இருக்கிறார்கள்.

சம்பளம் கட்டுபடி ஆகவில்லையா? அந்த வேலை உனக்கு எதற்கு? வெளியே போய்விடு. கூரைமேல் சோற்றைப் போட்டால் எத்தனையோ காக்கை வரும்.

நாடு நாசமாகப் போனதற்குக் காரணம், விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம், மக்கள் மீதான வரிச்சுமைக்குக் காரணம் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதிய உயர்வே ஆகும். நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் அரசு ஊழியர்கள்தான். அதற்கடுத்துதான் அரசியல்வாதிகள்.

மாதம் 5000 6000 வாங்குர தனியார் பள்ளி மாணவர்கள் சிறப்பாக உள்ளார்கள் 50000 60000 வாங்கும் அரசு பள்ளி மாணவர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது..

மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வாங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள் அநேக  முதியவர்கள் இருக்கிறார்கள் , ஆனால் இவர்களுக்கு ஓய்வு ஊதியம் 20000   முதல் ஆரம்பம் எதற்கு அவ்வளவு ?

தமிழக அரசே அவர்களுக்கு ஊதியம் போதவில்லை என்றால், ஓய்வு ஊதியம் வேண்டும் என்றால் , மாத சம்பளம்  20000 கொடுத்தால் மட்டும்  போதும் ஓய்வு ஊதியம் வேண்டாம் , வேளை செய்ய நாங்கள் தயார் வேளை கொடுக்க அரசு தயாரா ?

No comments:

Post a Comment